Saturday, October 29, 2011

சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்பது சரியா?



சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்பது சரியா?


தமிழகத்தில் இஸ்லாமியர்கள் முகமன் கூற "சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக" என்று கூறுவதாக பதிவுலகில் பலரும் சொல்கிறார்கள். இதன் அரேபிய மூலம் அசலாமும் அலைக்கும் என்பதாகும். இதனை வைத்து தமிழ்மணத்தில் ஒரு பிரச்சினை எழுந்து அடங்கியது.

இதனிடையே எனக்கு ஒரு சந்தேகம் வந்தது(இவர் பாண்டிய மன்னரு!), சாந்தி என்றால் அமைதி...அமைதிக்கு பெயர் தான் சாந்தி என்று பாடல் கூட உள்ளது. அமைதி என்றால் சைலண்ட், மேற்கு தொடற்சி மலையில் கேரளாவில் "சைலண்ட் வாலி" என்று ஒரு பள்ளத்தாக்கு உள்ளது அந்த வனப்பகுதி இரவிலும் சப்தமில்லாமல் இருக்கும் ஏன் எனில் அங்கே சிக்காடா என்ற வண்டு இனம் இல்லை, சிக்காடா என்பது சில்வண்டு, சுவர் கோழி, மோல் கிரிக்கெட் எனப்படும் பூச்சியே. இது இரவு நேரங்களில் கிர்ரிச் கிர்ரீச் என சத்தமிடும். உலகிலேயே சிக்காடா இல்லாத வனம் சைலைண்ட் வாலி தான். இதை தமிழில் அமைதிப்பள்ளத்தாக்கு என்பார்கள்.

சமாதானம் என்பது ஆங்கிலத்தில் பீஸ்(peace) ஆகும்." peace treaty" இதை தமிழில் சமாதான உடன்படிக்கை (அ) ஒப்பந்தம் எனலாம்.சில சமையம் அமைதி உடன்ப்படிக்கை( அ) ஒப்பந்தம் என்று சொல்லவும் கேட்டு இருக்கிறோம்.

அப்படியானால் சாந்தி(=அமைதி), சமாதானம் என்ற இரண்டு சொற்களும் ஒரே பொருளைக்குறிக்கும் இரு சொற்கள் ஆகிறது. அன்னை, தாய் என்பது போல.

எனவே சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக என்று சொல்வது இரண்டு முறை சாந்தி என்றோ இரு முறை சமாதானம் என்றோ சொல்வதாகிறதே எப்படி அப்படி சொல்வார்களா?

ஆகவே அதன் அரபிய மூலமான "அசாலாமு அலைக்கும் வ" என்பதன் பொருளைத்தேடினேன்.
அதற்கு உலகெங்கும் பொதுவாக சுருக்கமாக "Peace be upon you" என்று சொல்வதாக போட்டிருந்தார்கள். இதன் பொருள் சமாதானம் நிலவுவதாக என்பதாகும்.

இரானில் "peace and health upon you" என்ற பொருளில் பயன்ப்படுத்துகிறார்களாம். தமிழில் அமைதியும் (அ)சமாதானமும் ஆரோக்கியமும் நிலவுவதாக என்பதாகும்.

ஆனால் இதுவே முழு முகமன் கிடையாது , முழுசாக "அசலாமு அலைக்கும் வ ரகமத்துல்லா வ பரக்கத்து" என சொல்லப்படுகிறது.
இதனை தமிழில் மொழிப்பெயர்த்தால் "சமாதானமும் அல்லாவின் கருணையும் (அ)இறையருளும் நிலவுவதாக" என்றோ அல்லது "அமைதியும் ஆரோக்கியமும் இறையருளும் நிலவுவதாக" என்றோ தான் மொழிப்பெயர்த்து பயன்ப்படுத்தி இருக்க வேண்டும்.
பரக்கத் என்பதற்கு அபிவிருத்தி என்றும் ஒரு பொருள் இருக்கிறது. சாப்பிடும் போது சொல்லும் வாக்கியத்தில் பரக்கத் என்பது அபிவிருத்தியாகவே பொருள் கொள்ளப்படுகிறது.

ஆகவே அரேபிய மூலத்தில் இல்லாத ஒன்றை தமிழில் அடுக்குத்தொடர் போல் ஒரே பொருள் தரும் இரண்டு சொற்களைப்பயன்ப்படுத்தக்காரணம் தவறான மொழிப்பெயர்ப்பே என நினைக்கிறேன்.

அந்த காலத்தில் தவறாக மொழிப்பெயர்த்திருந்தாலும், சொல்லிக்கொடுத்திருந்தாலும் அதனை சரிப்பார்க்க வாய்ப்பிருந்திருக்காது, ஆனால் இது இணைய உலகம், எதனையும் அறிந்து கொள்ள முடியும். சாந்தியும் சமாதானியும் சண்டையின் போது யாருமே அலசி ஆராயாமல் சண்டைப்பிடிக்க ஒரு வாய்ப்பு விடக்கூடாது என்று பாய்ந்ததாகவே இப்போது எனக்குப்படுகிறது.

இந்தப்பதிவிலும் ஏதேனும் பிழைகள் இருக்கலாம் சுட்டிக்காட்டவும், மேலும் அரபியும், தமிழும் தெரிந்தவர்கள் எது உண்மை என்று விளக்கினாலும் நன்றே!

மற்றப்படி சிலம்பாட்டம் ஆட ஆசைப்படுபவர்களை "பிதா சுதன் புனிதப்பேயோ, அல்லா ரக்காவோ ,அனுமானோ இரட்சிப்பாராக..ஆமென்!
-------------------------------------------------------------------------------------

விளக்கம் தேடியப்போது எனக்கு கிட்டியவை, ஆங்கிலத்தில் இதில் இருப்பதைத்தான் தமிழில் சொல்லியிருக்கிறேன்.சுட்டிகளும் உள்ளது , படித்துப்பாருங்கள்.


Assalamu Alaikum Wa (السلام عليكم و رحمة الله و بركاته)
Rahmatullahi Wa Barakatuh (السلام عليكم و رحمة الله و بركاته)
Grammar: greeting; 6 words;
"Peace be unto you and so may the mercy of Allah and His blessings". It is the full version of the Islamic greeting.

http://www.islamic-dictionary.com/index.php?word=assalamu%20alaikum%20wa%20rahmatullahi%20wa%20barakatuh
-----------------------------------------------------------------------------------


Definition: A common greeting among Muslims, meaning "Peace be with you." The appropriate response is "Wa alaikum assalaam" (And upon you be peace.)

Extended forms include "Assalamu alaikum wa rahmatullah" (May the peace and mercy of Allah be with you) and "Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh" (May the peace, mercy, and blessings of Allah be with you).

http://islam.about.com/od/glossary/g/gl_salaam.htm
---------------------------------------------------------------------------------------------

The Prophet said, "Allah created Adam in his image, sixty cubits (about 30 meters) in height. When He created him, He said (to him), ‘Go and greet that group of angels sitting there, and listen what they will say in reply to you, for that will be your greeting and the greeting of your offspring.’ Adam (went and) said, ‘As-Salamu alaikum (Peace be upon you).’ They replied, ‘As-Salamu ‘Alaika wa Rahmatullah (Peace and Allah’s Mercy be on you).’ So they increased ‘wa Rahmatullah’ The Prophet added, ‘So whoever will enter Paradise, will be of the shape and picture of Adam. Since then the creation of Adam’s (offspring) (i.e. stature of human beings) is being diminished continuously up to the present time." (Sahih al-Bukhari, Volume 8, Book 74, Number 246)

http://www.iqrasense.com/muslim-character/assalamu-alaikum-origin-and-meaning-of-the-muslim-greeting.html
----------------------------------------------------------------------------------------------------