Friday, August 24, 2007

சொந்த வீட்டில் சுவர் ஏறிக்குதிக்கும் செந்தழல்...

திருடப் போறவன் கூட அடுத்த வீட்டுக்கு தான் சுவர் ஏறிக்குதித்து போவான் , ஆனால் சொந்த வீட்டுக்கு போகவே சுவர் ஏறிக்குதிக்கும் ஒரு துர்பாக்யசாலி பற்றி அறிவீர்களா அன்பர்களே, அப்படி ஒருவர் இருக்கிறார் அவர் வேறு யாரும் அல்ல தென் கொரிய புகழ் மொக்கை மகாராசா செந்தழல் ரவி தான் ....

பாருங்கள் அவர் வீட்டில் அவர் சுவர் ஏறிக்குதித்து கள்ளத்தனமாக புகுவதை...

அவர் வலைப்பதிவில் இருந்து எடுக்கப்பட்ட ஆதாரம்:
//
  • என்ன ரவி, நல்லாதானே இருந்தீங்க? ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயி ஃபுல் செக் அப் பண்ணிக்கோங்க. (அந்த ஃபுல் இல்ல)

    By <நாகு (Nagu)>, at Thursday, August 23, 2007


  • இதுக் கூட நல்லாவே இருக்குது உங்களுக்கு :-). அப்படியே அந்த பஞ்சாமிருதத்தை பார்சல் செய்து எங்க ஊருக்கு அனுப்பி வையுங்க. எங்க ஊருல முடி கொட்டுற பிரச்சனை அதிகம் அதை வச்சி சமாளிச்சிக்கிறோம் :-)

    By <ஜெஸிலா>, at Thursday, August 23, 2007


  • இதெல்லாம் ஓவரோ ஓவர், ஏன் கலைஞர் கோபால புரம் கூப்பிடலையா?

    mmmmhum...

    உங்க உடம்பில ஒரு சுகர் மில் இருக்குனு இப்போ தான் பதிவில பார்த்தேன்(உண்மையா அது, உங்களை எல்லாம் நம்பவே முடியலை :-(() ,அதான் பஞ்சாமிர்தம் கூட பாய்சன் போல இருந்து இருக்கு !

    Its True Vavvaal....

    By <Anonymous>, at Friday, August 24, 2007


  • ///அப்பு !
    அற்புதமா இருக்குது. ஆச்சிரமம் போட்டால்; அனுபவிச்சு அள்ளலாம். ///

    can you take care france branch ???

    Ravi

    By <Anonymous>, at Friday, August 24, 2007


  • ///என்ன ரவி, நல்லாதானே இருந்தீங்க? ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயி ஃபுல் செக் அப் பண்ணிக்கோங்க. (அந்த ஃபுல் இல்ல) ///

    vanga nagu...i am going this week end to take gul.test

    By <Anonymous>, at Friday, August 24, 2007


  • ////இதுக் கூட நல்லாவே இருக்குது உங்களுக்கு :-). அப்படியே அந்த பஞ்சாமிருதத்தை பார்சல் செய்து எங்க ஊருக்கு அனுப்பி வையுங்க. எங்க ஊருல முடி கொட்டுற பிரச்சனை அதிகம் அதை வச்சி சமாளிச்சிக்கிறோம் :-) ////

    vanga Jesi....First time comment podereenga pola...good...

    ok i will send you that panjamirtham...give me the address hahaha

    By <Anonymous>, at Friday, August 24, 2007

  • //
செந்தழல் அவர் பதிவில் அவருக்கு வரும் பின்னூட்டத்திற்கும் கூட அனானி பதில் கொடுத்துள்ள அவலத்தை என்னவென்று சொல்வது ... என்ன கொடுமை .... செந்தழல்!

தத்துவம்: அதிகமா மொக்கை போட்டா ஆண்டவன் ஆரம்பத்தில நிறைய பின்னூட்டம் கொடுப்பான் ... ஆனா கடைசில கை விட்ருவான் , நல்லப்பதிவ போட்டா ஆரம்பத்தில பின்னூட்டம் தர மாட்டான் , கடைசில கை கொடுப்பான்!

பின்குறிப்பு: இது சும்மா தமாசு கண்ணா தமாசு!

அரசியல் சதுரங்கம்!


சேலம் ரயில்வே கோட்டம் அமையும் வரை ,நாளை முதல் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் ரயில்களை இரவுபகலாக மறியல் செய்யப்போவதாக வீரப்பாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார். இது தன்னிச்சையான ஒன்றாக இருக்க முடியாது கட்சி தலைமை உத்தரவிட்ட பின்னரே சொல்லி இருப்பார்.

இத்தனை நாளாக இல்லாமல் இப்போது ஏன் இந்த திடீர் வேகம்? கூட்டணிக்குள் இருந்து கொண்டே தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் இராமதாசின் கட்சியை சேர்ந்த வேலு தான் ரெயில்வே இணையமைச்சர். இப்படி போராட்டம் நடத்துவதன் மூலம் ராமாதாசிற்கு எரிச்சல் ஊட்டும் சாதுர்யமாக கூட இருக்கலாம்.

இராம தாசு அளித்த மருந்தினையே கலைஞர் அவருக்கு திருப்பி தருகிறார் போலும்.இதன் மூலம் இணையமச்சர் வைத்து கொண்டே ஒரு ரயில்வே கோட்டம் கூட வாங்கி தரமுடியவில்லை என வெளிச்சம் போட்டு காட்டுகிறார் சாணக்கியர் கலைஞர்! தமிழக அரசினை விமர்சித்தது போல் , ஏன் மத்தியில் கேட்கவில்லை என்று கேட்காமல் கேட்கிறார்!

இரண்டு கட்சிகளும் மத்தியில் கூட்டணியில் உள்ளன , ரயில் கோட்ட விவகாரத்தில் ராமதாசர் சத்தம் காட்டாமல் இருக்கும் போது , தி.மு.க சார்பில் போராடுவதால் , இது நாள் வரை மக்கள் நலனுக்காக ஆளுங்கட்சியை விமர்சித்தேன் என்று அவர் சொல்லியது தவறு என்றும் காட்ட வசதியாகப்போய்விட்டது கலைஞருக்கு.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பார்க்கிறார் கலைஞர்!இது நாள் வரை தடுப்பாட்டம் ஆடியவர் அடித்து ஆடப் பார்க்கிறார். என்ன விளைவுகள் வரும் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

ஆனால் இதில் மகா கடுப்பு "பனம் கொட்டை தலையன்" லாலுவின் போக்கு தான், நிர்வாக ரீதியாக செய்யப்படும் ரயில்வேயின் உள்விவகாரம் இது , எற்கனவே அறிவிப்பும் செய்த ஒன்று, அதற்கும் பிறகும் கேரளாவும் , தமிழ் நாடும் பேசித்தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இப்படி ஏற்கனவே எத்தனையோ கோட்டங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏதோ புதிதாக செய்வது போல ஏன் இந்த தயக்கம்.இவரை எல்லாம் நிர்வாக இயல் தந்தை என அதற்குள் மீடியாக்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது.