Friday, August 24, 2012

Total recall:2007 ஆகஸ்ட்-5 தமிழ்ப்பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறை.



வலைப்பதிவர்கள் சந்திப்பு ஆகஸ்ட் 26,2012 அன்று நடக்க இருப்பது அனைவரும் அறிந்ததே ,முதலில் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்தினை சொல்லிவிடுகிறேன்...

வலைப்பதிவு சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!



அதிக இடித்தல் (hits)வாங்கும் நோக்கில் இச்சந்திப்பினை ஒட்டி பலரும் பலவிதமாக புனைவுகளை முன்வைத்து பதிவுகளை போட்டு இருக்கிறார்கள், பெரும்பாலான புனைவுப்பதிவுகள் "மது" என்ற ஒன்றினை முன்னிறுத்துகின்றன, ஆனால் அவர்கள் சொல்வது உண்மையில்லை என அவர்களுக்கே தெரியும்,இருந்தாலும் ஏதோ ஒரு மனமயக்கத்தில் அப்படியெல்லாம் பேசுகிறார்கள் என நினைக்கிறேன்.

தமிழ்ப்பதிவர் சந்திப்பில் இது ஒன்றும் முதல் பெரும் சந்திப்பும் இல்லை ,கடைசியான ஒன்றாகவும் இருக்கப்போவதில்லை, தொடரும் நிகழ்வாகவே இருக்கும்.இதற்கு முன்னர் இப்போது விட தொழிற்நுட்பம் ,பொருளாதாரம் என பல வகையிலும் பிந்தங்கிய காலமான 2007 இல் மிகப்பிரம்மாண்டமான பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறை ஒன்றினை ,இணையம்,கணினி என சகல தொழிட்பத்துடன் , நேரடி கற்றல் முகாமாக சென்னை பல்கலை வளாகத்தில் நடத்திக்காட்டி இருக்கிறார்கள் தமிழ்ப்பதிவர்கள் என்பதை தற்போது புதிதாக வந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்,சில பழைய திமிங்கில பதிவர்களும் மறந்திருக்க கூடும் என்பதால் ஒரு டோட்டல் ரீகால் டு 2007 ஆகஸ்ட்-5 தமிழ்ப்பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறையினை இப்போது காணலாம்.


தமிழ்ப்பதிவர்களின் முதல் பெரும் பதிவு பட்டறைக்கு பெரிதும் உழைத்து முன்னெடுத்து சென்றப்பதிவர்களின் பட்டியல், நினைவில் இருந்து எழுதுவதால் சிலர் விடுப்பட்டிருக்கலாம், மன்னிக்கவும் ,மேலும் சில பதிவுகளை தேடி அவர்கள் பட்டறைக்குறித்து வெளியிட்ட அனுபவப்பதிவுகளையும் இணைத்துள்ளேன்.அனைத்தும் தேடி எடுக்க அவகாசம் இல்லை எனவே சில மட்டுமே இருக்கும், விடுபட்டவர்கள் மன்னிக்கவும்.

(தமிழ்மணத்தினை செதுக்கிய சிற்பி"காசி"அண்ணாச்சி,உடன்,முகுந்த்,இகரஸ் பிரகாஷ்.)

மா.சிவகுமார்,

"தமிழ்மணம்"காசி அண்ணாச்சி.

உண்மைத்தமிழன்,

செந்தழல் ரவி,

பொன்ஸ்,

சிந்தாநதி,

பாலபாரதி,

நாமக்கல் சிபி,

லக்கிலுக்'யுவகிருஷ்ணா"

"ஓசை"செல்லா.

வினையூக்கி,

விக்கி,

நந்தா,

ரவிஷங்கர்,

பெனாத்தல் சுரேஷ்,

மற்றும் பலர், pre production, execution,post production, என பலவகையிலும் பலரும் பங்காற்றினார்கள், tamilbloggers.org என்ற இணையத்தளம் முதற்கொண்டு உருவாக்கி தொழிற்நேர்த்தியுடன் செயல்பட்டார்கள்.எனவே எத்தனையோ பேரின் பங்களிப்புண்டு, அனைவரும் என் நினைவில் இல்லை,மேலும் அப்பொழுதும் நான் வாசகனாக/பார்வையாளனாக/முகமூடியாகவே இருந்தப்படியால் படித்தவற்றையே இங்கு சொல்கிறேன்."I din't have any first hand experince on that event" so errors and omissions except!


அன்றைய பதிவர் சந்திப்பு மற்றும் பட்டறையும், இன்றையப்பதிவர் சந்திப்பும் தற்செயலாக ஆகஸ்ட் மாதத்தில் அமைந்துள்ளது எனலாம்.

பெண்கள் பலர் பட்டறையில் ஆர்வமுடன் கலந்துக்கொண்டக்காட்சி!
-------------------

கீற்று இணையதளத்தில் பதிவர் பட்டறையின் சுற்றறிக்கை,நிகழ்ச்சி நிரல், என முதன்மை விவரங்கள் வெளிவந்தது .

கீற்று இணைய தளத்தில்...
பதிவர் பட்டறை-2007 ஆகஸ்ட்-5
எப்போ?
ஆகஸ்டு 5, 2007 - ஞாயிற்றுக் கிழமை

எங்கே?
சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கு - மெரினா வளாகம் (Marina Campus)

எவ்வளவு நேரம்?
காலை ஒன்பதரை மணி முதல் மாலை ஐந்து மணி வரை பட்டறை நடைபெறும்.

எதற்கு?
பதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு தொடர்பு-பின்னல்(network) உருவாக்குவது.
பயன் தரக் கூடிய தகவல்களை அளிப்பது.
புதியவர்களுக்கு வலைப்பதிவு, தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்
பதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்
பதிவர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.
இணையத்தில் தமிழ் தழைக்க பணி புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தல்
இன்னும் ஏதாவது சேர்க்க விரும்பினால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

மேலும் படிக்க அழுத்தவும்:
------------------------------------
(பட்டறையில் ஒரு பாடம்"எடுப்பவர் "விக்கி")

-----------------------------------
எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் திரு.பாமரன் (கோவை)அவர்கள் பதிவர் பட்டறைக்கு காணொளி மூலம் வாழ்த்து சொல்லியிருந்தார், இதற்கான முயற்சிகளை எடுத்தது பல்லூடக நிபுணராக அப்பொழுது விளங்கிய "ஓசை" செல்லா என்றப்பதிவர் ஆவார். போட்டோகிராபி இன் தமிழின் அங்கத்தினர்.

அவர் அப்போது உடனுக்குடன் புகைப்படங்கள் எடுத்து கைப்பேசி மூலம் பதிவேற்றி அசத்தினார், அப்போதைய இணைய வேகத்திற்கு அது அபாரசாதனை என்பதை நினைவில் கொள்ளவும்.

எழுத்தாளர் பாமரனின் வாழ்த்து.

----------------

பதிவுலநண்பர் மோகன் தாஸ் ,தனது பதிவர் பட்டறை அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ,இப்பொழுது படித்தாலும் சுவாரசியமாக இருக்கிறது.

மோகன் தாஸ் அவர்களின் பதிவில்...

ஆரம்பத்தில் இருந்தே முதல் முறையாக பட்டறை நடத்துகிறார்கள் என்ற எண்ணம் துளி கூட வராத அளவிற்கு பட்டறை நடத்தியவர்களின் செயல்பாடுகள் இருந்தன. நிறைய இடங்களில் "ச்ச எப்படி யோசிச்சு செஞ்சிருக்காங்க" என்று புருவம் தூக்கிக் கொள்ளும் கேள்விகள் வரும் அளவிற்கு நிறைய விஷயங்களைச் சின்ன சின்ன விஷயங்களானாலும் சரி பெரிய விஷயமானாலும் சரி செய்திருந்தார்கள். அவர்களுக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள், பட்டறைக்கு கீறிக் கூட ஒன்றும் செய்யவில்லை என்றாலும், சிறு சிறு நாடகங்கள் நடத்தி கல்லூரிகளில் விழாக்கள் நடத்தி - பங்குபெற்றவன் ஆதலால் நிச்சயமாய் அவர்கள் செய்திருந்த முன்னேற்ப்பாடுகள் பற்றி ரொம்பவும் பெருமையாகவே சொல்லமுடியும். நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும்...

முழுவதும் படிக்க சுட்டியை அழுத்தவும்:
-------------

மோகன் தாசின் பதிவு மட்டும் இல்லை கண்ணும் பேசும் ,அதாவது கேமிரா கண்ணன் அவர் ,அவரது கேமராவில் சுட்ட பதிவர்ப்பட்டறையின் அழகானப்படங்கள் காண சுட்டியை அழுத்தவும்.

-------------------
"youthblogger" 'தருமிய்யா மற்றும் மாலன்
----------------------------

அக்காலத்தில் பெண்ப்பதிவர்களில் கலக்கியப்பதிவர்,போக்கிரி என்ற வலைப்பதிவின் ஓனர், வலைச்சரத்தின் ஆதாரம், என பல முகம் உண்டு.சென்னையில் நடந்த முதல் பதிவர் பட்டறைக்கு மிகவும் பாடுப்பட்டுள்ளார், அவரது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.படித்துப்பாருங்கள்.

பொன்ஸ் அவர்களின் பதிவில்...

முதல் அமர்வு தகடூர் கோபி தமிழ் குறியேற்றங்கள், விசைப்பலகை, போன்றவற்றை விளக்கினார். அப்போதே திருவள்ளுவர் அறை, இடம் கொள்ளாத கூட்டமாக திரளத் தொடங்கிவிட்டது. நின்றபடி எல்லாம் கேட்டார்கள் மாணவர்கள்.

அடுத்த அமர்வாக வந்த தமிழியின் ப்ளாக்கர், வோர்டுபிரஸ் விளக்கத்திற்கும் கூட்டம் அலைமோதியது. ஆர்வமாக கேட்டவர்கள், மிகவும் உதவியாக இருந்தது என்றும் சொன்னார்கள். ‘ஏங்க, அவரு, தமிழி பேராசிரியருங்களா? இத்தனை நல்லா எடுக்கிறாரே!’ என்று ஒருவர் என்னிடம் வந்து கேட்டுவிட்டுப் போனார்!

HTML அறிமுகம் கொடுக்க வந்த செந்தழல் ரவி, HTML மட்டுமின்றி ஒரு அடிப்படைக் கணிமை தொடங்கி வலைபதிதல் வரை மிகவும் விரிவாகவே சொல்லிக் கொடுத்துவிட்டார். செல்லாவின் ஒலி ஒளிப்பதிவுகள், கோபியின் எழுத்துரு மாற்றப் பயிற்சி என்று கேன்சலான பிற அமர்வுகளின் நேரமும் சேர்த்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், ரவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அமர்ந்து கேட்டனர் மாணவர்கள். இடையில் உணவு இடைவேளை எல்லாம் இருந்தும், தலைவர் தொடர்ச்சி விட்டுப் போகாமல் வகுப்பெடுத்ததாக கேள்வி!

முழுவதும் படிக்க செல்லவும்->

-------------------------------

(முகுந்த் ,ஈ-கலப்பையை செதுக்கிய இணையக்கார்பெண்டர்,உடன் மா.சி)

(நன்றி சொல்லும் பட்டறை நிர்வாகிகள், மைக் வைத்திருப்பவர் பாலபாரதி,நீலச்சட்டை கண்ணாடிக்காரர் மா.சி)

-------------------------------

அண்ணாச்சி உண்மைத்தமிழனை அறியாதோர் இருக்கமுடியாது, அவர் பதிவர் பட்டறைக்கு பெரிதும் உழைத்தவர், பஞ்சர் ஆன வண்டியை எல்லாம் வேர்வை வழிய மூச்சு வாங்கி தள்ளித்தான் பட்டறையை நடத்த உதவியுள்ளார்.மேற்கொண்டு நீங்களே படிச்சுப்பாருங்கள் அதிகமில்லை ஒரு 5 அல்லது 6 பதிவு கொஞ்சமா 500 பக்கத்தில் தான் எழுதி இருப்பார் :-))

உண்மைதமிழன் அவர்கள் பதிவில்...

இந்த முனையில் இருந்து அந்த முனைவரை வியர்வையில் குளித்தபடியே தள்ளிக் கொண்டு வந்தவன் நேரத்தைப் பார்த்தேன். மணி 10. இனி அவ்வளவுதான்.. ஆட்டோ புடிச்சு 500 ரூபாவுக்கு செலவுதான் என்று நினைத்து காளியப்பா மருத்துவமனை அருகே வந்து சோர்வாக நின்றேன்.

மேலும் படிக்க அழுத்தவும்:

Read more:# truetamilan
--------------

சிவபாலன் என்றப்பதிவர் அப்பொழுது புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வந்த செய்தியுடன் பட்டறைக்குறித்து தனது கருத்தினைப்பகிர்ந்த்துள்ளார்.


சிவபாலன் அவர்களின் பதிவில்...

மேலும் படிக்க அழுத்தவும்:
--------------------------------------------

(பட்டறை நடக்கும் போதே என்னா தில்லா குடிக்கிறாங்கப்பா ...ஹி...ஹி அது காப்பி தான்னு சொன்னா நம்பவா போகுதுங்க அப்ரண்டீசுகள்)


---------------------------------------------

பதிவர் ஜே.கேயின் பதிவில் அவரது பட்டறை அனுபவங்களை படித்துப்பாருங்கள்...

ஞாயிறு காலை, சிவக்குமார், பொன்ஸ் ஆகியோர் சில Extension Boxes கொண்டுவந்தார்கள். உண்மைத்தமிழன், தகடூர் கோபி, மற்றும் அதியமான் டெஸ்க்கை சரி செய்து கணினிகளை வரிசைப்படுத்த மிகவும் உதவினார்கள். பின் தான் எல்லா கணினிகளிலும் எ-கலப்பை நிறுவ வேண்டியதாயிற்று. 9 - 9.30 க்குள் 5 முறைக்கு மேல் மின்சாரம் நின்று வந்ததால், கொஞ்சம் கலக்கம் ஆகிவிட்டது.

மேலும் படிக்க அழுத்தவும்:

-----------------------------------------

(இந்த சேப்பு சட்டைக்காரர் யாருன்னு சரியா சொல்றவங்களுக்கு புதிய தலைமுறையின் ஒரு பழைய காப்பி சன்மானமா கிடைக்கலாம் :-))}

------------------------------------------

பதிவர் நந்தா அவர்கள் தனது அனுபவங்களைப்பகிர்ந்துக்கொண்டுள்ளார்.பட்டறை உழைப்பாளிகளில் ஒருவர்.

நந்தா அவர்களின்பதிவில்...

Physically challenged என்று சொல்லப்படுபவர்களில் ஒரு சிலர் வந்திருந்தனர். அவர்களில் கண்பார்வை குறைபாடு உடையவர்கள் என்னிடம் சொன்னது, “சார் இங்க பேசுனதை எல்லாம் கேக்க ரொம்ப ஆர்வமா இருக்கு. ஆனா நாங்க பண்றது இது சாத்தியமா?”. நான் அவர்களிடம் சொன்னது, நீங்கள் எழுதிதான் வலைப் பதிய வேண்டும் என்று அவசியமில்லை சார். ஒலிப்பதிவுகளாகவும் பதிவுகளிடலாம். நீங்கள் அதற்கு தயாராயிருந்தால் சொல்லுங்கள், உங்களது பதிவை வெளிச்சத்திற்குக் கொண்டு வர இங்கே பலர் இருக்கிறோம் என்று. அந்த அன்பர்கள் எங்களில் ஒரு சிலரின் தொலைபேசி எண்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க அழுத்தவும்.
------------------

ஓசை செல்லா அப்போதைய பல்லூடக விற்பன்னர், நிறைய புகைப்படங்களுடன் ,உடனுக்குடன் பட்டறையை இணையத்தில் ஏற்றினார், பட்டறைப்புகைப்படங்கள் நிறைய காணக்கிடைக்கின்றன.

ஓசை செல்லாவின் பதிவில்...


சந்திப்புக்கு முன் தினம் "தாகசாந்தியில்"தோழர்கள்


அடுத்தநாள் பட்டறையில் சுமார் இரண்டு மணி நேரம் ஓரமாக நின்று வகுப்பெடுக்காமல் பார்வையாளர் கூட்டத்தோடு கலந்து இணைய தொழில்நுட்ப வகுப்பெடுத்து அசத்திய "செந்தழல் ரவி" , (போதையில் இதெல்லாம் சாத்தியமா?) வேலைன்னு வந்த்துட்டா தீயாய் வேலை செய்வாங்க ,ஜாலின்னா பட்டாசா வெடிப்பாங்க அதான் தமிழ்ப்பதிவர்கள்.

மதுவுக்காக யாரும் பதிவர் சந்திப்போ, பட்டறையோ நடத்துவதில்லை, நிகழ்சிக்கு முன்னர், பின்னர், அவரவர் வசதிக்கு நண்பர்களுடன் அளவலாவ ஏதோ ஒரு இடத்தில் சந்தித்து தங்கள் கேளிக்கைகளை வைத்துக்கொள்வார்கள் என்பது கூட புரியாதவர்களுக்காகவே இப்படங்களை இணைத்துள்ளேன் மேலும் படங்கள் ஓசை செல்லாப்பதிவில் உள்ளது.

பி.கு: இப்படங்கள் செந்தழலுக்கோ மற்றவர்களுக்கோ மனவருத்தம் ஏற்ப்படுத்துமாயின் நீக்கப்படும், ஆனால் அனைத்துப்படங்களும் ஓசை செல்லாவின் தளத்தில் உள்ளது,நன்றி!


பட்டறைப்படங்கள்.

#http://chellaonline.blogspot.in/
-----------

குளோபல்வாய்ஸ் என்ற இணையத்தளத்தில் புகைப்படத்துடன்ன் வந்த செய்தியைக்காண செல்லவும்...


------------

பதிவர் சத்தியா ,அப்போதே கரைசல் செய்த ஒரு பதிவருக்கு விளக்கமாக பதில் கொடுத்துள்ளார்.

சத்தியா அவர்களின் பதிவில்...

பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார். உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும்
வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால்
பதிலளிக்க முயல்கிறேன்.

மேலும் படிக்க அழுத்தவும்:


------------------------------------

(சங்கத்தமிழர்கள் என நிறுபிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினர், முதுகு தெரியுது ,மூஞ்சு தெரியல ஒத்துக்க மாட்டோம்னு சொல்லிடாதிங்க!!)

------------------------------------

கப்பி கய் என்றப்பதிவர் ,பட்டறையின் பின்விளைவாய் ஒரு காமெடி பதிவுப்போட்டுள்ளார் ,படித்து மகிழுங்கள்.

கப்பிகய் பதிவில்...

பல பிரபலங்களும் எழுத்தாளர்களும் இந்தி திரைப்பட நடிகர்களும் பதிவெழுத ஆரம்பித்திருப்பதை அறிந்த நம் கோலிவுட் நட்சத்திரங்கள் தாமும் பதிவுலகிற்குள் எண்ட்ரி கொடுக்க ஆயத்தமாக வேண்டி வடபழனி கிரீன்பார்க் ஓட்டலில் டிஸ்கஷனில் இருக்கிறார்கள். ஹீரோவாக நடிக்க ஒரு புது இயக்குனரிடம் கதை கேட்க வரும் சந்தானம் அங்கிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்து ஜோதியில் ஐக்கியமாகிறார்.

மேலும் படிக்க அழுத்தவும்:
---------------

பின்குறிப்பு:

#மா.சிவகுமார், தமிழ்மணம் காசி அண்ணாச்சி இன்னும் சிலரின் பதிவுகளையும் தேடிப்பார்த்து அவர்கள் அனுபவங்களையும் இடலாம் என நினைத்தேன் , சிக்க மாட்டேன்கிறது ,சீக்கிரம் அப்டேட் ஆக இணைக்கிறேன்.மேலும் பலர் விடுபட்டிருக்கலாம் அனைத்தும் நேரமின்மைக்காரணமே எனவே மன்னிக்கவும்.

#பதிவர் சந்திப்பு என்பது சும்மா சந்தித்து கதைத்துப்போக என வரலாறு தெரியாமல் பலர் பேசிக்கொண்டு இருப்பதால் "வரலாறு முக்கியம்" பதிவரே என தொகுத்து வெளியிட்டுள்ளேன், இதிலும் அரசியல் செய்ய யாரேனும் நினைத்தால் அடியேன் பொறுப்பல்ல!

# புகைப்படங்கள் காணொளி உதவி யூடியூப், ஓசை செல்லா, மோகன் தாஸ், கூகிள், தளங்கள், நன்றி!

# கருத்து சுதந்திரம் இல்லாதவர்கள் ,இவ்விடம் கருத்து கூற முயலவேண்டாம், அப்படி கூறினால் அவை நீக்கப்படும்.


********