Thursday, July 19, 2007

நினைவிருக்கும் வரை...

என் நினைவுகளின்

ஆக்டோபஸ் கரங்கள்

கடந்த காலம் ,

நிகழ் காலம்

எதிர்காலம் என

எல்லா திசைகளிலும்

துழாவி என் இருப்பை

நினைவுருத்துகிறது

என் விருப்பமின்றி!

என்னையே தொலைத்த தருணங்களிலும்

நான் என்ற

என் நினைவைத்தொலைத்ததில்லை!

கசப்போ ,இனிப்போ எனது எண்ணங்களின் தொகுப்பே

என்னை தாங்கி நிற்கும் வேர்கள்!

என்றாவது என் நினைவுகள்

மரிக்கலாம்

எனவே என் நினைவுத்தடங்களை

விட்டு செல்கிறேன் இவ்விடம்!

2 comments:

பத்மா said...

nice nice .puhunthu purapadreenga pola.keep it up.nanum oru puthu kavithai ezhuthiirukiren.ore thagaval maiyyama irukku blog .nice itk

வவ்வால் said...

வாங்க பத்மா!

இருட்டிலும் புகுந்து புறப்படும் வவ்வால்! உங்க கவிதைலாம் உலகதரத்தில் இருக்குமே!

வருகைக்கு நன்றி மீண்டும் வருக!