Thursday, June 08, 2006

சாதனை இளைஞர் அப்துல் கலாம்!



இந்திய விமான படையின் சுகோய்- 30.எம்.கே.ஐ என்ற ரஷ்ய தயாரிப்பு மீ ஒலி வேகத்தில்(super sonic fighter jet) பறக்கும் யுத்த விமானத்தில் இந்திய அதிபர் திரு."அவுல் பக்கீர் ஜெயினுலாபிதின் அப்துல் கலாம்" 30 நிமிடங்கள் பறந்து சாதனைப்படைத்துள்ளார்.யுத்த விமானத்தில் பறந்த முதலாவது இந்திய அதிபர் இவரே,இதற்கு முன் நீர் மூழ்கி கப்பலில் 3 மணி நேரம் பிரயாணம் செய்தும் சாதனை படைத்துள்ளார்! வித்தியாசமான ஏவுகனை விஞ்ஞானி நம் நாட்டின் அதிபராக இருப்பது நமக்கெல்லாம் பெருமை தானே!

புனேயில் உள்ள இந்திய விமான படை விமான தளத்தில் இருந்து விங்க் கமாண்டர் அஜய் ரத்தோர் செலுத்த 30 நிமிடங்கள் மணிக்கு 1500 கிலோ மீட்டர் வேகத்தில் கலாம் பயணம் செய்த விமானம் பறந்துள்ளது.திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு 75 வயது ஆகிறது இந்த வயதில் இது ஒரு மகத்தான சாதனையே ,எனவே இளைஞர்கள் எத்தனை சாதிக்கலாம் என எண்ணிப்பார்க்க வேண்டும்! நமது அதிபரின் விருப்பமும் அதுவே இளைஞர்கள் அரிய சாகசம் நிகழ்த்த வேண்டும் ,உயர் தொழில் நுட்பங்களில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என மக்களுக்கு குறிப்பாக இலைஞர்களுக்கு செய்தி விடுத்துள்ளார்!

திரு. அப்துல் கலாம் விஞ்ஞானி மட்டும் அல்ல சிறந்த சிந்தனையாளரும் கூட அவரது அக்னி சிறகுகள்,இந்தியா விஷன் 2020 போன்ற நூல்கள் விற்பனையில் சாதனைப்படைத்தவை!