Sunday, November 06, 2011

பிவிட்டர்-1#வவ்வால்

                                 பிவிட்டர்-1#வவ்வால்                                          

கூகிள்காரன் பதிவுனு ஒன்று ஆரம்பித்ததும் எல்லாம் ஓடி வந்து ஆரம்பித்துக்கொண்டோம்,பெருமையாகவும் நினைத்துக்கொண்டோம்!

அப்புறமா டிவிட்டர் , கூகிள் பஸ், முகநூல் என எது வந்தாலும் ஓடிபோய் ஏற மக்கள் தாயாராயிட்டதும் ,எல்லாம் சமூகவலையாச்சு(இதுல அதுல சேராதவங்கள கற்கால மனிதன் போல பார்த்ததுகள் சிலது) . ஆனா என்னா ஆச்சுனா ஆரம்பத்தில ஆர்வமா பஸ்ல தொங்குனவங்க, டிவிட்டுனவங்க,எல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு , இதுல போடுறது எல்லாம் ரொம்ப நாள் இருக்காது பதிவுல பதிய வச்சா தான் காலா காலத்துக்கும் இருக்கும்னு அங்கே போட்ட அதே மொக்கைய இங்கே காபி&பேஸ்ட் பண்றாங்க!(ஏன் கல்வெட்டுல செதுக்கி தஞ்சை பெரியகோவிலில் வைக்கிறது தானே)

இதுல இருந்து தெரிவது என்ன என்றால் வாழ்கை மட்டும் வட்டமில்ல , இணையமும் வட்டம் தான்.

ஹி..ஹி இவங்களாம் அங்கே போய் அனுபவப்பாடம் கத்துக்கிட்டு அப்புறமா இங்கே வந்து அத காபி & பேஸ்ட் பண்றாங்க,அனுபவம் நல்ல ஆசான், ஆனால் அடுத்தவங்க அனுபவம் நல்ல கைட்!

எனவே கோணார் நோட்ஸ் படிச்சு தமிழ்ல பாஸானவன் என்ற காரணத்தால் ,இவங்க செய்த அதே வேலைய சுளுவா இப்போ நான் செய்யப்போறேன்.

சின்ன சின்ன குறுஞ்செய்தியா போட்டா அது டீவிட்டராம்,பஸ்ஸாம்(எங்க ஊர்ல பஸ்ஸுக்கு சக்கரம்ல்லாம் இருக்குமே) எனவே நான் குறு(ம்பு)ஞ்செய்தியா நேரடியா பதிவில போட்டுக்க போறேன், (எவன்/எவள் படிச்சா எனக்கு என்னா) அதனால அப்படி குறுஞ்செய்தி பதிவில போட்டா ஒரு நாமகரணம் வைக்கணுமே, இதெல்லாம் சப்ப மேட்டர், டீவீட்டர் போல  பிலாக்ல  போட்டா அதுக்கு பேரு பிவீட்டர் னூ வைக்காம வேற என்ன வைக்க?

இனிமே நம்ம பிவீட்டர்கள் ,என் உற்சாகத்துக்கு ஏற்ப வரும்! படித்து துன்புறுங்கள்! உங்களை எந்த ஆண்டவனும் இரட்சிக்கவே மாட்டான்/ள்.

--------------------------

#விசய்,அசித் பட பஞ்ச் டயலாக்கை பதிவில் கேளி செய்பவர்கள் டீவிட்டரிலும்,பஸ்ஸிலும் பஞ்ச் டயலாக் செய்வதே வேலையாக இருப்பதேன்#வவ்வால்

#பதிவுக்கு வரும் போது ,அய்யா சாமி பின்னூட்டம் போடுங்க என கெஞ்சுபவர்கள் ,சில நாட்களீல் இது என் பதிவு,என் பின்னூட்ட பெட்டி என நமக்கே பாடம் நடத்துவது ஏன்#வவ்வால்

#அன்புள்ள விசய்க்குனு மொக்கைப்படத்துக்கு கூட அன்புடன் விமர்சனம் எழுதும் சிகாமணிகள்,சூர்யா படத்துக்கு அப்படி அன்புள்ள என்றேல்லாம் விளிப்பதில்லையே ஏன்?#வவ்வால்

#ஓசியில் படம் பார்த்தால் 10 ஆண்டு பொட்டியில் தூங்கிய படம் என்றாலும் சூப்பர் என்னும் சிகாமணீகள், புத்தம் புதிதாக வரும் படத்தை காசு கொடுத்துப்பார்த்தால் 35/120 என காசுக்கு மார்க் போடுறாங்கப்பா!#வவ்வால்

#சிலர் தப்பு தப்பாக மொழிப்பெயர்த்து கொண்டு "நடு சென்டர் "போல பேசிக்கிட்டு பதிவுல அலையுறாங்க அதை சொன்னால் ஷைத்தான் என்கிறார்கள் என்னை! அவர்கள் மீது சாணியும்,சந்தனமும் பரவுவதாக!#வவ்வால்

--------------------------------

இது முதல் பிவீட்டர் என்பதால் இத்தோட கடைய மூடி,லைட் ஆப் பண்றேன்..இம்சை தொடரும்!