Wednesday, May 10, 2006

அந்தி மழை!



கோடை மழை அந்தியில் பொழிகிறது

வரண்ட நிலத்தில் நீர்த் தாரைகள்

ஓடி மறைகிறது புழுதி வாசனையை கிளப்பி!

வெளிறிய வானவில்லில் மிச்சமிருக்கும் வர்ணத்தை போல

என்னுள் ஒட்டிகிடக்கும் உன்னுடைய நினைவுகள்

முளை விடும் விதை என முகிழ்த்து

விருட்சம் என வளர்ந்து விட்டது

வானவில் மறையும் முன்னே!

விலகி சென்ற பிறகும் விலக மறுக்கும் நினைவுகள்

துடுப்பற்ற படகைப் போல

நீரோட்டத்தின் திசையில் செல்கிறது நதியில்!

நாணல்கள் மட்டும் கரையோரம்!

மீட்சி!


கனவு வெள்ளத்தில் மூழ்கி

ஸ்வாசம் இழந்தேன்!

உன் நினைவு துளிகளே

மீட்டெடுத்தது என் மூச்சை!