Thursday, May 04, 2006

தனியே.... தன்னம் தனியே!

யாரும் அற்ற வனாந்திரத்திலும்

காட்டுப் பூக்கள் பூக்கின்றன பறிப்பார் யாரோ!

ஒரு வேளை வண்ணத்துப்பூச்சிகளின் வருகைக்கோ

யாரும் இல்லா உலகில் என் இதயமும்

இசைக்கின்றது எண்ணத்தின் ராகங்களை

இதயவீணையின் நாதம் கேட்க இதயமேதுமில்லை

காட்டுப் பூக்களுக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் வரவுண்டு

எனக்கென்று என்ன உறவுண்டு இவ்வுலகில்?