Thursday, October 19, 2006

விடுகதை!

நேற்று என்பது
பழங்கதை!
நாளை என்பது
விடுகதை!
விடை
நாளை மறுநாள்
உயிரோடிருந்தால் தெரியும்!
வாழ்க்கை என்பது
புதுக்கதை!
வாசிக்க வாழ்நாள் தேவை!

இதயம் விடுதலையாகுமோ!

தேன்கூடு அக்டோபர் மாத போட்டிக்கான ஆக்கம்(இப்படிலாம் வேற விளம்பரம் போடனுமா??!!)


மொட்டு மலர்ந்தால்
மறைந்திருக்கும்
மணம் விடுதலையாகும்!
மனம் மலர்ந்தால்
கட்டவிழும்
கவிதை விடுதலையாகும்!
கனவு மலர்ந்தால்
மனக்கவலை விடுதலையாகும்!
ஆனால்
காதல் மலர்ந்தால் மட்டும்
இதயம் சிறைப்படுவதேன்!

Wednesday, October 18, 2006

உயிர்த்துளி!

மரத்தின் வேர்கள்
மண்ணில்
மனதின் வேதனை
என் கண்ணில்!
உருகும் உயிரின்
ஒரு துளி
உறைந்து நின்றது
விழியோரம்
அது காற்றில்
கரையும் முன்னே
காண வருவாயோ
என் கண்ணே!

Tuesday, October 10, 2006

சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகள்!

சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகள்!

கொசுக்கடி தாங்காமல் அர்த்த ராத்திரியில் என் கவிதை உள்ளம் விழித்துக்கொண்டதால் , கடித்த கொசுவை பழி வாங்கும் வன்மம் என் மனதில் கொழுந்து விட்டு எரிந்ததன் விளைவே இந்த சிக்குன் குன்யா கவிதைகள்.


கொசுவை பழிவாங்குறதா சொல்லிட்டு எங்களை ஏன்யா பழி வாங்குறனு புலம்புறது கேட்கிறது என்ன பண்றது கொசுவுக்கு கடிக்க மட்டும் தான் தெரியும் படிக்க தெரியாதே.... உங்களுக்கு படிக்க தெரியுமே... ஹே... ஹே ஹே.
கொசு கடியை விட இந்த வவ்வால் கடி பெரும் கடியா இருக்கேனு திட்டாம ,சிக்குன் குன்யா சிறப்பு கவிதைகளைப்படித்து விட்டு சிக்கனமா ரெண்டு வரி பின்னூட்டமாவது போடுங்க மகா ஜனங்களே!.
********************************************************************

* நாட்டில பாதி பேரு ஆண்யா

பெண்கள் தலைல இருக்கு பேன்யா

கொசு கடிச்சா எல்லாருக்கும் சிக்குன் குன்யா..

இது ஏன்யா?

******************************

* குடிச்சா கிக் தருவது

'ரம்'யா

கொசு கடிச்சா வருவது

சிக்குன் குன்யா!

*****************************
* சிக்குனு உடைப்போட்டா

அது டென்னிஸ் சான்யா

பக்குனு கொசு கடிச்சா

அது சிக்குன் குன்யா!

****************************
* பெண் டைகர் போல

ஏஸ் அடிச்சா

அது டென்னிஸ் சான்யா!

ஏடிஸ் டைகரிஸ்

பெண் கொசு கடிச்சா

அது சிக்குன் குன்யா!

*****************************

* சச்சின் டெண்டுல்கர் தூக்கி அடிச்சா

வரும் சிக்ஸ் ரன்யா!

கொசு ஓங்கி கடிச்சா

வரும் சிக்குன் குன்யா!

*****************************

* பார்ல கடிச்சுக்க வச்சா

போன்லெஸ்

சிக்கன் துன்யா!

போன்லெஸ் கொசு

கடிச்சு வச்சா

வரும் சிக்குன் குன்யா!

*****************************

* அரட்டை அரங்கம்

நடத்தியது விசு

கொரட்டை விடும் மனிதனை

கடிப்பது கொசு!

Monday, October 09, 2006

எங்கே எந்தன் வெண்ணிலா!...

காற்று வெளியில்

கட்டி வைத்தேன்

கதவில்லா மேகக்கோட்டை!

மின்னல் கொடியில் தோரணம் கட்டி

மினுக்கும் நட்சத்திர விளக்கமைத்து

நாட்தோறும் காத்திருந்தேன்

விளக்கேற்ற வருமா எந்தன்

வெண்ணிலா என்று!

எங்கே என் முகம்!

கொஞ்சம் பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது இம்சைகள் துவங்கிவிட்டது இதோ முதல் போனி! அனுபவி ராஜா அனுபவி...

கனவில் ஒரு முகம்,

நினைவில் மறு முகம்,

நிஜத்தில் வேறு முகம்,

நீ காண்பதொன்று,

நான் காண்பதொன்று,

யார் காண்பது என் முகம்?

எனக்கே தெரியவில்லை

எவருக்கேனும் தெரிந்தால் கூறுங்களேன்!

மீண்டும் வவ்வால் அவதரித்து விட்டான்



மீண்டும் வவ்வால் அவதரித்து விட்டான்!

வணக்கம் நண்பர்களே!

நகர்ப்புரத்தில் சுற்றுப்புறம் மாசடைந்துவிட்டதால் ஒரு மாறுதல் வேண்டி சிறிது காலம் வனவாசத்திற்கு சென்று விட்டேன்.ஆனால் வவ்வாலை என் நேசமிகு வலைஞர்கள் வலை வீசி தேடி வருவதாகவும், வவ்வால் இல்லாமல் வலைப்பதிவுலகம் சுரத்தின்றி தொய்ந்து விட்டது விரைந்து வந்து எங்களை எல்லாம் காத்தருள வேண்டும் என்று கைப்பேசி குறும் செய்தி(எஸ்.எம்.எஸ்),மின்னஞ்சல், தொலை ஒளி நகல் (ஃபேக்ஸ்),தந்தி, அஞ்சல் அட்டை போன்ற பலவற்றின் வாயிலாகவும் விடாத அழைப்புகள் வந்தமையால் அன்பர்களின் அழைப்பிற்கு செவி மடுத்து, என் வனவாசத்தை பாதியில் முடித்துக்கொண்டு மீண்டும் தமிழை காக்க ஓடொடி வந்து விட்டேன்.

என் உடல் பொருள் ஆவி எல்லாம் அர்ப்பணித்து தொய்ந்து விட்ட வலைப்பதிவு உலகிற்கு முட்டு கொடுத்து நிமிர்த்துவதே எனது தலையாயப் பணி என்பத்தை தட்டச்சு விசைப்பலகை மீது ஓங்கி அறைந்து உறுதி கூறிக்கொள்கிறேன்.

அவ்வப்போது அஞ்சாத வாசம் சென்றாலும் எப்பொழுதெல்லாம் தமிழுக்கு தொய்வு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் வவ்வால் அவதரிப்பான்!(தலைமறைவு ஆனதும் இல்லாமல் . இதுல ஓவர் அலம்பல் வேறயா அடங்குய்யா)
சரி இத்தோட நிப்பாட்டிப்போம் இல்லைனா நம்ம பதிவ படிக்கிற ஒண்ணு ரண்டு மக்களும் ஓடிப்போய்டுவாங்க ..ஹே ஹெ..ஹே மீண்டும் வவ்வால் இம்சைகள் தொடறும்...