Thursday, March 27, 2008

என்னக்கொடுமை சார் இது!

சில சம்பவங்களை பார்க்கும் போதோ, சில செய்திகளை படிக்கும் போதோ ரொம்ப கொடுமையா இருக்கும்! அப்படி இந்த வாரம் செய்திகளில் கூத்தாடிய சில கொடுமைகளை பார்த்த போது என்னக்கொடுமை சார் இதுனு தான் சொல்ல தோன்றியது, என் கண்ணில் சிக்கிய சில கொடுமை பட்டியல்!

கொடுமை-1

ரிலையன்ஸ் மூன்றில் இரண்டு பகுதி பெட்ரோல் விற்பனை நிலையங்களை வரும் ஆறு மாத காலத்தில் மூடப்போகிறது என்று அறிவித்துள்ளது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் சர்வதேச கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப விற்கப்படவில்லை, அரசு சார் நிறுவனங்கள் விலைக்குறைத்து விற்கின்றன, ஏற்படும் இழப்புக்கு அரசு அவர்களுக்கு மானியம் தருகின்றது, ஆனால் தனியார்கள் சந்தை விலைக்கு விற்க வேண்டியது இருக்கு , அது இந்தியாவில் மற்ற அரசு விற்பனையாளர்களை விட கூடுதல் விலையாக இருப்பதால் விற்பனை சரிவு ஏற்பட்டு நட்டம் ஏற்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் விற்பனை போட்டியில் அரசுக்கும் தனியாருக்கும் சம விகிதம் இல்லை, அவர்களுக்கு மானிய சலுகை இருக்கு அதனால் எங்களால் போட்டிப்போட இயலவில்லை, எங்களுக்கும் மானியம் அளித்தால் போட்டி சமச்சீராக இருக்கும்,அல்லது அவர்களுக்கு மானியத்தை நிறுத்தி சந்தை விலைக்கு ஏற்ப விற்க செய்ய வேண்டும், அப்போது தான் அழகான வியாபார நடைமுற ஏற்படும் என்று அரிய கருத்தினையும் சொல்லி இருக்கிறார்கள்.

இதான் எனக்கு புரியவில்லை, அரசு நிறுவனங்கள் மக்கள் பணத்தால் நடத்தப்படுகிறது, மானியம் பெறும் அந்த நிறுவனங்களின் லாபம் மீண்டும் மக்கள் பணிக்காக செலவிடப்படுகிறது. எனவே அரசு மானியம் அளித்தால் அது மக்கள் நன்மைக்காக தானே.

ஆனால் தனியாருக்கு மானியம் அளித்து அவர்களுக்கு கிடைக்கும் லாபத்தினை எடுத்து மக்கள் பணிக்கு செலவிடப்போகிறார்களா இந்த தனியார்கள்.இல்லையே அவங்க குடும்பத்தினர் மட்டுமே அனுபவிப்பார்கள் , அதுக்கு எதுக்கு மானியம் தரனும் தனியாருக்கு.

மானியம் அரசு நிறுவனங்களுக்கு தருவதால் , குறைந்த விலையில் விற்கிறாங்க, மக்கள் அதை தான் வாங்கிறாங்க எங்களுக்கு விற்பனைப்பாதிக்குதுனு இப்போ சொல்றவங்க, ஆரம்பத்தில் அரசு மட்டும் விற்பனை செய்துக்கொண்டு இருந்தப்போது ஏன் எங்களுக்கும் விற்பனை செய்ய அனுமதிக்கனும் போய் கேட்டாங்க, அப்படிக்கேட்கும் போதே ஆரம்பத்தில இருந்தே அரசு சார் நிறுவனங்கள் மானியம் பெற்றுத்தானே விற்பனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியாதா?

இப்போ அரசு பெட்ரோலிய நிறுவனங்கள் குறைந்த விலைக்கு விற்பது தப்பு அதுக்கு அரசே உதவி செய்வதால் "fair trade practice " செய்ய முடியலைனு புலம்புறாங்களே,

தனியார் விமான நிறுவனங்கள் ஆரம்பித்ததும், ஜெட், சஹாரா, போன்றவை சில இருக்கைகளை மட்டும் ஒதுக்கி 1 ரூபாய்க்கு கூட பறக்கலாம் , குறைந்த விலை பயணச்சேவைனு , என்னமோ முழுக்க முழுக்க குறைந்த கட்டணம் என்பது போல விளம்பரம் செய்து அரசு விமான சேவைகளுக்கு போட்டிக்கொடுக்கலையா? அப்போ அரசு விமான நிறுவனங்கள் ஒரு நியாமான கட்டணம் தான் நிர்ணயிக்கணும் இப்படிலாம் செய்யக்கூடாதுனு சொன்னா என்ன சொல்லி இருப்பாங்க இவங்க, முடின்சா நீங்களும் விலையைக்குறைத்து போட்டிக்கு வாங்க இல்லைனா மூடிக்கிட்டு போங்கனு சொல்லி இருக்க மாட்டாங்களா?

இப்படியே போனா , இவர்களும் எங்களுக்கும் மானியம் வேண்டும் என்பார்கள்.


* அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பதால் தனியார் மருத்துவ மனைக்குலாம் கூட்டமே வரலை, நாங்க மருத்துவர்களுக்கு சம்பளம், இன்ன பிற செலவுகள் எல்லாம் இருக்கு, அதை சமாளிச்சு நாங்களும் தொழில் செய்யனும் , எனவே அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு அரசே சம்பளம் தராப்போல எங்க தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கும் சம்பளம் தரணும்.

இல்லைனா அரசும் எங்களைப்போல கட்டணம் வசூலிச்சு ஒரு "fair trade practice " நடத்த வழி செய்யணும்னு கேட்பாங்க போல இருக்கு!

*அரசுப்பள்ளியில் இலவச கல்வித்தருவதால் எங்கள் கல்வித்தொழில் பாதிக்குது அரசு பள்ளியிலும் கட்டணம் வாங்கு, இல்லைனா எங்களுக்கு மானியம் தா என்று தனியார் பள்ளி நடத்துறவங்களும் கேட்பாங்க!

*அரசு பேருந்துகளில் குறைவா கட்டணம் இருப்பதால், எங்களுக்கு தொழில் பாதிக்குது என தனியார் பேருந்து அதிபர்கள் மானியம் கேட்பார்கள்!

என்ன கொடுமை ...சார் இது!

கொடுமை -2

வர்த்தக துறை அமைச்சகம் தற்போது ஒரு உத்தரவு போட்டு இருக்கு பகுதி -15 இல் உள்ளப்பொருட்களை ஏற்றுமதி செய்ய தடைனு அதுல சொல்லி இருக்காங்க,அந்த பகுதி -15 இல் என்ன பொருட்கள் இருக்குனா சமையல் எண்ணைகள் இருக்கு. இதன் மூலம் சமையல் எண்ணைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. இப்படி அறிவிக்க காரணம் உள்நாட்டில் சமையல் எண்ணைக்கு அதிக தேவை இருக்குனு சொல்றாங்க , சரி நல்ல காரணமாத்தானே இருக்குனு நினைச்சா, ஆமணக்கு எண்ணை உற்பத்தியாளர்கள் கோவப்படுறாங்க, ஏன்னு பார்த்தா ஆமணக்கு எண்ணையும் ஏற்றுமதி செய்யக்கூடாதுனு தடை பண்றாங்களாம் , பகுதி -15 இல் பட்டியலிடப்பட்ட எண்ணைகளில் ஆமணக்கு எண்ணையும் இருக்கு அதனால் அதனை ஏற்றுமதிக்கு அனுமதிக்க முடியாதுனு சொல்லிட்டாங்க.

ஆமணக்கு எண்ணைல சமைக்க முடியுமா அதை ஏன் சமையல் எண்ணைல போய் சேர்த்தாங்க, அதை "industrial oil" அப்படினுத்தான் சொல்றாங்க,அதை ஏறுமதி செய்வதும் பெயிண்ட், வார்னிஷ், லுப்ரிகேஷன், எரிபொருள் ஆகிய பயன்ப்பாட்டுக்கு தான்.வருடத்திற்கு 800 கோடி மதிப்புக்கு இந்தியாவில இருந்து ஆமணக்கு எண்ணை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகுதாம். சமையல் எண்ணைக்கு தடைப்போட போய் எங்க பொழப்பு போச்சேனு ஆமணக்கு ஏற்றுமதியாளர்கள் பொலம்புறாங்களாம்!

என்னக்கொடுமை ...சார் இது!

கொடுமை-3

காரைக்குடியை சேர்ந்த 64 வயது இளைஞர்?! நாராயணன் ஒரு விவசாயி இவரது 60 செண்ட் நிலத்திற்கு பட்டா கேட்டு 20 ஆண்டுகளாக போராடி வருகிறாராம், இது வரைக்கும் கொடுத்தப்பாடில்லை, முதல்வர் வரைக்கும் புகார் கொடுத்துப்பார்த்தும் வழக்கம் போலவே பலன் எதுவும் இல்லையாம், எனவே முதல்வர் கோட்டைக்கு வரும் போது தான் கட்டிய வேட்டியை திடீர் என உருவி முதல்வர் கார் மீது வீசி தனது எதிர்ப்பைக்காட்டியுள்ளார். அவரைக்காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்களாம்.

பதவி தோளில் போட்டுள்ள துண்டு போன்றது , சுயமரியாதை வேட்டிப்போன்றது, துண்டை இழந்தாலும் வேட்டியை இழக்க மாட்டோம் என்று கலைஞர் அடிக்கடி சொல்வார், அதனால் தானோ என்னவோ தனது எதிர்ப்பை நாராயணன் வேட்டி உருவி எறிந்து காட்டி விட்டாரோ?

என்னக்கொடுமை ...சார் இது!

கொடுமை-4

இது ஒரு தமிழ் மணக்கொடுமை, லக்கி லுக் என்ற பிரபல கும்பி /கும்மி பதிவரை தமிழ்மணத்திலிருந்து அலேக்காக தூக்கிட்டாங்களாம், ஏன் என்று பார்த்தால் அது ஒரு சங்கிலித்தொடர் வினையா இருக்கு, ஒரு அம்மணி முன்னர் எல்லாம் யோனி பிரசங்கம் அவர்கள் பதிவில் செய்துக்கொண்டிருந்தாங்க, அவங்களுக்கும் பிரபல "மாட்ரிக்ஸ்"பதிவர் பெயரிலிக்கும் தற்காலமா ஒரு சொற்போர்/ மற்போர் நடந்து வந்தது , பலருக்கும் அது ஒரு நல்லப்பொழுது போக்காக இருந்தது என்பது தனிக்கதை! அதுக்கும் லக்கி ஒரு கை கொடுத்துள்ளார், அம்மணி சார்பாத்தான்.

இப்படி இருக்கையில் அம்மணி பதிவை அலேக்கா கிரேன் வைத்து தூக்கிட்டாங்க , அதுக்கும் லக்கி அம்மணி சார்பா ஆதரவு தெரிவித்துள்ளதால் தான் லக்கிக்கும் "தூக்கு" என்று "நைற் ஆந்தை" செய்தி வாசித்தார்.

அம்மணி பதிவில் கோரமான வார்த்தை தாண்டவம் நடந்தபோது எல்லாம் பொது வெளியில் எழுத்து நாகரீகம் எதிர்ப்பார்த்த பதிவர்கள் சிலர் பதிவை தூக்க சொல்லி பிராது கொடுத்தாங்க ஆனால் அப்போதெல்லாம் நீதி தேவன் விடுப்பில் இருந்தார் போல பதிவை தூக்க காணோம், இப்போ திடீர் என விழிப்பு வந்து தமிழ்மண சட்ட திட்டங்களின் படி தூக்கிட்டதா ஓலை அனுப்பி இருக்காங்க. இப்போ மட்டும் "சட்டம் தன் கடமையை "செய்ய பாய்ந்த காரணம் மேட்ரிக்ஸ் பதிவர் பெயரிலியுடனான சொற்போர் தான் என்று சொல்கிறாங்க.

பலான பலான புகார்கள் வந்தபோது செய்திருந்தா பிராது கொடுத்த பதிவர்கள் இதனை கண்டிக்க செய்த செயல்னு சந்தோஷப்பட்டு இருப்பாங்க, இப்போ இது ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காக தண்டிக்க செய்த செயலோனு சந்தேகப்படுறாங்களே. இப்போ மட்டும் ஏன் இந்த திடீர் சுறு சுறுப்பு, ஒரு வேளை அரசன் அன்று கொல்வான் தமிழ்மண தெய்வம் நின்று கொல்லும்னு சொல்லாம சொல்றாங்களா?

தெய்வமே நீங்க எங்கேயோ போய்ட்டிங்க :-))

என்னக்கொடுமை ...சார் இது!

Tuesday, March 25, 2008

sensex- பங்கு சந்தை பரமபத விளையாட்டு!

  சென்செக்ஸ் ஒருப்பார்வைஎன்ற பதிவில் பங்கு சந்தை குறியீடு பற்றி சொல்லி இருந்தேன்,பின்னர் ஏன் பங்கு சந்தை அடிக்கடி, சரிகிறது, நிமிர்கிறது, ஊசலாடுகிறது என்பதையும் சொல்ல சொல்லி மக்கள் கேட்டாங்க, சொல்வதாக சொல்லி இருந்தேன், நாம் ஒன்றும் இதில் பழம் தின்று கொட்டைப்போட்ட ஆள் அல்ல என்பதால் சொல்வது சரியாக வருமா என்று வாளாவிருந்தேன், தமிழ் படிக்க விருப்பம் இல்லாதவங்க எல்லாம் வீட்டில் "தமிழ் பேசியே" தமிழை வளர்க்கிற காலத்தில பங்கு சந்தை வேடிக்கைப்பார்க்கிற நாம் ஏன் பொருளாதார அறிவு வளர்க்க கூடாதுனு துணிச்சலா அடுத்த பாகம் போட வந்தாச்சு, இப்போவே சொல்லிடுறேன் பங்குசந்தையினை அவதனிப்பதன் மூலம் நான் உணர்ந்த என்னோட சுய அறிதலின் விளைவாக சொல்லும் கருத்து(கூகிள் வழி பல தளங்களைப்பார்த்தூ தான்), பெரிய நிபுணத்துவம் எல்லாம் இருக்காது., ஒரு வழி போக்கன் பாணியில் இருக்கும்!


பங்கு சந்தை சரியும் போதெல்லாம் hedge fund, FII, odi ,p-note , fdi , செய்த விளையாட்டு என்பார்கள் தொ.காவில், இவை எல்லாருக்கும் தெரிஞ்சாலும் அவற்றைப்பற்றி சும்மா சொல்லி வைக்கிறேன்,


hedge fund: கையில அதிகமா காசு இருக்கு அதை குறுகிய காலத்தில் ,ரொம்ப ரிஸ்க் எடுக்காம ஒரு மாற்று வகையில் முதலீடு செய்யனும் என்று நினைப்பவர்கள் வைத்திருக்கும் பணம் இது, இது பெரும்பாலும் வெளிநாட்டுக்காரங்க காசு தான்.எங்கே எல்லாம் காசு போட்டா குட்டிப்போடுமோ அங்கே எல்லாம் காச இறக்கி ஆடுவாங்க.


அமெரிக்காவை சேர்ந்த உலகின் பெரிய ஹெட்ஜ் பண்ட் நிறுவனம் ரெனைசன்ஸ் டெக்னால்ஜிஸ் இந்தியாவில் தற்போது தங்கள் கிளையை நிறுவியுள்ளார்கள் என்றால் இந்திய பங்கு சந்தையின் மதிப்பை உணர்ந்துக்கொள்ளலாம்.


FII: foreigne institutional investors ,


ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற அயல்நாட்டு நிதி நிறுவனங்கள், நிதிஆலோசனை குழுமங்கள் , பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்தியாவில் இப்படி முதலீடு செய்வது தான் fii எனப்�000; font-weight: bold;">

P-note: participatory note, என்ற ஒரு வகையின் ம�D இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய இது தான் வழி. ஹெட்ஜ் பண்ட் என்ற பணம் கையில் இருந்தாலும் யாரும் நேரடியாக முதலீடு செய்ய முடியாது . அந்த பணத்தை இப்படி fii வழியாகத்தான் அனுப்புவார்கள்.
உ.ம்:
Citigroup and Deutsche Group—the largest FIIs in Indian markets,
Morgan Stanley & Co. International,
Merrill Lynch Capital Markets,
CLSA Asia-Pacific,
Goldman Sachs Investments Mauritius
and JPMorgan


P-note: participatory note, என்ற ஒரு வகையின் மூலம் தான் fii தாங்கள் பெற்ற ஹெட்ஜ் பண்ட் நிதியை இந்திய பங்கு சந்தையில் இறக்குவார்கள். fii நேரடியாகவும் நிதி முதலீடு செய்யும். ஆனால் அதற்கான ரிசவ் பேங்க் நடைமுறைகள், வரி விகிதம் என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கு, ஆனால் இந்த p-note முறையில் அவை எளிமையாகா இருக்கு. இந்த வகையில் பணம் முதலீடு செய்பவர் யார் , எந்த நாடு என்று வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கலாம்.


ODI: offshore derivatives investors . இது ஒரு தொகுப்பாக உள்ளது இதில் தான் p-note வகையும் அடக்கம், இதில் மேலும்,
equity-linked notes,
capped return note,
participating return note,
investment note and similar instruments


ஆகியவையும் இருக்கு.


FDI: foreigne direct investment, எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தான் அரசின் அனுமதியுடன் ஒரு இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்வது. இந்திய நிறுவனத்தின் பங்கு தாரர் ஆகிவிடுவார்கள்.


பங்கு சந்தை சரிவுக்கு காரணமாக இருப்பது p-note வழியாக வரும் ஹெட்ஜ் பண்ட் கள் காரணமாக இருப்பதாக கருதக்காரணம் என்ன? ஏன் இந்த ffi கண்டு பங்கு சந்தைப்பயப்படுகிறது. இதுக்குலாம் யார் காரணம்?


இதுக்கு ஆரம்ப காரணம் நம்ம அரசாங்கம் தான், ஏன்னா 1992 க்கு முன்ன வரைக்கும் இந்திய பங்கு சந்தையில் அந்நியர்கள் முதலீடு செய்ய முடியாது, அப்போ இருந்த நரசிம்ம ராவ் அரசாங்கம் பொருளாதார சீர் திருத்தம் செய்ய புகுந்த போது இப்படி fii, odi, p-note ஆகிய வழிகளை உருவாக்கி வெளியில இருந்து முதலீடு கொண்டு வர செய்தார்கள்.


உண்மைல அப்போ இருந்தவங்களுக்கு ஏன் இந்த p-note க்கு இப்படிப்பட்ட ரகசியம் காக்கும் உரிமை தரோமே பின்னாடி பிரச்சினை வரும்னு தெரியாதா? அப்படிலாம் சலுகை ஏன் தரனும் ? அப்போது யாராவது நிர்பந்தப்படுத்தி சலுகை பெற்றார்களா? இது மில்லியன் டாலர் கேள்வி, இப்போ அய்யோ அம்மானா எப்படி.


அதுலயும் ப.சி போன்றவர்கள் தொ.கா ல பங்கு சந்தை உயர்ந்தால் வந்து அன்னிய சக்திகள் முதலீட்டு சந்தையில் நுழைந்து விட்டன என்பார், இப்படி ப.சி தொகா ல பேசியதற்காக அவர் மீது ஒரு நிதி ஆலோசகர் sebi vigilence இல் புகாரே கொடுத்துள்ளார், p-note என்பது ரகசியம் , அது யாருக்கும் சொல்லப்பட மாட்டாது என்று உறுதி தருகிறது செபி , அப்புறம் அது நிதி அமைச்சருக்கு மட்டும் எப்படி தெரிந்தது, செபி சொல்லி இருந்தால் ,அப்படினா அது தொழிற்தர்மத்துக்கு எதிரானது ஆச்சேனு.சந்தை சரிந்தால் இது வெறும் கரெக்ஷன் தான் என்பார் ! அரசுதூக்கி நிறுத்தும் என்பார்.


அப்புறம் இந்த fii க்கு, p-note க்கு கட்டுப்பாடு போடனும் என்று தொ.கா ல பேசிவைப்பார்,உடனே fii பங்குகளை விற்கும், விளைவாக பங்கு சந்தை சரியும் , ப.சி என்னதான் நினைத்திருக்கார்னு ஒன்னுமே புரியலை!


இதிலும் மேலும் இடியாப்ப சிக்கலை உருவாக்கிறா மாதிரி , இதற்கு முன்னர் fii ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் 24 சத பங்கு களுக்கு மேல் வாங்க கூடாதுனு இருந்த கட்டுப்பாட்டையும் தளர்த்தி 49 சத பங்குகள் வாங்கலாம்னு 2004 இல் உத்தரவுப்போட்டாங்க, இதிலும் அதையும் தாண்டி கூட பங்குகளை வாங்கலாம் , அதற்கு ரிசர்வ் பேங்க்கிட்டே தனி அனுமதி வாங்கனும், கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாமாம். அரசாங்கம் செய்றதெல்லாம் செய்துட்டு அப்போ அப்போ இந்த p-note க்கு ஒரு செக் கொண்டு வரனும்னு செபி மூலமா அறிக்கை மட்டும் ஏன் விடுது? சும்மா கண் துடைப்புக்கா?






1992 ல எல்லாம் சென்செக்ஸ் ஒரு 2500- 3000க்குள்ள தான் இருக்கும் பெருசா யாருக்கும் நட்டம் வராது. இந்த fii உள்ள விட்டப்பிறகு தான் காளை ஓட்டம் அதிகம் ஆச்சு, அப்போதைய fii முதலீடு 827 மில்லியன் டாலர்கள் தான், , ஆனால் இப்போது அதன் மொத்த மதிப்பு 66.8 பில்லியன் டாலர்கள், கைமாறும் பங்குகளில் 60 சதம் fii மூலமே. 2007 இல் ஒரே ஆண்டில் வந்த fii முதலீடு மட்டும் 17.2 பில்லியன் டாலர்கள். 2000 ஆண்டுக்கு பிறகு வந்த ஆண்டுகள் பங்கு சந்தையில் fii களின் பொற்காலம்னே சொல்லலாம், அவங்களால தான் பங்கு சந்தை விண்ணைத்தொட்டது , அப்போ அப்போ மண்ணையும் கவ்வியது!


ஒரு காலத்தில் 100க்கும் குறைவான fii நிறுவனங்களுக்கு மட்டுமே செபி அனுமதி கொடுத்திருந்தது, இப்போ 2007 நிலவரப்படி 1219 fii நிறுவனங்கள் இயங்குது. இவர்கள் கொடுத்திருக்கும் p-note களின் எண்ணிக்கை 34 ,மட்டுமே ஆனால் 30.5 சத இந்திய பங்கு சந்தை மதிப்பை இந்த p-note வகையில் முதலீடு செய்தவர்கள் கையில் இருக்கு.


இப்படி முதலீடு செய்தவர்கள் எல்லாம் குறுகியகால நோக்கில் செயல்படுவர்கள் , எப்போது வேண்டுமானாலும் விற்பார்கள் மீண்டும் வாங்குவார்கள், இதனால் அவ்வப்போது பங்கு சரிவு ஏற்படும், ஏன் எனில் இவர்கள் தான் மொத்த எண்ணிக்கையில் பங்குகளை கை மாற்றுபவர்கள், எனவே இவர்கள் செயல் வைத்தே பங்கு சந்தை ஊசலாட்டம் இருக்கும், மற்ற உள்நாட்டு பொது மக்கள் வாங்கும் பங்குகள் சில்லரை வர்த்தகம்(retail investors) வகையில் வரும், அவர்களால் பங்கு சந்தையின் திசையினை நிர்ணயிக்க முடியாது, ஆனால் உண்மையில் அவர்கள் தான் பங்கு சந்தையின் முதுகெலும்பு .


மார்ச் 24 இல் பங்கு சந்தையில்


fii செயல்பாடு,


பங்கு வாங்கியது - 2884.39 கோடி,விற்றது= 2508.26 கோடி,


நிகர வாங்கிய தொகை= 376.13 க்கோடி.


விற்றதை விட வாங்கியது அன்று அதிகம்.


அதே நாளில் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் dii , செயல்பாடு,


வாங்கியது = 836.61 கோடி , விற்றது = 1089.88 கோடி,
நிகர விற்றத்தொகை =253.27 கோடி,
வாங்கியதை விட விற்றது அதிகம்.


எனவே மார்ச்-24 , 2008 இல் பங்கு சந்தை சரிவில்லாமல் இருந்திருக்கும், ஆனால் எப்பொதெல்லாம் அதிகம் பங்குகளை fii விற்கிறார்களோ அப்போதெல்லாம் சரிவு வரும்.


இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் தனி ஒரு நிறுவனமாக அதிக அளவில் பங்கு சந்தையில் முதலீடு செய்திருப்பது அந்நிய நிறுவனமல்ல, இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (lic) 50 பில்லியன் டாலர்களுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளது.


சில முன்னனி இந்திய பங்கு சந்தை பங்களிப்பாளர்கள்;


lic - 49.5


reliance mutal fund- 19.74


icici mutal - 13.93


uti mutual -13.24


hdfc mutual -11.87


சில முன்னனி fii முதலீட்டாளர்கள்;

citi group- 13.54

deutsche group- 13.16
hsbc global- 6.41
morgan stanly- 5.94
merrill lynch- 5.71


* amount in billion usd


பட்டியலைப்பார்த்தால் இந்திய பக்கம் அதிகம் முதலீடு இருக்காப்போல தோன்றும் அப்படி இருந்தும் , ஏன் fii கள் சந்தையை அசைத்து பார்க்கின்றன.


இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் (dii)பரஸ்பர நிதி திரட்டி செயல்படுவர்கள் , ஹெட்ஜ் பண்ட்கள் கொண்டு அல்ல, நீண்டக்கால நோக்கில் முதலீடு செய்வார்கள், அடிக்கடி வாங்கி விற்றலில் ஈடுபடுவதில்லை.


அதே சமயம் fii க்கள் அப்படி அல்ல, ஆக்டிவாக விற்பனையில் இறங்கி செயல்படுவார்கள், அதனால் தான் தினசரி 60 சத பங்குகள் இந்த பக்கமும் அந்த பக்கமும் கைமாறுவதில் பங்கு பெறுகிறார்கள். இது தான் பங்கு சந்தையின் ஓட்டத்திற்கு பெரிதும் காரணம்.


அதே போல fii க்கள் எப்போது வேண்டுமானால் மொத்தமாக பங்குகளை ஒரே நாளில் விற்பார்கள்.


மேலும் fii க்கள் bse - 30 எனப்படும் அடிப்படை பங்குகளில்லோ nifty-50 எனப்படும் பங்குகளிலோ உள்ள முதன்மை பங்குகளில் அதாவது லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் அளவு குறைவாக இருக்கும், அதிலும் முக்கியமாக பங்கு சந்தை சரிவதற்கு முன்னர் அவர்கள் மெதுவாக இந்த முக்கிய பங்குகளில் இருந்து தங்கள் பணத்தை திரும்ப எடுப்பதைக்காணலாம்.அவர்கள் பெரும்பாலும் மிட் கேப் எனப்படும் நடுத்தர பங்குகளில் அதிகம் முதலீடு செய்திருப்பார்கள்.


மேலும் பங்கு சந்தை வளர்ச்சி என்பது அசுரத்தனமானது , இது ஒரு ஆரோக்கியமான நிலையே இல்லை எனலாம், நமது தேசிய உற்பத்தி வளர்ச்சி gdp 8 சதம் , ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நமது பங்கு சந்தை வளர்ச்சி 800 சதம் அதிகரித்துள்ளது, இது ஒரு வீக்கம் போன்றது தானே!


கடந்த காலங்களில் ஏற்பட்ட பங்கு சரிவுகளின் போது ஏற்பட்ட சென்செக்ஸ் மாற்றங்கள்
Top 5 market falls
Date Close Change % Chg
January 21, 08 17605.35 -1408.00 -7.41
March 3, 08 16677.88 -901.00 -5.12
January 22, 08 16729.94 -875.00 -4.97
February 11, 08 16630.91 -834.00 -4.78
May 18, 06 11391.43 -826.00 -6.76


ஜனவரி மாதம் ஏற்பட்ட சரிவில் மட்டும் 2,78,593 கோடி ரூபாய், சந்தை மதிப்பில் இந்திய முதலீட்டாளர்கள் இழந்துள்ளார்கள்.


2006 இல் 44.17 சதம் மிட் கேப்பில் fii முதலீடு செய்தார்கள் அதன் விளைவாக bse sensex 38.84 சதம் உயர்ந்து , குறியீட்டு எண் 12,454.42 இல் இருந்து 17,281.10 ஆக உயர்ந்தது. bse-30, nifty-50 இல் லார்ஜ் கேப், மிட் கேப் என எல்லாமே இருக்கும், அதில் இருக்கும் மிட் கேப் பங்குகள் இவை.


ஏற்கனவே சொன்னது போல லார்ஜ் கேப் புளு சிப் பங்குகளில் குறைவாக முதலீடு செய்யக்காரணம் அவற்றின் விலை எப்போதுமே அதிகமா இருப்பது, எனவே குறைந்த "volume of shares" தான் வாங்க முடியும். மேலும் வளர்ச்சி விகிதம் வேகமாகவும், அதிகமாகவும் இருக்காது. அதே சமயத்தில் மிட் கேப் களில் அதிக "volume of shares" வாங்கலாம், வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்.


ஆனால் fii விற்க ஆரம்பிக்கும் போது பெரிய புளுசிப் ஷேர்களையும் விற்பார்கள், supply and demand தான் பங்கு வர்த்தகத்தை நிர்ணயிக்கிறது , எனவே பெரிய அளவில் திடீர் என பங்குகள் சந்தையில் விற்கப்பட்டு , வாங்க கிடைத்தால் demand குறைவது இயல்பு தானே. எனவே ஒட்டு மொத்தமா பங்கு வணிகத்தின் நிலைத்தன்மை பாதிக்கும். இதன் விளைவாக ஒரு பயத்தில் சில்லறை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் பொதுமக்களும் பங்குகளை விற்கப்பார்ப்பார்கள், எனவே சர்வ நாசம் ஏற்படுகிறது.இதுவே சரிவின் மூல காரணம்.


அதே போன்று fii முதலீடு அதிகம் இருக்கும் நிறுவனத்தின் பங்கு உடனே மேலே போகும், fii எப்படி தங்கள் முதலீட்டினை எப்படி பிரித்து முதலீடு செய்கிறார்கள்(pattern of investment or portfolio) என்பதைப்பார்த்தாலே எந்த பங்கு மேலே போகும் என்று சொல்ல முடியும்.


பங்கு சந்தை தரகர்கள் , ஆலோசகர்களுக்கு முன் கூட்டியே fii முதலீடு பாயப்போகும் திசை தெரிவதால் தான் அவர்கள் பாதுகாப்பாக இயங்குகிறார்கள், இதன் அடிப்படையில் தான் ஷேர் டிப்ஸ் தருவதும்.இணையத்தின் மூலம் பல பங்கு வர்த்தக தளங்களிலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள fii மூலதனத்தின் அளவைப்பார்க்க முடியும்.ஆனால் இவை கடந்த கால நிலவரத்தை காட்டுவது, நாளை, இன்று எதை fii கள் வாங்க போகின்றது என்பதை யூகம் தான் செய்ய வேண்டும்.


அந்நிய முதலீடு என்று இல்லை உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களின(DII) செயல்பாடும் தரகர்களுக்கு தெரியும், ஏன் எனில் அவர்கள் தானே யார் , யார் பங்கு வாங்க "quote "கேட்டு இருக்கிறார்கள் என்பதை அறிவார்கள், அவர்கள் தானே நமக்கு வாங்கி தருபவர்கள். எந்த செக்டாரில் அதிகம் நிறுவன பங்களிப்பு இருக்கோ அது மேலே போகும் இதை சில்லரை பங்கு விற்பனையாளர்களும் பயன்ப்படுத்திக்கொண்டால் லாபம் நிச்சமே, ஆனால் இந்த கணிப்பு எல்லாருக்கும் கை வருமா?


பங்கு சந்தையில் சாதரண பொது ஜனம் அடிப்பட காரணம், அவர்கள் நேரடியாக எதையும் வாங்க முடியாது தரகர்களிடம் சொல்லி நம் சார்பாக அவர்களை வாங்க வைக்க வேண்டும். முன்னர் எல்லாம் நாம் ஒரு பங்கினை வாங்க முயலும் போது அப்போது என்ன விலை இருக்கிறதோ அதை விட கொஞ்சம் உயர்த்தி தான் quote செய்ய வேணும் , அப்படி ஒரு விலைக்குறிப்பிட்டு சொன்னால் 24 மணி நேரங்களுக்கு பின்னரே விற்பனை உறுதீ செய்யப்படும். இந்த டைம் கேப்பில் அங்கே சந்தையில் நாம் கேட்ட பங்கு சரிந்தாலும் , அடுத்த நாள் நாம் முதல் நாள் கேட்ட விலைக்கு வாங்கியது என்று கொடுப்பார்கள்.


உதாரணமாக , முதல் நாள் 100 விலைக்கு போன ஒரு பங்கினை , 110 ரூபாய் என நாம் விலை வைத்து வாங்க சொல்லிவிட்டோம், நாம் சொன்ன பிறகு அந்த பங்கு அந்த நாளின் மாலையில் சரிந்து 90 ரூபாய் என்று ஆனாலும் அதற்கு முன்னரே நமது பங்கு தரகர் அதனை 110 ரூபாய்க்கு வாங்கி நமக்கு தந்து விடுவார். இது நமக்கு அடுத்த நாள் தான் தெரிய வரும். அப்போது நாம் பங்கினை வாங்கிய போதே ஒரு பங்கிற்கு 20 ரூபாய் நட்டத்தில் இருப்போம்.


இப்போது தான் இணையம் வழி வர்த்தகம் நடைப்பெறுகிறதே இந்த பிரச்சினை இருக்காதே எனலாம். இணையத்திலும் நமக்கு 1 மணி நேரம் காலக்கெடு விதிக்கிறார்கள், எனவே ஒரு மணி நேரத்தில் அந்த பங்கு சரிந்தால் அதே போன்ற நட்டம் ஏற்படும். நாம் வாங்கும் பங்கு நல்ல நிறுவனமாக இருந்தால் பின்னர் மேம்பாடு காணும் இல்லை எனில் கீழே தான் போகும்.எனவே இணையம் வந்ததால் பொது ஜனம் பங்கு சந்தையில் பெரிதாக பாதுகாப்பாக இல்லை, அப்படி ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களே நேரடியாக பார்த்து பங்கு வணிகம் செய்கிறார்கள் என்று.


சரிவு ஏற்படும் போது , வாங்க சொன்னால் பங்கு தரகர்கள் அதான் சாக்கு என்று சரியும் பங்கினையும் வாங்கி தள்ளுவார்கள், ஆனால் சரியும் பங்கினை வைத்திருந்து நாம் விற்க சொன்னால் விற்று தர மாட்டார்கள். மேலும் ஸ்டாப் லாஸ் என்று ஒரு அமைப்பு இருக்கு அதனைக்கொண்டு நட்டம் ஏற்படுவதை தடுக்கலாம் என்பார்கள், அதாவது ஒரு பங்கு இந்த விலைக்கு கீழ் போகும் என தெரிந்தால் என் அனுதிக்கு காத்திராமல் விற்று விடுங்கள் என தரகருக்கு நாம் முன் கூட்டியே அனுமதி தருவது, ஆனால் சரிவின் போது அது வேலை செய்யாது, அதில் ஒரு கண்டிஷன் வைத்திருக்கிறார்கள் எதிர்ப்பாராத சந்தர்ப்பங்களின் போது ஸ்டாப் லாஸ் அமைப்பின் படி செயல் பட முடியாது!


gvk power infra structure இல் ffi இன் முதலீடு உயர்ந்தபோது 267% லாபம் தந்தது பங்கு வைத்திருந்தவர்களுக்கு, அதே சமயம் அம்புஜா சிமெண்டில் இருந்து fii முதலீட்டு விகிதம் குறைந்ததும் , 160 ரூபாய் என உச்சம் தொட்ட அப்பங்கு மிக குறைவாக 110 ரூபாய் தொட்டது, தற்போது 120 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இதன் மூலம் fii களின் முதலீட்டால் ஒரு பங்கினை மேலே கொண்டுபோக முடியும் என்பது தெரிய வரும்.


இந்திய நிறுவன பங்களிப்பு பங்கு சந்தையில் அதிகம் இருந்தாலும், அவர்கள் நினைத்த நேரத்தில் எதுவும் செய்ய முடியாது, ஆனால் யூகத்தின் அடிப்படையில் குறுகியக்காலத்தில் லாபம் சம்பாதித்து வெளியேரும் fii க்கள் நினைத்தால் பங்கு சந்தையை சுருட்டி வீசிவிடுவார்கள் என்பதே கசப்பானா உண்மை.பங்கு சந்தை சரியும் போதெல்லாம் lic, uti, icici போன்ற இந்திய நிறுவனங்களை முதலீடு செயய் வைத்தே நிதி அமைச்சகம் சரிவை தடுக்கிறது, அந்த நிறுவனங்களின் பணம் மக்கள் பணமே , அதை லாபமாக fii க்கள் எடுத்துக்கொண்டு போகிறார்கள், ஆனால் அது யாருக்கு போகுதுனு அந்த fii நடத்துறவங்களுக்கு மட்டும் தான் தெரியும். இப்படி ரகசியம் காத்து செயல்படுவதால் அந்த நிறுவனத்தின் மேனேஜர்கள் பில்லியனில் சம்பளம் வாங்குகிறார்களாம், ரெனைசன்ஸ் டெக்னாலஜிஸ் என்ற fii நிறுவனத்தலைவரின் ஆண்டு சம்பளம் 1.7 பில்லியன் டாலர்கள் என்று பங்கு வணிக பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.

Tuesday, March 18, 2008

ville noire -அடிமை சின்னம்!

பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரியின் வரலாற்றினை தற்செயலாகப் மீண்டும் படிக்க நேரிட்டது அதில் இருந்து சில ஆர்வம் தூண்டும் செய்திகளும் நெருடலான சில உண்மைகளும் எனக்கு புலப்பட்டது.

இதிகாச காலத்தில் அகத்தியர் தான் புதுவையை உருவாக்கியவராம் , இங்கே ரோமானியர்கள் எல்லாம் வந்து யாவாரம் செய்துள்ளார்கள். பின்னர் பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டு , விஜயநகர மன்னர்கள் வசம் வந்து , அதன் பின்னர் ஆர்காட் நவாப் வசம் வந்து சிறிது காலம் இருந்துள்ளது.

நாடு பிடிக்கும் ஆசையில் பல அய்ரோப்பிய நாடுகளும் மூட்டை முடிச்சுகளோடு கிளம்பிய காலத்தில் இந்திய கரையோரம் ஒதுங்கி பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியினரை புதுவை பகுதியை வளைத்துப்போட்டார்கள் 1673 இல், 1693 இல் டச் காரர்கள் சண்டைப்போட்டு புதுவையை பிடித்தார்கள் பின்னர் ரிஸ்விக் ஒப்பந்தம்மூலம் மீண்டும் 1699 இல் பிரஞ்ச் வசம் வந்தது.

அதன் பின்னர் நடந்த ஆங்கில - பிரஞ்ச் சண்டைகளின் போது அடிக்கடி கை மாறி இருக்கு. கடைசியாக பிரஞ்ச் கம்பெனி வசமே வந்து சேர்ந்தது.பிரஞ்ச் ஆண்ட போது புதுவையில் இந்தியர்கள் வசிக்கும் பகுதிக்கு வச்ச பேரு தான் "ville noire" அப்படினா கருப்பு நகரமாம், பிரஞ்ச் காரங்க வசித்த பகுதிக்கு"ville blanche" வெள்ளை நகரமாம்.

இந்திய சுதந்திரப்போர் நடைப்பெற்று ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுப்போன பிறகும் புதுவை பிரன்ச் காலனியாகவே இருந்தது. அப்போதைய இந்திய தலைவர்களும் புதுவை சரியாக்கண்டுக்கலை போல.

அதன் பிறகு தனியா ஒரு புதுவை சுதந்திர போராட்டம் நடத்தி பிரஞ்ச் காரங்களும் புதுவையை சுதந்திர இந்தியாவுடன் சேர்த்து வைத்துவிட்டு கிளம்ப 1954 இல் தான் தயாரானார்கள் . அப்போ சுதந்திரம் அடைந்தாலும் 1963 வரைக்கும் முழுமையா சுதந்திரம் அடையாம இழுத்துக்கிட்டே போய் இருக்கு.

1963 இல் தான் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது, அதுவரைக்கும் பிரஞ்ச் அரசிடம் வேலைப்பார்த்த இந்தியர்களுக்கு என்ன தான் கருப்பர்கள், அடிமைகள்னு பிரஞ்ச் எஜமான்கள் சொன்னாலும் அவங்களை நாட்டை விட்டு போக சொல்ல மனசே வரலை. நீங்க போனா நாங்களும் உங்க கூடவே வந்திடுறோம்னு ரொம்ப ராஜ விசுவாசம் காட்டி இருக்காங்க, அப்படிக்காட்டினவங்க எண்ணிக்கை ஒரு 10,000 சொச்சம் இருக்கும். ஒரு பக்கம் பல ஆயிரம் பேர் உயிரைக்கொடுத்து பிரஞ்ச் அரசை துறத்த போராடினால் இப்படியும் ஒரு கூட்டம் அங்கே இருந்து இருக்கு.

ஏகாதிபத்திய சக்தியா இருந்தாலும் , தன்னோட அடிமைகள் மேல அக்கரைக்கொண்ட அரசா பிரஞ்ச் அரசாங்கம், எங்கக்கிட்டே சேவகம் பார்த்தவர்கள் யார் யார் எல்லாம் பிரஞ்ச் குடியுரிமை வேணுமோ அவங்களை எல்லாம் எங்க நாட்டுக்காரங்களா அங்கிகரிக்கணும்னு இந்திய அரசாங்கத்தோட ஒரு கேவலமான ஒப்பந்தம் போட்டார்கள், அதன் படி ஒரு 10,000 பேரு பிரஞ்ச் நாட்டுக்குடியுரிமை வாங்கிட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார்கள், அதிலும் சில மானஸ்தர்கள் இருந்து இருக்காங்க எங்களுக்கு பிரஞ்ச் குடியுரிமை வேண்டாம்னு சொல்லி இருக்காங்க, அது சில 100 பேர்கள் தான்.

பிரஞ்ச் குடியுரிமை பெற்றவர்களுக்கு அப்போவே ஒரு வசதி செய்து தரப்பட்டிருந்தது , விருப்பப்படும் வரைக்கும் இந்தியாவில் இருந்துக்கொள்ளலாம் தேவைப்படும் போது பிரான்ஸுக்கு போய்க்கொள்ளலாம்.இங்கே இருக்கும் முன்னாள் காலனி இந்தியாவை சேர்ந்த பிரஞ்ச் சேவகம் செய்தவர்களுக்கு மாதா மாதம் ஓய்வூதியம் பிரஞ்ச் அரசு வழங்கும்.அந்தஓய்வூதியத்தை வாங்கிட்டு இங்கேவே சொகுசா அவர்கள் வாழ்ந்தார்கள். இங்கேயே கல்யாணம் செய்து குழந்தை பெற்றுக்கொண்டு படிப்பெல்லாம் முடித்துக்கொண்டு பிறகு நேரா பிரான்ஸுக்கு போய் அங்கே வேலை கேட்டு வாங்கிக்கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.

ஏன் அப்படி செய்றாங்கனா பிரான்ஸில் ஒரு சட்டம் இருக்கு அனைவருக்கும் அரசு கண்டிப்பா வேலை தரணும் , அதனால் பெரும்பாலும் கட்டாய ராணுவ சேவைனு சில ஆண்டுகள் வேலை தந்துடுவாங்க, பிறகு நல்ல வேலைக்கு அரசே ஏற்பாடு செய்யும். வேலைக்கிடைக்கவில்லை எனில் அது வரைக்கும் உதவி தொகை தரும்.

இதை எல்லாம் படித்த போது எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டது. இந்தியா விடுதலை அடைந்தபோது இப்படி ஏன் ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் குடியுரிமை தரவில்லை. இல்லை மக்கள் கேட்கலையா ?

மேலும் நாட்டை விட்டுப்போ என்று போராடி தொறத்திட்டி எப்படி எனக்கு குடியுரிமை குடுனு புதுவை ஆட்கள் வெட்கம் இல்லாமல் கேட்டாங்க?

எனக்கு என்ன தோன்றுகிறதுனா , ஆங்கிலேயர்கள் போனபிறகு சில ஆண்டுகள் கழித்து தான் பிரஞ்ச் விடுதலை கிடைத்தது. அப்போ சுதந்திர இந்தியாவில் முன்னாள் ஆங்கில அரசு ஊழியர்களுக்கு கிடைத்த சம்பளத்தை பார்த்து இருப்பாங்க , புதுவையில் வாங்குவதை விட ரொம்ப கம்மியா இருந்து இருக்கும், ஆஹா இந்த வேலையை விட்டா காசு தேறாதுனு , நீங்க போனாலும் நாங்க உங்க குடிமக்களா இருக்கப்பிரியப்படுறோம்னு சொல்லி காரியம் சாதித்துக்கொண்டார்கள் போலும்.

இந்தியர்கள்னு சொல்லிக்கிறதை விட காசு பெருசா போய் இருக்கு அந்த சில மக்களுக்கு மட்டும், அப்படி பணத்திற்காக நாட்டை மாற்றிக்கொண்டவர்கள் வழி வந்த வாரிசுகள் இப்போவும் பிரான்சில் நாம் இன்னும் காலனி ஆதிக்க சின்னத்தை துறக்காமல் சுமந்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்காங்க. அவர்கள் தமிழனோ , தமிழச்சியோ தங்கள் இழிவு நீங்க காலனி ஆதிக்க அடிமை சின்னத்தை துறக்க வேண்டாமா?

Thursday, March 13, 2008

காதுல பூ!

வட அமெரிக்காவின் மிகப்புகழ்ப்பெற்ற??!! தென்றல் என்ற அபூர்வ இதழை இலவசக்கொத்தனார் மட்டுமே படிக்கும் வழக்கம் இருப்பதால் அதில் இருந்து ஒரு பேட்டியை எடுத்து அவரதுப்பதிவில் போட்டுள்ளார், அதைப்படித்ததும் எனது பகுத்தறிவு அவமானப்பட்டுப்போனது(உனக்குலாம் ஏதூடா பகுத்தறிவு நீ தலை கீழ் தொங்கும் பிராணி ஆச்சே), ஒரு அப்பாவி பொது சனமாக எனக்குள் எழுந்த சில கேள்விகளை கேட்காமல் இருக்க முடியவில்லை.அவைக்கடைசியில்.

"தமிழறிஞர்" இலவசகொத்தனாரின் பதிவில் இருந்து ஒரு பகுதி:

இந்த மாத இதழில் கல்வியாளர் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களுடனான நேர்காணல் இடம் பெற்று இருந்தது, மிகச் சுவையாக பல விஷயங்களைப் பற்றிப் பேசி இருந்தார். அதில் பதிவு போட விஷயம் கிடைத்ததுதான் விசேஷமே!!

அந்த நேர்காணலில் இருந்து இரு கேள்வி பதில்கள்!

கேள்வி: தற்போது தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பட்டப்படிப்பு முடித்துவிடலாம் என்ற நிலை நிலவுகிறது. இது சரியானதுதானா?

பதில்: நான் மிகுந்த தமிழ்ப் பற்று உள்ளவன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள். இருந்த போதிலும் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிக்க முடியும் என்பதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.

பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த சிலர் தமிழ்ப் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும்? இதுவே சற்று அதிகம் என்றால் நாம் அதைக் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்தான். பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இதர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில குழந்தைகள் பள்ளிகளில் தமது தாய்மொழியைப் பயில்கிறார்கள். உருது கற்கும் இஸ்லாமியர் தவிர எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிலரே தத்தம் தாய்மொழிகளைப் பயில்கிறார்கள். படித்துவிட்டுப் போகட்டும். உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறு பல வடிவங்களில் வந்து கொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதில்லை.

மூலம் இலவசக்கொத்தனார்: நன்றி!

இப்போது எனது கேள்விகள்,

//1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059.//

தமிழறிஞர் ஏன் 1995 இல் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர்களின் எண்ணிக்கையை மட்டும் சொல்லி இருக்கிறார், 95 க்கு பிறகு யாரும் பத்தாம் வகுப்பு படிக்கவில்லையா? :-)) 1995 க்கு அப்புறம் 12 வருஷம் ஆச்சு இந்த டைம் கேப்புல 100 தடவை பெட்ரோல் விலை ஏறி இருக்கு, மக்கள் தொகை பெருகி இருக்கு, டாலர் விலை மாறி இருக்கு, இரண்டு ஆட்சியே மாறி இருக்கு இப்படி எத்தனையோ மாற்றம் நடந்து இருக்கே! இந்த கால நிலை மாற்றம் பற்றி கேள்விலாம் பெருமையாக பதிவுப்போட்டவருக்கு ஏன் எழவில்லை, அது எப்படி அவர் தான் தமிழர் ஆர்வலர் ஆச்சே :-)), இதுவே இப்படி பழைய புள்ளிவிவரத்தை வேற யாராவது சொல்லி இருந்தா புலிப்பாய்ச்சால் பாய்வாங்களே!

இதில் அவர் குறிப்பிட்டது அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை மட்டுமா இல்லை தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களும் அடக்கமா? அப்படி இரண்டும் சேர்த்த எண்ணிக்கையாக இருக்க வாய்ப்பே இல்லை.

தமிழக அரசின் உயர்நிலைப்பள்ளிக்குறித்தான புள்ளிவிவரங்கள்,2005-2006 ஆண்டுக்கானது.(அதுவரைக்கும் தான் விவரம் இருக்கு)

High Schools

Government

2016

8.33


Municipal/Corporation

110

0.50


Aided

613

3.12


Unaided

179

0.43


Anglo Indian(High School)

12

0.10


Matriculation(High School)

2053

6.17


Central Board(High School)

63

0.51


Total for all High Schools

5046

19.16

*மாணவர் எண்ணிக்கை லட்சத்தில்
http://www.tn.gov.in/schooleducation/statistics/tablep3.htm

இந்த அட்டவணையில் இருந்து ,

அரசு உயர்நிலைப்பள்ளிகள் மட்டும் 2016 உள்ளன அதில் படிப்போர் 8.3 லட்சம் மாணவர்கள்.

மேலும் நகராட்சி , மாநகாரட்சி , உதவி பெரும், உதவிப்பெறாப்பள்ளிகளில் படிப்போர் எண்ணிக்கை சுமார் 4 லட்சம் .

மொழி சிறுப்பாண்மை என சொல்லி வேற்றும்மொழி படிப்போர் என இருப்பவர்கள் படிப்பது இந்தப்பள்ளிக்களில் என எடுத்துக்கொள்ளலாம்.
முனைவர் சொன்னது போல இரண்டு சதம் மாற்றுமொழி படிப்போர் அவர்களாகவே இருக்கட்டும்.

ஆனால் தனியார் நடத்தும் மெட்ரிக்குலேஷன் மாணவர்கள் யார், அவர்கள் எல்லாம் மொழி சிறுப்பாண்மையினரா என்று ஒரு கேள்வி வருகிறதே, அவர்கள் எண்ணிக்கை ஒன்றும் சிறியது அல்லவே ,

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் எண்ணிக்கை 2053, மாணவர்கள் எண்ணிக்கை 6.17 லட்சம்..

அரசுப்பள்ளிகளில் மொழி சிறுப்பாண்மையினருக்கு அவர்கள் மொழி சொல்லித்தர மட்டுமே ஆசிரியர்கள் உண்டு அதுவும் சில பள்ளிகளில் மட்டுமே மற்றப்படி அங்கே பிரெஞ்ச், ஜெர்மன், ஹிந்தி, இன்ன பிற மொழி சொல்லித்தர ஆசிரியர்கள் இல்லை, ஆனால் மெட்ரிக் பள்ளிகளில் பல மொழி சொல்லித்தர ஆசிரீயர்கள் உண்டு, எனவே மாணவர்கள் தமிழ் படிக்காமலே வேற்று மொழியினைப்படித்து தேர்வு எழுதும் நிலை, அதுவும் 6.17 லட்சம் மாணவர்கள் என்றால் அது ஒன்றும் புறக்கணிக்கக்கூடிய எண்ணிக்கையா? அல்லவே.

மேலும் மொத்தமாக தொழிற்கல்வி , மருத்துவம் என உயர்ப்படிப்புக்கு தேர்வாகும் மாணவர்களில் பெரும்பான்மை இத்தகைய தனியார் பள்ளி மாணவர்களே , அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவே. எனவே தமிழில் எழுத,படிக்க தெரியாத மருத்துவர்களும் , பொறியாளர்களும் அதிகம் உருவாகும் அபாயம் வேறு உள்ளது.

இப்போது தமிழக அரசு போட்ட அரசாணை யாருக்கு , மொழி சிறுப்பாண்மையினரை பாதிக்கவா இல்லையே, இப்படி மெட்ரிக் பள்ளிகளில் தமிழே படிக்காமல் டிமிக்கு கொடுப்போரை தடுக்க தானே, ஆனால் ஏனோ அதை மறைத்து விட்டு ஏதோ அரசு ம்ஒழி சிறுப்பாண்மையினரை தண்டிப்பது போலவும், அவர்கள் கண்டிப்பாக படிக்காவிட்டால் என்ன நஷ்டம் என்றும் அந்த பேட்டியில் தமிழறிஞர் என சொல்லிக்கொள்பவர் சொல்லி இருப்பது ஏன்?

மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கூட பிற மொழி படிக்க காரணம் , அவர்கள் படிக்க வேண்டிய பாட அளவு அதில் குறைவு என்பதால் தான். துவக்கப்பள்ளியில் தமிழ் எந்த அளவுக்க்கு படிப்போமோ அதே அளவுக்கு பிரென்ச்/ ஜெர்மனில் அ,ஆ , என்ற ரீதியில் 10 ஆம் வகுப்பில்(+2 விலும் கூட) படித்தாலே போதும், ஆனால் தமிழை படித்தால் அதில் மனப்பாட செய்யுள் ,கட்டுரை , இலக்கியம் என்று அதிகம் படிக்க வேண்டி இருக்கும்.

ஏன் எல்லா மாணவர்களும் அப்படி பிற மொழி படிக்கலாமே எனலாம் அரசுப்பள்ளிகளில் அத்தகைய வசதிகள் இல்லை, ஆனால் காசு வாங்கிக்கொண்டு படிப்பு சொல்லித்தரும் பள்ளிகளில் உண்டு, எனவே இலகுவாக மதிப்பெண், கூடுதலாக தமிழ் புறக்கணிப்பு என்று மெட்ரிக் பள்ளிகள் இயங்குவதால் தான் தான் அரசு அனைவரும் தமிழ் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்கிறது.


இதெல்லாம் தெரிந்தும் தெரியாது போல அரசு ஏதோ மொழி சிறுப்பாண்மையினருக்கு துரோகம் செய்வதாக சந்தில் சிந்து பாடும் தமிழறிஞர்கள் வலைப்பதிவில் பெருத்துப்போய்விட்டார்கள்!

பின்குறிப்பு:

இந்தப்பதிவை முனைவர் " தமிழறிஞர்" குழந்தைசாமி படிக்கமாட்டார் எனவே அவரை விளக்கம் கேட்கவும் முடியாது, வலைப்பதிவில் கூகிளாண்டவருக்கே கற்றுக்கொடுப்பவர்களையும் குறிவைத்து பதிவிடவில்லை எனவே அய்யோ என்னை மட்டும் குறிவைத்து பதிவிடுகிறேன் என்று என்னை கேட்கும் வாய்ப்பும் இப்பதிவு மூலம் வராது. எனவே உண்மையான தமிழார்வலர்கள் /வலைப்பதிவர்கள் என யார் வேண்டுமானாலும் பதிவு குறித்து கருத்துக்களை கூறலாம்!ஏன் இப்படி என்று விளக்கம் தரலாம்!

Thursday, February 21, 2008

sensex- ஒரு பார்வை!

பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது என்னைப்போல சும்மா வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை sensex அப்படி என்றால் என்ன? , sensitive index என்பதன் சுருக்கமே sensex, இதனை வைத்து எப்படி பங்குவணிகத்தினை கணிக்கிறார்கள், இந்த முறை எப்போது இருந்து நடைமுறைக்கு வந்தது என்பதைப்பார்ப்போம்.

கி.பி 1875 ஆம் ஆண்டு மும்பையில் 318 வியாபாரிகள் ஆளுக்கு ஒரு ரூபாய் மட்டுமே முதலீட்டு பங்காக போட்டு ஒரு வியாபார அமைப்பாக நிறுவியது தான் இன்றைய மும்பை பங்குவர்த்தக மையம்.அபோதேல்லாம் எந்தவித குறியீடுகளும் இல்லாமல் அனுபவத்தின் அடிப்படையில் பங்கு வணிகம் நடந்தது. 1986 இல் தான் முதன் முதலில் sensex என்ற பங்குவணிக குறியீட்டினை செயல்படுத்தி , சந்தையின் ஏற்ற இறக்கங்களை தெளிவாக உணர செய்தார்கள். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் sensex புதிதாக வெளியிடப்படும்.

இந்த sensex எதன் அடிப்படையில் செயல்படுகிறது?

முதலில் முழு சந்தைமதிப்பு முதலீடு (
"Full Market Capitalization")என்ற அடிப்படையிலும் , பின்னர் 2003 இல் இருந்து கட்டற்ற மாறும் சந்தை மதிப்பு முதலீடு ("Free-float Market Capitalization" )என்ற அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது.

முழு சந்தைமதிப்பு முதலீடு:

உதாரணமாக ஒரு நிறுவனம் 1000 சமவிகித பங்குகளை தலா 100 ரூபாய் மதிப்பில் வைத்து துவக்கப்படுகிறது என்றால் , அதன் மொத்த மதிப்பு 100x1000= 1,00,000 ஆகும், இந்த மதிப்பின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் மதிப்பை கணக்கிட்டால் அது முழு சந்தை மதிப்பு முதலீடு ஆகும்.

இதில் உள்ள குறைப்பாடு என்னவெனில், அந்நிறுவனத்தின் உண்மை சந்தை மதிப்பு என்ன என்பதை சரியாக கணக்கிட முடியாது, ஏன் என்பதை அடுத்த உதாரணம் பார்க்கும் போது தெரியும்.

கட்டற்ற மாறும் சந்தை முதலீடு:

அதே நிறுவனத்தின் 1000 பங்குகளில் 250 பங்குகளை அதன் முதலாளி தனக்காக வைத்துக்கொண்டு 750 பங்குகளை மட்டுமே மக்கள் வாங்க சந்தையில் விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், மக்களுக்கு கிடைக்கும் பங்குகளின் மதிப்பு என்ன 750x100= 75,000 தான். இப்போது மக்கள் பங்கு பெறும் பங்கு சந்தையில் அந்நிறுவன பங்குகளின் அடிப்படையில் மதிப்பு கணக்கிடும் போது விற்பனைக்கு வராத 250 பங்குகளையும் சேர்த்து மதிப்பிட்டு சொல்வதால் என்ன ஆகும், தேவை இல்லாமல் மதிப்பைக்கூட்டிக்காட்டும், ஆனால் புழக்கத்தில் உள்ள பங்கு மதிப்பு குறைவு, அதன் விற்பனை செயல்ப்பாடுகளே நேரடியாக supply & demand அடிப்படையில் சந்தையின் மதிப்பை வெளிப்படுத்தும்.

எனவே தான் தற்போது எல்லாம் உலக அளவில் அனைத்து பங்கு சந்தைகளும் கட்டற்ற மாறும் சந்தை முதலீடு அடிப்படையில் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.

இப்போது நம் பங்கு சந்தை குறியீட்டு எண் எப்படி கணக்கிடப்படுகிறது என்று பார்ப்போம்.

இக்குறியீட்டினை ஏதோ ஒரு ஆண்டினை அடிப்படை ஆண்டாக (base year)வைத்து துவக்க வேண்டும், நமக்கு 1979 தான் பங்கு சந்தை குறியீட்டு அடிப்படை ஆண்டு.

அந்த ஆண்டில் தோராயமாக 10 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் இருந்தது என்று வைத்துக்கொள்வோம், இதுவே அடிப்படை பங்குகள் எனப்படும், அதன் மொத்த மதிப்பு 1000 ரூபாய் , என்றால் அதனை வைத்து குறியீடு ஏற்படுத்தி முழு மதிப்பாக வைத்து குறியீட்டு எண் 100 என்று நிர்ணயித்துக்கொண்டார்கள்.

அதாவது 1979 இல் sensex மதிப்பு 100 என்று துவக்கமதிப்பாக நிர்ணயித்துக்கொண்டார்கள்.

இதை வைத்து ஒவ்வொரு ஆண்டும் , புதிதாக எத்தனை நிறுவனங்கள் பங்கு வெளியிட்டாலும் அதனை முதலில் அந்த அடிப்படை பங்குகளின் செயல் பாட்டுடன் ஒப்பிட்டே மொத்த சந்தையினை மதிப்பிடுவர்கள். பங்குகளின் மொத்த மதிப்பினை, துவக்க பங்கு மதிப்புக்கும் , துவக்க பங்கு குறியீட்டுக்கும் உள்ள விகிதத்தால் பெருக்கி கிடைக்கும் எண்ணுக்கு தான் sensex என்று பெயர்.

1979 இல் ஒரு உதாரணமாக 10 நிறுவனங்களை எடுத்துக்கொண்டார்கள் என்று சொன்னேன், ஆனால் உண்மையில் 30 நிறுவனப்பங்குகள் எடுத்துக்கொண்டார்கள், அதன் மொத்தமதிப்பாக 60,000 ரூபாய் என்றும், அதன் ஆரம்ப குறியீடாக 100 என்றும் வைத்துக்கொண்டார்கள்.

இப்பொழுது sensex கணக்கிட அந்த 30 பங்குகளின் சந்தை மதிப்பை, சந்தையில் கிடைக்கும் விற்பனைக்கு கிடைக்கும் பங்குகளின் எண்ணிக்கை வைத்து கணக்கிடுவார்கள், அப்படி கிடைக்கும் மதிப்பினை 100/60,000 என்ற எண்ணால் பெருக்குவார்கள் , (இந்த விகிதத்திற்கு index divisor என்று பெயர்) அப்படி பெருக்கி கிடைக்கும் எண்ணே அப்போதைய sensex.

30 அடிப்படை நிறுவனங்களை பெரிய , நடுத்தர , மிக நீண்டக்காலமாக இருக்கிற , நம்பிக்கையான , அதிகம் வியாபாரம் ஆகும் பங்குகள் என்று பல அளவுகோள்களின் அடிப்படையில் அவ்வப்போது தேர்வு செய்வார்கள்.

தற்போதைய பங்கு சந்தை sensex அடிப்படை 30 பங்கு நிறுவனங்கள் இவை தான்,

ACC, Ambuja Cements, Bajaj Auto , BHEL, Bharti Airtel , Cipla, DLF, Grasim Industries , HDFC , HDFC Bank, Hindalco Industries , Hindustan Lever , ICICI Bank , Infosys , ITC, Larsen & Toubro, Mahindra & Mahindra, Maruti Udyog , NTPC, ONGC , Ranbaxy Laboratories , Reliance Communications , Reliance Energy , Reliance Industries , Satyam Computer Services , State Bank of India , Tata Consultancy Services , Tata Motors , Tata Steel , and Wipro .

இந்த 30 நிறுவனங்களின் செயல்ப்பாடு, வர்த்தகம் , அதன் மதிப்பே sensex ஐ நிர்ணயிப்பது.

பின்னர் எப்படி திடீர் , திடீர் என பங்கு சந்தையில் சரிவு ஏற்படுகிறது, இந்த 30 நிறுவனங்களும் எப்போதும் லாபத்தில் இருக்குமே எனலாம், அதுக்குலாம் மேலும் பல காரணங்கள் இருக்கு , பின்னர் பார்க்கலாம்,அல்லது பின்னூட்டங்களில் யாரேனும் சொல்லக்கூடும்!






Monday, February 11, 2008

மோஹன் தாசுக்கு ஆப்படிக்கும் இந்திய கிரிக்கெட் அணி!


மோஹன் தாசுக்கு ஆஸ்திரேலிய அணி தான் கனவு அணி, ஆனால் இனிமே அது பழங்கனவு , பகல் கனவு! இந்திய பசங்க சும்மா பட்டைய கிளப்புறாங்க , சிங்கத்தை அதன் குகையில் போய் பிடறியை பிடித்து உலுக்குவதுனா அது இதான், நேத்து என்னமா ஆடுனாங்க பசங்க. அட டா சொல்ல வார்த்தைகள் இல்லை, ஆனால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை.

அதுவும் ஒரு புதுப்பையன் இஷாந்த் சர்மாவாம் பேரு , ஆளு என்னமோ ஊதினா பறந்துப்போறாப்போல ஈர்க்குச்சி போல இருந்தாலும் , சும்மா சொல்லக்கூடாது குத்தி ஏத்துறான் பந்தை ஆஸி பேட்ஸ்மென் விலாவுல, பந்து எல்லாம் சும்மா இறக்கை இல்லாமலே பறக்குது, ஆஸிப்பேட்ஸ்மேன் எல்லாம் பரத நாட்டியம் , குச்சிப்புடினு இஷாந்த் போடும் தாளத்துக்கு ஆடுறாங்க.

ஒன்றிரண்டு நோ பால் போட்டாலும், காரியக்காரன், விக்கெட்டை பக்கெட்ல அள்ளுறான். போதாததுக்கு நம்ம கதக்களி சிரிசாந்து வேற சந்துல சிந்து பாடி ஆப்படிக்கிறான். சமீப காலத்துல 200 ரன்னுக்கு கீழ ஆஸிய சுருட்டின அணி இந்தியா தான். லிட்டில் மாஸ்டர் சச்சின் பார்ம் என்பது நிரந்தரமல்ல கிளாஸ் தான்னு ஒவ்வொரு போட்டியிலும் காட்டுறார் அதுவும் ஒரே ஓவர்ல பிரட் லீயை புரட்டி எடுத்தார் , 3 ஃபோர் அடிச்சு.ரோஹிட் சர்மா அப்படி இப்படினு ஆடினாலும் தண்ணிக்காட்டிட்டான். மொத்தத்துல இளமையும், அனுபவமும் கலந்த ஒரு கலவையா இருக்கு நம்ம அணி. அப்புறம் என்ன ஜெயம் தானே!

ஆஸில எல்லாம் கிழட்டு பயலுகளாகிட்டாங்க ஒரு சிலரை தவிர எல்லாருக்கும் வயசு 30க்கு மேல , ஏதோ இருக்கிற கொஞ்ச நஞ்ச சக்திய லேகியம் சாப்பிட்டு தக்க வச்சுக்கிட்டு ஆடுறாப்போல இருக்கு.

ரிக்கி பாண்டிங்க் வாய்ப்பேசுர அளவுக்கு பேட் பேச மாட்டேங்குது. டெஸ்ட்ல சொதப்பினது இன்னும் தொடருது, இதுவே இந்தியாவா இருந்தா ஓய்வு பெறனும்னு நாளு பேர் வக்கணையாக எழுதுவாங்க, அங்கேலாம் யாரும் கண்டுக்கலை. டீம் ஆடுறத வச்சு இவர் தப்பிச்சுட்டு இருக்கார். அது எத்தனை நாளைக்கோ.

கில்லி ஓய்வு பெறப்போறார், ஹைடனுக்கு இடுப்பு வலி மூட்டு வலி, வருங்காலத்தில் வங்க தேசம் கூட ஆஸியை புரட்டி எடுக்கும்னு நினைக்கிறேன். அப்போவும் go ..aussie ..go னு நம்ம மோஹன் சொல்லுவராக்கும் :-))

chak de india...



Friday, February 08, 2008

வள்ளல் பாரி வேள் வரலாறு!

யோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு.

யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவிட்டது,தாமதத்திற்கு மன்னிக்கவும், பலப்புத்தகங்களிலும் ஒரே தகவலை மீண்டும் மீண்டும் போட்டுள்ளார்கள்,இப்பொழுது ஓரளவு சுருக்கமாக சொல்லும் அளவுக்கு தான் தகவல்கள் கிடைத்துள்ளது.

அவற்றை மட்டும் இப்போது சொல்கிறேன், மேலதிக தகவல்கள் கிடைத்ததும் பின்னர் சொல்கிறேன். மற்றவர்களுக்கும் பாரிப்பற்றி மேலதிக தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்கவும் பதிவில் சேர்த்துவிடலாம்.

பாரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவர்.இவர் ஒரு குறுநில மன்னர், வேள் என்ற வம்ச வழி வருபவர்கள். எனவே பாரிவேள் என்று அழைப்பது உண்டு.இவரதுக்காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு.

இவர் ஆண்ட இடம் பறம்பு மலை எனப்படும் , அப்போதைய பாண்டிய அரசின் கீழ் வரும்.அது தற்போது பிறான்மலை எனப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்றும் உள்ளது. இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்ற புராணம் உண்டு, இங்கே ஒரு சிவன் கோவில், முருகன் கோவில் உள்ளது.

பிறான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி அருகில் உள்ளது.

பாரி ஒரு மலையக மன்னர் ஆவார், அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தது.அப்படி இருந்தப்போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தண்மையே.கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.

பாரியின் பால்யகால நண்பர் தமிழ் புலவரான கபிலர் ஆவார்.இவர் குறித்து கபிலர் பல பாடல்களை பாடியுள்ளார்.நறுமுகையே ...நறுமுகையே எனத்துவங்கும் பாடலில் பாரி மகள்கள் பாடுவதாக எழுதியதும் கபிலர் தான்.

பாரி நகர்வலம் சென்றபோது பற்றிப்படர கொழுக்கொம்பு இன்றி தரையில் கிடந்த முல்லைக்கொடிக்காக தேரை தந்து வந்தது அனைவரும் அறிந்த புகழ்ப்பெற்ற சம்பவம் ஆகும்.

பாரியின் புகழ் மூவேந்தர்களை விட அதிகம் பரவியதால் அவர்கள் பாரி மீது கோபம் கொண்டு ஒன்றாக சேர்ந்து வந்து படை எடுத்து பறம்பு மலையை முற்றுகை இட்டார்கள், பல காலம் முற்றுகை இட்டும் வெற்றிக்கிடைக்கவில்லை அவர்களுக்கு.

முற்றுகை இட்டக்காலத்தில் உணவுத்தேவையை சமாளிக்க கபிலர் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை அனுப்பி வயல்களிலிருந்து நெற்கதிர்களை எடுத்து வர செய்து மக்களுக்கு உணவளிக்க செய்ததாக ஒரு கதை உண்டு.

அதே கபிலரே பின்னர் பாரி வீழ்ச்சிக்கும் காரணம் ஆனதாகவும் சொல்கிறார்கள்.

மன்னர்கள் முற்றுகை இட்டிருந்தாலும் புலவர்கள் வந்து செல்ல தடை இல்லாத நிலை. மூவேந்தர்கள் போர்க்களத்திலும் புலவர்களை மதித்தார்கள் போலும்.

அப்படி ஒரு முறை கோட்டைக்குள் இருந்து வெளியில் வந்த கபிலரிடமே
அவர்கள் பல மாதங்களாக முற்றுகையிட்டு வெளியில் காத்திருந்து தோற்கடிக்க வழி தெரியாமல் பாரியின் நண்பரிடமே உதவிக்கேட்டார்கள்.

நாங்களும் பலக்காலமாக முற்றுகை இட்டு காத்திருக்கிறோம், எப்படி பாரிக்கோட்டைக்குள் இருந்துக்கொண்டு சமாளிக்கிறார் என்று கேட்டார்கள், , மேலும் பாரியை எப்படி வெல்வது என்று வழிக்கேட்டார்கள்,

கபிலர், பாரியின் பறம்பு மலையில் தேனடைகள் அதிகம் உள்ளது, வேரில் பழுத்த பலா முதலிய பழங்களும்,கிழங்குகளும் உள்ளது, மேலும் மூங்கில் நெல் உள்ளது அவற்றைக்கொண்டே உணவுத்தேவையை சமாளித்துக்கொள்ள முடியும், நீங்கள் ஆண்டுக்கணக்கில் முற்றுகை இட்டாலும் வெல்ல முடியாது என்றார்.

அப்படி எனில் எப்படி தான் வெல்வது என்றுக்கேட்டதர்கு, போரில் அவரை வெல்லமுடியாது, ஆனால் நீங்கள் அவரிடம் யாசகமாக தேசத்தைக்கேட்டாலும் கொடுத்துவிடுவார், அதற்கு நீங்கள் இரவலர்கள் போல் சென்று பாட்டுப்பாடி அவரை மகிழ்விக்கவும், முடிந்தால் உங்கள் துணைவியர்களையும் அழைத்து சென்று பாணர்கள் வேடத்தில் பாடினால் மனம் மகிழ்ந்து கேட்டதை பரிசாகக்கொடுப்பான் பாரி என்று அவர்களுக்கு வழிக்காட்டினார் கபிலர்.மேலும் சீக்கிரம் போய் கேட்டால் நல்லது பாரி ஏற்கனாவே அவரது ஆட்சிக்குட்பட்ட 300 ஊர்களையும் தானம் அளித்துவிட்டார், இப்போது இருப்பது இந்த மலையும் , அரண்மனையும் மட்டுமே என்றார்.

ஆரம்பத்தில் மூவேந்தர்களும் தயங்கினாலும் வேறு வழி இல்லாமல் பாட்டுப்பாடும் பாணர்கள் போல மாறு வேடத்தில் பாரி அரண்மனைக்கு சென்று ஆடிப்பாடி அவரை மகிழ்வித்தார்கள்.

மனம் மகிழ்ந்த பாரி என்ன வேண்டும் தயங்காமல் கேளுங்கள் , என்னிடம் இருப்பது எதைக்கேட்டாலும் தருவேன் என்றார். மூவேந்தர்களும், உங்கள் நாடும் , உங்கள் உயிரும் வேண்டும் என்று தயங்காமல் கேட்டார்கள். அவையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தானம் கேட்பதற்கும் எல்லை உண்டு நாட்டைக்கேட்டாலும் எப்படி உயிரைக்கேட்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

பாரிக்கும் வந்திருப்பது பாணர்கள் அல்ல மூவேந்தர்கள் என்பது தெரிந்தாலும், சொன்ன சொல்லை மீறக்கூடாது என்று வாளை எடுத்து வைத்துவிட்டு அவர்கள் முன் நின்று உயிரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அளித்துவிட்டார்.

இப்படி ஒருவன் உயிரையும் தானம் அளிக்க முன் வருகிறானே எனப்பாராட்டாமல் அவர்கள் நோக்கத்தில் உறுதியாக இருந்த மூவேந்தர்கள், தங்கள் வாட்களை பாரிமீது பாய்ச்சி அவர் உயிரை மாய்த்தார்கள்.

பாரி இறக்கும் தருவாயில், அவரது மகள்கள் அங்கவை ,சங்கவை ஆகிய இருவரையும் கபிலரிடம் ஒப்படைத்து ஒரு தந்தையாக என்னால் இவர்களுக்கு மணம் முடித்து வைக்கும் கடமையை நிறைவேற்ற முடியவில்லை, நீங்கள் தந்தையாக நின்று அவர்களுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்றுக்கேட்டுக்கொண்டார்.

இல்லை எனாது , கேட்டவர்களுக்கு கொடுக்கும் கொடை உள்ளம் கொண்ட பாரி தன் உயிரையும் அளித்து இரவாப்புகழ் பெற்றார்.

தன்னால் தான் பாரியின் உயிர்ப்போயிற்று என்று வருந்தி , இனி உயிரோடு இருக்கக்கூடாது என்று கபிலர் நினைத்தாலும், பாரிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முயன்றார்.

மூவேந்தர்கள் மீது இருந்த பயத்தால் எந்த மன்னர்களும் பாரி மகள்களை மணம் முடிக்க முன்வரவில்லை.

மூவேந்தர்களைக்கண்டு பயப்படாத மற்றொரு கடை ஏழு வள்ளல் மலையமான் திருமுடிக்காரி என்பவர் மட்டும் முன்வந்தார்.

இருவரில் ஒருவரைக் காரிக்கு மணம்முடித்து வைத்துவிட்டு, மற்றப்பெண்ணுக்கு மணம் முடித்து வைக்க இயலாமல் மனம் உடைந்த கபிலர், அப்பெண்ணை சில அந்தணர்கள் வசம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் படி ஒப்படைத்து விட்டு காட்டுக்கு சென்று பட்டிணி இருந்து தாமே உயிரைப்போக்கிக்கொண்டார்.

காரி , பாரி மகளை மணந்துக்கொண்டது அறிந்து கோபம் கொண்ட மூவேந்தர்கள் காரியின் மீதும் படை எடுத்து வந்து , போரில் அவரையும் கொன்றுவிட்டார்கள்.காரி இறந்ததும் அவருடன் சேர்ந்து பாரியின் மகளும் உயிரை மாய்த்துக்கொண்டாள்.

மற்றொரு மகளுக்கு என்னவாயிற்று என்பது சரி வர தெரியவில்லை, அவ்வையார் அப்பெண்ணுக்கு ஒரு குறு நில மன்னனுடன் மணம் முடித்தார் என்றும் சொல்கிறார்கள்.

பின்குறிப்பு:

பாரி அரண்மனைக்குள் பாணர்கள் வேடம் போட்டு மூவேந்தர்கள் உட்புகுந்தார்கள், ஆனால் கபிலர் சொன்னப்படி தானம் கேட்டு எல்லாம் உயிரை எடுக்கவில்லை என்றும் சொல்கிறார்கள், ஆனால் அத்தகைய ஒரு சூழ்ச்சி மூலமே பாரியை வென்றார்கள் என்பது மட்டும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது.

Thursday, February 07, 2008

ஜோதா அக்பர்

செல்லுலாய்ட் ஜோதா பாய்
ஜோதா அக்பர் என்ற ஒரு இந்தி திரைப்படம் இந்த மாதம் வெளிவர இருக்கிறது வரும் போதே சில சர்ச்சைகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு!இதை இயக்கி இருப்பவர் லகான் புகழ் அஷுதோஷ் கோவ்ரிகர், கதை முன்னால் தொலைக்காட்சி நடிகர் ஹைதர் அலி. இசை , நம்மவூரு ஏ.ஆர்.ரெஹ்மான். இதில் ஜோதா பாய் என்ற ராஜபுதன இளவரசியாக, அக்பரின் மனைவியாக அய்ஷ்வர்யா ராய் பச்சன்* (ராய் போடக்கூடாதுனு சொல்லிட்டாங்களே) அக்பராக ரித்திக் ரோஷன் நடித்துள்ளார்கள். பலத்த எதிர்ப்பார்ப்புகளை தூண்டும் படமாக பேசப்படுகிறது.

இந்த சர்ச்சைகள் உண்மையில் கேள்விக்கேட்கும் நோக்கில் எழுப்பப்படுகிறதா இல்லை படத்தை விளம்பரப்படுத்த அடிக்கப்படும் கூத்தா என்றும் எனக்கு சந்தேகம்(வழக்கம் போல)

அப்படி என்ன சர்ச்சை என்றுப்பார்ப்போம்,

ஒரு சாரார் ஜோதா பாய் என்ற பெண்ணே சரித்திரத்தில் இல்லை , அபுல் பசல், பதாயுனி, நிசாமுதின் பக்ஷி ஆகியோரின் அக்பர் வரலாற்றில் இப்படிப்பட்ட பெயரே குறிப்பிட வில்லை என்கிறார்கள்.

இன்னொரு சாரார் ஜோதா பாய் இருந்தார் ஆனால் அவர் அக்பரின் மனைவி அல்ல , அக்பருக்கு மொத்தம் 34 மனைவிகள் என்று வரலாற்றில் தெளிவாக பெயர்களோடு இருக்கு, அதில் ஒருவர் பெயர் கூட ஜோதா பாய் இல்லை. ஆனால் ஜெஹான்கீரின் (சலிம்) மனைவி பெயர் ஜோதா பாய் , எனவே தவறாக அக்பரின் மனைவி என்று சொல்கிறார்கள் படத்தையே தடை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

மூன்றாவதாக , தற்போதைய ராஜ்புதான ஜோத்பூர் அரச குடும்பம் , ஜோதா பாய் உண்மையான ஒருவரே, அவருக்கும் அக்பருக்கும் திருமணம் நடந்தது என்கிறார்கள்.

ஜோதா பாய் என்ற பெயர் வரக்காரணமே அவர் ஜோத்பூர் இளவரசி என்பதால் தான்.

எது எப்படியோ இலவசமாக படத்திற்கு விளம்பரம் கிடைத்து விட்டது.சரி நாமும் நம்ம பங்குக்கு வரலாற்றை தோண்டிப்பார்ப்போம் என்று பார்த்ததில்,

ஹிமாயுன் , ஷேர்ஷா சூரியிடம் போரில் தோல்வி அடைந்து தலைமறைவாக சுற்றியக்காலத்தில் ஹமீதா பானு என்ற பெண் மீது காதல் கொண்டு மணந்து கொண்டார், நாடோடி வாழ்க்கையின் போது இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவர் இயற்பெயர் ஜலாலுதீன். அக்பர் என்றாலும் கிரேட் என்ற பொருள் தான், ஆனால் அவரை அக்பர் தி கிரேட் என்று சொல்வார்கள்(டபுள் கிரேட் போல).

அக்பரின் முதல் திருமணம் கொஞ்சம் விசித்திரமானது, அக்பர் ஆட்சியைப்பிட்க்க உதவியாக இருந்த பைராம் கான் என்ற அக்பரின் மாமா, இறந்ததும் அவரது மனைவியையே மணந்துக்கொண்டார், ஹிமாயுன் ஆட்சிப்பொறுப்பில் இல்லாதக்காலக்கட்டத்தில் பிறந்த அக்பரை வளர்த்ததே பைராம் கான் , அவர் மனைவி தான், எனவே அவர் வளர்ப்பு தாய் போன்றவராக கருதப்படவேண்டும், அக்பரை விட பல வயது மூத்தவர், அக்பருக்கு அப்போ 16 வயது தான் இருக்கும்.

அதன் பின்னர் பல திருமணங்கள் செய்துக்கொண்டார் அக்பர், , பலவும் போரில் வென்ற ராஜ்யங்களை தன் வசம் நிரந்தரமாக வைத்திருக்க செய்யப்பட்டதே.

ஆம்பரை சேர்ந்த ராஜபுத் இளவரசியை மணந்து அவருக்கு மரியம் ஸமானி என்று பெயர் வைத்துக்கொண்டார், அவர்களுக்கு பிறந்தவர் தான் ஜெஹான்கீர் என்ற சலிம்.

அக்பர் 34 திருமணங்கள் செய்துக்கொண்டதால் , கொஞ்சம் தளர்ந்து போய்விட்டார் போலும் அதன் பின்னர் போரை தவிர்க்க திருமணம் செய்ய நேரிட்டப்போது 12 வயதான சலிமுக்கு செய்து வைத்துவிட்டார், அப்படியான ஒன்று ஜோத்பூர் ராஜபுதான அரசர் ஆன உதய் சிங்கின் மகள் ஜோதா பாய்யுடன் ஆன திருமணம். அது மட்டுமல்லாமல் ராஜா பஹவான் தாஸ் என்ற ராஜபுதான அரசரின் மகள் மான் பாயுடனும் சலிமுக்கு திருமணம் நடந்தது.

இப்படித்தான் நான் படித்த புத்தகத்திலும் இருக்கு, ஆனால் சலிமின் மனைவியை எப்படி இப்போ அக்பருக்கு மனைவியாக மாற்றினார்கள் என்பது தெரியவில்லை. இல்லை ஒரே பெயரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் என்று எடுத்துக்கொள்வதா? ஆனால் படக்குழுவினர் மொஹல்- இ- அசாமில் கூட அக்பரின் மனைவியாக ஜோதாபாய் கதாபாத்திரம் உள்ளது. இப்படமே மொகல் -இ- ஆசாம் அடிப்படையில் மாற்றி எடுக்கப்படுவது தான் என்று சொல்கிறது.

எது உண்மைனே தெரியவில்லை, ஒரே குப்பாச்சு குழப்பாச்சு செய்றாங்கப்பா!சரி படம் வந்தா அய்ஷ்வர்யா ராய் பச்சன் *எப்படி இருக்குனு பார்க்கிறதுக்காகவாது பார்க்கணும் :-))

பின்குறிப்பு: கல்வெட்டு சொல்லிய திருத்தத்திற்கு ஏற்ப * அய்ஷ்வர்யா "ராய் "பச்சன் என மாற்றப்பட்டுள்ளது!

Monday, January 21, 2008

கோயிலும் உண்டியலும் தேவையா?

கோயில் உண்டியல்களில் காசுப்போடாதீர்கள் என்று இரண்டுப்பாகமாக ஒரு தொடர்ப் பதிவினை கண்ணபிரான் ரவி ஷங்கர் போட்டிருந்தார், அதில் கோவில்களை அரசுப்பார்த்துக்கொள்வதால் சீரழிகிறது, எனவே தனி நிர்வாக்குழு ஒன்றினை ஏற்படுத்தி அவர்கள் வசம் நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் அதுவரைக்கும் கோவில் உண்டியலில் காசு போடக்கூடாது என்று சொல்லி இருந்தார்.

மேலோட்டமாகப்பார்த்தால் ஏதோ புரட்சிகரமான சீர் திருத்தம் கொண்டு வரும் ஆசையில் சொன்னது போல தெரிந்தாலும் , பதிவின் உள் நீரோட்டம் அபாயகரமான சாதிய மேலாண்மையை மீண்டும் கோவில்களில் நிறுவும் எண்ணத்தை கொண்டிருப்பது சிறிது உற்று கவனித்தாலே தெரியும்.

இந்து அறநிலையத்துறை என்பது பெயரளவில் முதலில் உருவாக்கப்பட்டது 1926 இல் , பின்னர் பல மாற்றங்களுடன் வளர்ந்து இன்றைய நிலையில் உள்ளது. இதில் 1991 இல் ஒரு சட்ட திருத்தம் போட்டு தன்னார்வலர்களை கொண்ட மாவட்ட கமிட்டி உருவாக்கி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள், ஆனால் அவர்கள் செயல் பாடு அத்தனை திருப்திகரமாக இல்லாததால் 96 இல் அது களைப்பட்டு, மீண்டும் ஆணையர்கள், அலுவலர்கள் வசம் முழு பொறுப்பும் அளிக்கப்பட்டது.

அரசாங்கத்துக்கு வேறு வேலை இல்லையா , ஏன் கோவிலை போய் கவனிக்கணும்? காரணம் அக்காலத்தில் கோவில்கள் அனைவருக்கும் உரியதாக இல்லாதிருந்தது, ஒரு சாராரின் கட்டுப்பாட்டில் இயங்குவது, சாதிய வேறுப்பாடுகளை அப்படியே காப்பது என செய்து பெரும்பாண்மை மக்களை வஞ்சித்தமையால் தான் அரசு கோவில்களின் நிர்வாகத்தில் உள் புக வேண்டியது ஆயிற்று.

ஆலயங்களில் பாகுபாடு இருப்பதை நீக்க ஆலய பிரவேசம் எல்லாம் செய்ய வேண்டியது ஆச்சு. போராடித்தான் இப்போதிருக்கும் நிலையைப்பெற்றோம்.இன்று வரையில் அனைவரும் அர்ச்சர்கள் ஆகும் வாய்ப்பு வழங்கப்படவே இல்லை, பெயரளவில் தான் இருக்கு.

இப்பொழுது மட்டும் பெரிதாக மாற்றம் வந்துவிட்டதா இன்னமும் கண்ட தேவியில் தேரோடினால் ஊரடங்கு உத்தரவு, ஒரு சாரருக்கு அனுமதி மறுப்புதேர் வடம் தொடக்கூட முடியாது எனத் தொடர்கிறதே எனலாம். ஆனால் அரசின் கையில் இருப்பதால் குறைந்த பட்சம் போராடி , நீதி மன்றம் மூலம் அனுமதி வாங்கலாம். ஆனால் ஏதேனும் ஒரு குழுவின் வசம் அளித்து விட்டால் என்னாவாகும், அவர்கள் வைத்ததே சட்டம் என்று அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் செயல்படுவார்கள்.

ஏன் ஒரு காலத்தில் முழுக்க தனியார் வங்கிகளாக இருந்ததை அரசுடைமாக்கியது, காரணம் பாமரனுக்கும் வங்கியின் பலன் அப்போது இருந்தவர்கள் தறவில்லை, அவர்களுக்கும் பலன் கிடைக்க அரசே வங்கிகளை எடுத்து நடத்தியது, சீர் திருத்தம் செய்தது, அது போல சமூக நீதி கிடைக்க அரசே கோவில்களை எடுத்து நடத்தி மக்களுக்கு குறைந்தப்பட்ச சம உரிமை அளீப்பது சிலர் கண்களை உறுத்துகிறது.

இரா.முருகப்பன் என்பவர் தாழ்த்தப்பட்டவருக்கு ஒரு கோவில் கல்யாண மண்டபத்தை வாடகைக்கு அளிக்க மறுத்த சம்பவம் பற்றி பதிவு ஒன்றினை போட்டுள்ளார் , அதைப்படித்தால் தெரிய வரும் , தனிக்குழுக்களிடம் கோவில் போனால் என்னாகும் என்று. அக்கோவில் செங்குந்தர் இனத்தவரால் நிர்வாகிக்கப்பட்டு வருவது, ஏன் தரவில்லை என்று கேட்டதுக்கு எங்கள் சமூகத்தவரால் நடத்தப்படுவது நாங்கள் நினைப்பவர்களுக்கு தான் வாடகைக்கு தர முடியும் எங்கள் விருப்பம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இப்போது கண்ணபிரான் சொல்வது போன்று செய்தாலும் காலப்போக்கில் ஏதேனும் ஒரு ஆதிக்க சாதிகளிடம் கோவில் நிர்வாகம் மாட்டிக்கொண்டு , பின்னர் பரம்பரை தர்மகர்த்தா என்று கோவிலே ஒரு சிலர் கைக்கு போய்விடும்.

அரசின் கட்டுப்பாட்டில் கோவில்கள் இருக்கும் போதே ஆரியமாயைகள் தான் கோவில்களில் அதிகம் தலை விரித்தாடுகிறது என்பது வெட்ட வெளிச்சம்.

பழனிக்கோவிலை உதாரணம் காட்டி அது சீர்க்கெட அரசின் மெத்தனம் காரணம் என்றார், ஆனால் அரசினை ஆட்டிவைக்கும் சிலரின் கைங்கரியத்தால் அக்கோவிலை ஆரிய சக்திகள் ஆக்ரமித்தை அவர் ஏன் சொல்லவில்லை.

பழனி கோவிலை முதலில் நிர்மாணித்து செயல் படுத்தியது புலிப்பாணி சித்தர் ஆவார், அவர் ஏற்படுத்தி பிரதிஷ்டை செய்தது தான் நவப்பாஷாண சிலை(போகர் ச்செய்தார் அவருக்கு புலிப்பாணி சித்தர் உதவினார் என்றும் சொல்வார்கள், ஆனால் வழிப்பாட்டு உரிமை இவர் குடும்பத்தார் வசம் அப்போது) அக்கோயிலில் காலம் காலமாக பூஜை செய்யும் உரிமைப்பெற்றவர்கள் புலிப்பாணி சித்தர் வழி வந்தவர்களே. அங்கே அப்போதெல்லாம் பிராமண அர்ச்சர்கள் கிடையாது.

பிற்காலத்தில் புலிப்பாணி சித்தர் குடும்பத்தில் வாரிசு சண்டை, யார் நேரடி வாரிசு என்றெல்லாம் கிளம்பியது. அதனால் வழக்கும் போட்டார்கள் ,சைக்கில் கேப்பில் ஆட்டோ ஓட்டியக்கதையாக அக்குடும்பத்தில் இருப்பவர்கள் இரு தரப்பும் பூஜை செய்ய தடை விதித்து, அர்ச்சகர்களை உள் இறக்கியது அரசு என்றாலும் அதன் பின்னால் இருந்த சக்திகள் வேறு என்பது புரிந்திருக்கும்.

சிலை பலஹீனப்பட யார்க்காரணம் அர்ச்சர்கள் தானே. இதே அர்ச்சர்களை கண்டித்தால் வேறுக்கதையை கிளப்பி திசை திருப்புவார்கள்.ஆனாலும் அரசு நடவடிக்கை எடுக்க ஒரு வாய்ப்பு இப்போது உண்டு, இதுவே தனிக்குழுவிடம் போனால் இன்னும் மோசம் ஆகவே வாய்ப்புள்ளது.

தனியாக ஒரு கூட்டத்தினால் மட்டும் சொந்தம் கொண்டாடப்பட்டு நிர்வாகிக்கபடும் ஒரு கோவில் சிதம்பரம் நடராஜர் கோவில், அங்கு என்ன நிலை. ஏன் அவர்கள் மக்களுக்கு பெரிதாக சேவை செய்யவில்லை.

அக்கோவிலை முழுக்க பங்கு போட்டு திண்பது தீட்சிதர்கள் தான்.உண்மையில் அக்கோவிலின் உரிமையும் சோழர்கள் வழி வந்த ஒரு ஜமீந்தாருக்கு(நடராஜபுரம்) தான் சொந்தம் ஆனால் காலப்போக்கில் அவரால் கோவிலின் செலவுகளை கவனிக்க முடியாமல் அக்காலத்தில் கோவில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் கையில் விட்டு ஒதுங்கிக்கொண்டார் அல்லது ஓரம் கட்டப்பட்டார். இப்பொழுதும் இது குறித்து வழக்குள்ளது.கோவில் நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் பக்தி பழங்களான தீட்சிதர்கள் என்ன மேம்பாட்டினை செய்தார்கள்.

பொன்னம்பலத்தில் தேவாரம் பாடத்தடை விதித்தவர்கள் தான் இந்த தீட்சிதர்கள், அவர்களும் பாட மாட்டார்கள், பாடவரும் சிவாச்சார்யார்களையும் விட மாட்டார்கள். கோவிலுக்கு வெளியில் பிரகாரத்தில் பாடலாம் ஆனால் கர்ப்பக்கிரகத்தில் பாடக்கூடாது என்று இவர்கள் சொல்லக்காரணம் என்ன,கோயில் குறித்தான அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறோம் என்ற ஆணவம் தானே. இதுக்குறித்தும் வழக்கு நடைப்பெறுகிறது.

இக்கோவில் அரசின் கைவசம் இருந்தால் இப்படி மறுக்கவே முடியாது.

ஒரு தீட்சிதர் குடும்ப்பத்தில் உள்ள திருமணமான ஆண்களுக்கு கோவில் வருமானத்தில் பங்கு உண்டு என்று விதி அப்போது இருந்ததால் திருமணம் செய்து கோவில் பங்கினை வாங்க வழக்கொழிந்து போன பால்ய விவாகத்தை இன்றும் செய்து வருகிறார்கள்.மணமானால் கோவிலில் பூஜையும் செய்யலாம் அதில் கிடைக்கும் வருமானமும் வரும். இப்படி சுய தேவைகளுக்காக செயல்படும் இவர்களைப்போன்றவர்கள் எல்லாம் குழு அமைத்து அனைத்து கோயில்களையும் பார்த்துக்கொள்ள சொல்லனுமாம், பார்த்துகொள்வார்களா, பங்கு போட்டுக்கொள்வார்களா?

ஆர்ய மாயைக்கு சற்றும் சளைக்காமல் தான் இங்கிருக்கும் பூர்வீக தமிழர்களின் வசம் இருக்கும் கோவில் நிர்வாகங்களும் சீர்க்கெட்டுள்ளது. மதுரை ஆதீனம் மிகப்பெரியது அதன் வசம் பல சிவாலாயங்கள் உள்ளது ஆனால் என்னப்பயன் எல்லாம் வீணாகத்தான் போகிறது. ஆதீனமும் ஒரு தனியார் நிர்வாக அமைப்பு தானே அவர்கள் என்ன மேம்பட வைத்தார்கள். அரசியல் பேட்டி தருவது, நடிகைகளின் ஆட்டத்தினைப்பார்ப்பது என்று "விசேஷ ஆன்மீக சேவை"செய்கிறார்.

நங்க நல்லூரில் இருக்கும் தனியார் வசம் இருக்கும் கோவிலில் பக்தர்களிடம் அதிக விலைக்கு பூஜைப்பொருட்கள் எல்லாம் விற்க வைத்து நிர்வாகம் கொள்ளை அடிப்பதாக ஒரு பதிவர் கூட பதிவிட்டார்.

அரசு நிர்வாகம் மோசமாக இருந்தாலும் வாக்குகளை நினைத்தாவது ஒரு எல்லைக்குள் இருப்பார்கள், மேலும் சட்டப்படி கேள்விக்கேட்கலாம், தனியார் நிர்வாகக்குழு எனில் சர்வாதிகாரப்போக்கு தான் அதிகரிக்கும்.

இப்படி மக்கள் நம்பும் ஒரு விஷயத்தை அவர்களின் நம்பிக்கையை மூலதனமாக வைத்து ஆள் ஆளுக்கு பிழைப்பு நடத்தத்தான் பார்க்கிறார்கள். இப்படி இருக்கும் ஒரு அமைப்பு தேவையா, கோவிலும் வேண்டாம் உண்டியலும் வேண்டாம் என்று விட்டொழிக்கலாமே! மனக்கோவில் கண்ட பூசலார் என்ற நாயன்மாரே இருந்திருக்கிறார் எனவே மக்கள் மனதில் கோவில் கட்டி வழிப்பட்டாலே போதுமே!
-------------------------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு: சம்பந்தப்பட்டப்பதிவுகள் தெரியாததால் சுட்டி இணைக்கவில்லை, விரைவில் செய்யப்படும்.

Friday, January 18, 2008

பேராசை பிடித்த அமெரிக்க மாப்பிள்ளைக்குடும்பங்கள்!

பேராசைப்பிடித்த அமெரிக்க மருமகள்கள் என்று வசந்தம் ரவி ஒரு பதிவைப்போட்டு அலப்பரை செய்துள்ளார், நியாயமாகப்பார்த்தால் பேராசைப்பிடித்த மாமியார்கள் என்று தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். வரதட்சனை வாங்காமல் எந்த அமெரிக்க மாப்பிள்ளை கல்யாணம் செய்தார், (அமெரிக்காவில் வாங்கும் சம்பளம், கிரீன் கார்ட் என அதற்கு தக்க வரதட்சணை அளவு ஏறும்)அதுவும் அளவுக்கதிகமாக வாங்குவது வழக்கம்.எனவே விலைக்கொடுத்து வாங்கிய மாப்பிள்ளையினை கட்டுப்படுத்தப்பார்ப்பது வாங்கியவரின் (பெண்ணின்) விருப்பம் தானே! உண்மையான பிரச்சினையைப்பேசாமல் வேறு ஏதோ ஒன்றினைப்பேசி திசை திருப்பும் பதிவினைப்போட்டு அனுதாபம் தேடும் செயல் மானங்கெட்ட செயல் அல்லவா?

நான் இந்தப்பதிவில் தற்ப்போது பெரிதாக எதுவும் சொல்லப்போவதில்லை, அமெரிக்க உத்தியோகம் (NRI என சொல்லி), அல்லது மென்பொருள் துறை உத்தியோகம் என சொல்லி வர தட்சிணைக்கறக்காமல் எத்தனை மாப்பிள்ளைகள் மணம் புரிந்துக்கொண்டார்கள் என்று அறிவதே! வாங்குற
வரதட்சணையை எல்லாம் வாங்கிட்டு அந்த பெண் அதை சொன்னால் இதை சொன்னால் என்று சொல்வதால் என்னப்பயன்!

பொதுவாக நான் கேட்கிறேன், எத்தனை NRI மாப்பிள்ளைகள் "எதுவும்" வாங்காமல் கல்யாணம் செய்து கொண்டிருப்பார்கள்? (அதுவும் பொண்ணு அழகாக , சிவப்பாக , குறைந்தப்பட்சம் டிகிரி+mca , அல்லது பொறியியல் படித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் உண்டு,அப்போத்தானே அமெரிக்காவிற்கு வந்தாலும் வேலைக்கு அனுப்பி கூடுதலாக வருமானம் பார்க்கலாம்),விரல் விட்டு எண்ணும் அளவில் கூட இருக்க மாட்டார்கள்!

Thursday, January 10, 2008

மொக்கைத்தோரணம்!

மொக்கை "tag" என்று ஒன்றை ஆரம்பித்து அதுக்கு என்னையும் தெரியாத்தனமாக கூப்பிட்டு இருக்காங்க பாசமலர்(என்னா ஒரு பாசம்!)... மொக்கைக்கும் எனக்கும் ரொம்ப தூரம்னு தெரியாம போய்டுச்சு அவங்களுக்கு(ஆனா நீ போடுறது எல்லாம் மொக்கை தானேனு யாரோ சொல்றது கேக்குது) எவ்வ்வளவோ செய்தாச்சு இதை செய்ய மாட்டோமா!

சரி என்னால முடிந்த மொக்கைய தீட்டுகிறேன்.மீண்டும் ஒரு முறை சிரிப்பு தோரணம்!
-----------------------------------------------------------------------------------------------

வாடிக்கையாளர்: என்னப்பா சர்வர் காபில ஈ மிதந்து பார்த்து இருக்கேன், இங்கே என்னடானா சிகரெட் பில்டர் மிதக்குதே?
சர்வர்: அதான் சார் பில்டர் காபி!
-----------------------------------------------

நபர்1: எதுக்கு அந்த பாடகர் 3 மைக் வச்சு அது பின்னாடி குத்துக்கால் போட்டு பாடுறார்?

நபர்2:அவர் கிரிக்கெட் விக்கெட் கீப்பராம் ஸ்டம்ப் மாதிரி 3 மைக் வச்சு இருந்தா தான் பாட வருமாம்!
------------------------------------------------------------------

சபாநிர்வாகி பாடகியிடம்: நீங்க வீட்டில தொட்டிலில் குழந்தையைப்போட்டு ஆட்டி தூங்க வைக்க பாடிக்கத்துக்கிட்டதுக்காக மேடைல பாடும் போதும் ஒரு தூளி கட்டி வைக்க முடியாதும்மா!
----------------------------------------------------------------

காவலன்1:நம் மன்னர் சர்வேச பாண்டியர் வலைப்பதிவு ஆரம்பித்ததில் இருந்து ரொம்ப மாறிவிட்டார்..
காவலன் 2: ஏன்?
காவலன்1:இளவரசிக்கு சுயம்வரத்தில் போட்டி வைப்பதற்கு பதில் அவரது வலைப்பதிவில் "இச்சுனு ஒரு கதை" எழுதும் போட்டி வைத்து சிறந்த கதை எழுதும் மன்னனுக்கே இளவரசி என்று அறிவித்து விட்டாரே!
-----------------------------------------------------------------------------

காவலன்1: மன்னருக்கு வலைப்பதிவு மோகம் அதிகரித்து விட்டது, அவர் வலைப்பதிவில் பின்னூட்டங்கள் அதிகம் வரவில்லை என , நாட்டு மக்கள் அனைவரும் தினசரி ஒரு பின்னூட்டம் ஆவது போட வேண்டும் இல்லை என்றால் சவுக்கடி என்று அறிவித்து விட்டாரே!
--------------------------------------------------------

சர்வேச பாண்டிய மன்னன்: மந்திரியாரே இன்று என் வலைப்பதிவில் புதிதாக எதுவும் பின்னூட்டம் வந்திருக்கிறதா பார்த்து சொல்லும்!

மந்திரி: மன்னர் மன்னா நீங்கள் ரகசியமாக பக்கத்து நாட்டு அரசனின் வலைப்பதிவில் அனானி கமெண்டாக போட்டு ஆபாசமாக திட்டியதை ஐ.பி வைத்து கண்டு பிடித்து விட்டானாம் , போர் தொடுத்து வருவதாக உங்கள் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளான்!
-----------------------------------------------------------------

மன்னர் சர்வேச பாண்டியர்: மந்திரியாரே, நான் இந்த நாட்டின் மன்னன் ஆனால் என்பதிவை விட உங்கள் பதிவுக்கு அதிகம் ஹிட்ஸ் வருகிறதே எப்படி?

மந்திரி: மன்னா,நான் வீக் எண்ட் பதிவு என்று போட்டு அதில் நம் அரண்மனை நர்த்தகிகளின் நடன வீடியோவைப்போடுகிறேன்! அதான் ஹிட்ஸ் அதிகம் வருகிறது!
---------------------------------------------------------------------------------

மந்திரி: மன்னா நீங்கள் ஒலையில் செய்தி கொண்டு வரும் புறாவை பிடித்து வறுத்து சாப்பிடும் ரகசியம் பக்கத்து நாட்டு அரசனுக்கு தெரிந்து விட்டது போலும்!

மன்னர்: எப்படி சொல்கிறீர்கள் மந்திரியாரே!
மந்திரி: இந்த முறை புறாவுக்கு பதில் காக்காவின் மீது வெள்ளைப்பெயிண்ட் அடித்து செய்தி அனுப்பியுள்ளானே!
----------------------------------------------------------------------------

மன்னர்: என்ன மந்திரியாரே இம்முறை செய்தி எடுத்து வந்த புறாவுக்கு ஒரு கால் தான் இருக்கிறது?

மந்திரி: பக்கத்து நாட்டு அரசர் "மிஸ்டு கால் "அனுப்பியுள்ளாராம், சிம்பாலிக்காக சொல்கிறார், நீங்கள் தான் செய்தி என்ன என்று கேட்டு இன்னொரு புறா அனுப்ப வேண்டுமாம்!
------------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:
இதற்கு மேலும் நான்கு மொக்கையர்களை தொடர அழைக்க வேண்டுமாம், யாரை அழைப்பது என்று தெரியவில்லை. எனவே இப்பதிவைப்படிக்கும் யாரேனும் நான்கு பேர் பொறுப்பேற்று மொக்கை சேவை புரிய "திறந்த வெளி அழைப்பு" வைக்கிறேன்!