Friday, January 18, 2008

பேராசை பிடித்த அமெரிக்க மாப்பிள்ளைக்குடும்பங்கள்!

பேராசைப்பிடித்த அமெரிக்க மருமகள்கள் என்று வசந்தம் ரவி ஒரு பதிவைப்போட்டு அலப்பரை செய்துள்ளார், நியாயமாகப்பார்த்தால் பேராசைப்பிடித்த மாமியார்கள் என்று தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். வரதட்சனை வாங்காமல் எந்த அமெரிக்க மாப்பிள்ளை கல்யாணம் செய்தார், (அமெரிக்காவில் வாங்கும் சம்பளம், கிரீன் கார்ட் என அதற்கு தக்க வரதட்சணை அளவு ஏறும்)அதுவும் அளவுக்கதிகமாக வாங்குவது வழக்கம்.எனவே விலைக்கொடுத்து வாங்கிய மாப்பிள்ளையினை கட்டுப்படுத்தப்பார்ப்பது வாங்கியவரின் (பெண்ணின்) விருப்பம் தானே! உண்மையான பிரச்சினையைப்பேசாமல் வேறு ஏதோ ஒன்றினைப்பேசி திசை திருப்பும் பதிவினைப்போட்டு அனுதாபம் தேடும் செயல் மானங்கெட்ட செயல் அல்லவா?

நான் இந்தப்பதிவில் தற்ப்போது பெரிதாக எதுவும் சொல்லப்போவதில்லை, அமெரிக்க உத்தியோகம் (NRI என சொல்லி), அல்லது மென்பொருள் துறை உத்தியோகம் என சொல்லி வர தட்சிணைக்கறக்காமல் எத்தனை மாப்பிள்ளைகள் மணம் புரிந்துக்கொண்டார்கள் என்று அறிவதே! வாங்குற
வரதட்சணையை எல்லாம் வாங்கிட்டு அந்த பெண் அதை சொன்னால் இதை சொன்னால் என்று சொல்வதால் என்னப்பயன்!

பொதுவாக நான் கேட்கிறேன், எத்தனை NRI மாப்பிள்ளைகள் "எதுவும்" வாங்காமல் கல்யாணம் செய்து கொண்டிருப்பார்கள்? (அதுவும் பொண்ணு அழகாக , சிவப்பாக , குறைந்தப்பட்சம் டிகிரி+mca , அல்லது பொறியியல் படித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் உண்டு,அப்போத்தானே அமெரிக்காவிற்கு வந்தாலும் வேலைக்கு அனுப்பி கூடுதலாக வருமானம் பார்க்கலாம்),விரல் விட்டு எண்ணும் அளவில் கூட இருக்க மாட்டார்கள்!