Tuesday, May 01, 2012

INTERACTIVE LEARNING or DISCUSSION





ஒரு கருத்து பரிமாற்றத்தில் ஒருவர்  கருத்து வழங்குபவராகவும் மற்றவர்களும் பெறுபவர்களாக அதாவது கேட்பவர்களாகவும் இருப்பது மரபுவழி கருத்துரையாடல் அதே சமத்தில் கருத்துரைஞர் தானே பேசிக்கொண்டிராமல் பார்வையாளர்களிடம் கேள்விகள் கேட்டுப் பதில் பெற்று அதன் மீது விரிவான விளக்கம் அளிப்பது மேலும்  பார்வையாளர்களை கேள்விக்கேட்க தூண்டி அதனடிப்படையில் விளக்கங்களை அளிப்பதும் பங்கேற்பு கற்றல் மற்றும் கலந்துரையாடல்  (INTERACTIVE LEARNING or DISCUSSION)எனப்படும் இது தான் தற்போதைய புதிய தலைமுறைக்கற்றல் ஆகும்.

பாரம்பரியமாக நமது கல்விக்கூடங்களில் ஆசிரியர் அவர்ப்பாட்டுக்கு பாடம் சொல்லிப்போவார் மாணவர்கள் கேட்பது ஒன்றே கடமையாக அமர்ந்திருப்பார்கள் ,கேள்விகளோ ,விளக்கங்களோ கேட்டால் அதிக பிரசங்கி ,போன மாதத்தேர்வில் என்ன மார்க் வாங்கின, என்ன ரேங்க் வாங்கின , பேச்சுக்கு மட்டும் குறையில்லை உட்காரு என்று மண்டையில் குட்டுவார்கள். அப்படித்தான் பதிவுகளும் இருக்கு யாரேனும் எழுதுவார் படிப்பவர்கள் நல்லப்பகிர்வு என்று தலையாட்டுவார்கள் ,அதற்கு கருத்துரையாடல் செய்ய முற்பட்டால் உனக்கு எல்லாம் தெரியுமா என ஏவுகணை விடுவார்கள்.

இது போன்ற ஒரு தலைப்பட்சமான கருத்து பரிமாற்றங்களை மாற்ற உத்தேசித்து புரட்சிகரமான ஒரு பதிவினை "INTERACTIVE LEARNING or DISCUSSION" ஆக ஒரு பதிவிட்டேன் அதற்கு பின்னூட்ட பதிவு எனவும் நாமகரணம் சூட்டினேன். ஆனால் மக்களுக்கு INTERACTIVE LEARNING or DISCUSSION என்பதில் இன்னும் சற்று குழப்பம் இருக்கிறது என நினைக்கிறேன் எனவே தெளிவாக விளக்க முனைவர் கவுண்டமணி .டாக்டர் ஆப் சிரிப்பாலஜி அவர்களை கவுரவ விரிவுரையாளராக அழைத்துள்ளேன் அவரது காணொளி மூலம் பங்கேற்பு கற்றல் மற்றும் கலந்துரையாடலின்  முழு பரிமாணத்தினையும் விளக்குவார் அதனைக் கண்டு களியுங்கள்!

பங்கேற்பு கற்றல்(அ) கலந்துரையாடல் விளக்கப்படம்:



தமிழ் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட எப்படி எல்லாம் பாடுபடுகிறான் இந்த வவ்வால் என இன்று யாரும் நினைத்துப்பார்க்காமல்  இருக்கலாம் ஆனால் நாளைய சரித்திரம் சொல்லும் "அன்றே வவ்வால் என்றொரு வல்லவன், நல்லவன்" சொன்னான் என"

ஹி...ஹி இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை நீ எல்லாம் வல்லவன்,நல்லவானா இதெல்லாம் "கொளுத்துற வெயிலில்  கொரங்கு குல்லா போட்டுக்கிட்டு எவனாவது சூடான டீயா ஊதி ...ஊதிக்குடிச்சுக்கிட்டு இருப்பான்" அவன்க்கிட்டே போய் சொல்லு நம்புவான் ,இங்கே வேணாம் தம்பின்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது ...ச்சும்மா தமாசு :-))

பின்குறிப்பு: 

#நாம என்ன தான்  விஞ்ஞான ,தத்துவ கருத்து சொன்னாலும் எல்லாத்தையும் கேட்டுவிட்டு கடைசியில் வாழைப்பழ காமெடி ஆக்கிடுவாங்க மக்கள் :-))

#படங்கள்,காணொளி கூகிள்,யுடுயுப் ,நன்றி!

*************

may day-1,occupy wall street,social justice, financial justice,என்ன இணைப்பு?




என்னமோ பெருசா சொல்லப்போரேன்னு யாராவது ஓடி வந்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல, என்ன இணைப்பு என்று அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என யாருக்காவது மனசுல அரிச்சா பின்னூட்டத்தில கேளுங்க பதிலா சொல்கிறேன், ஹி..ஹி... பதிவு போட்டுவிட்டு பின்னூட்டம் வருமா என எல்லாம் காத்திருப்பாங்க எத்தனை நாளுக்கு தான் அதே பாணில பதிவு போடுறது ,எனவே பின்னூட்டம் வந்தா பதிவு வரும் அதாவது பதிவுக்கு பின்னூட்டம் இல்லை இங்கே பின்னூட்டத்திற்கு பதிவு போடப்படும் :-))

யாருக்காவது கோவம் பொத்துக்கிட்டு வந்தா மேல போட்டு இருக்க படத்த ஒரு 5 நிமிடம் உத்து பாருங்க கூலாகிடுவிங்க :-))