Wednesday, October 24, 2012

இசையும்-வசையும்:துவித்தர்கள் கைது.




நிகழ்காலத்தின் பரபரப்பு பிரபல்ய திரையிசை பாடகி மற்றும் சாஸ்த்திரிய சங்கீத பாடகி சின்மயி ஶ்ரீபதா அவர்களை துவித்தரில் ஆபாசமாக பேசி ,கொலை மிரட்டல்,பாலியல் வன்முறை என மிரட்டல் விடுத்த ஆறு பேர் மீது வழக்கு ,இருவர் கைது என்ற நிகழ்வாகும்.

மெய்நிகர் உலகான ,பதிவுலகு,துவித்தர் உலகு, முகநூல் உலகு , மற்றும் மின்வெட்டில் குதுகலிக்கும் மெய்யுலகு என அனைவரும் இந்நிகழ்வினை ,இந்நாளுக்கான பொழுது போக்கி என கூர்ந்து அவதானித்து சுவைபட எழுதியும் ,பேசியும் வருகையில் ,நிகழ்காலத்தின் நாட்டு நடப்புகள் பெரிதும் தெரியாமல் பெர்ஷியாவின் அக்கேமேனிய மன்னன் டாரியஸ்-1 கட்டிய பெர்சியாபொலிஸ் நகரம் எங்கே ,அரண்மனை எவ்வளவு பெரியது என கூகிளில் துழாவி சோம்பி திரியும் எனக்கும் லேசாக கிர்ரடிக்கவே என்ன தான் நடந்தது ,நடக்குதுன்னு மெல்ல சோம்பல் முறித்து இணையத்தில் துழாவினால் தொல்பொருள் ஆராய்ச்சியை விட சில சுவையான தகவல்கள் கிடைக்கவே ,பளீச்..பளீச் என என் மண்டைக்குள் பல்ப் எரிந்தது(பவர் கட்டிலும் பல்பு எரியுதாமா) ,அதனை இங்கே பகிர்கிறேன்.

துவித்தர் விவகாரம், விகாரமாக உருவாகி சைபர் கிரைம் வழக்காகி,கைதானதும் , தமிழக மீனவர்கள், இடஒதுக்கீடு என பலவற்றிலும் முதிர்ச்சியற்ற கருத்துகளை சொன்னது தான் விவாதமாகி, சண்டையாகி நின்றது என அனைவரும் சொல்வதால், அப்படி எல்லாம் இல்லை நான் தமிழ் பெண், தமிழ் வளர்த்த அய்யங்கார் பரம்பரை, தென் தமிழக மறவர் சீமை என்றெல்லாம் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தார் பாடகி அவர்கள்.இது மேலும் ஆர்வத்தினை தூண்டவே,துவித்தர் மட்டுமல்லாமல் ,வலைப்பதிவும் வைத்திருக்கிறாரே , அதுவும் ஆங்கில வலைப்பதிவு அதில் எதாவது தேறுமா என படித்துப்பார்த்தேன்.

அவரது  வலைப்பதிவுக்கு "என்ன பெயர் வைப்பது" என தெரியவில்லை ,அதாவது அதாங்க பெயரே "what to name it"(இதே போல பெயரில் இளையராஜா ஒரு இசை ஆல்பம்(how to name it) வெளியிட்டிருந்தார் என நினைவு , வீடு படத்தில் பின்னணி இசையாக இதனை தான் பயன்ப்படுத்தியிருந்தார்கள் எனவும் நினைவு)

இனி பதிவில் இருந்து....

# The Ramnad Connection

சுட்டி:http://www.chinmayisripada.com/2011/02/untitled-7-ramnad-connection.html

அவரது வலைப்பதிவில் 2011 வாக்கில் எழுதப்பட்ட  "ராம்நாட் கனெக்‌ஷன்" என ஒரு இடுகை படித்தேன், அதில் வருவதாவது.

ராமநாதபுரம் சமஸ்தான ராஜாவாகிய 'ஷண்முக ரகுநாத சேதுபதியும்" , இவரது தாத்தாவும் பால்யகால சினேகிதர்கள், கல்லூரி தோழர்கள், மேலும் கிரிக்கெட் ஒன்றாக விளையாடுவார்கள். இவரது தாத்தாவை ராஜா "கொரளி அய்யங்கார்' என அழைப்பார் எனவும் ,ராஜா அக்கால மத்திய அரசில் அமைச்சர் ஆக சில காலம் இருந்தார் எனவும் முதல் பத்தியில் வருகிறது.

படம்-1


இதில் சில சிறு  பிழைகள் இருக்கிறது,

ராஜாவின் சரியான பெயர் -ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி.

மத்திய அமைச்சராக இல்லை, சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி , முறையே ராஜாஜி,காமராஜர் காலங்களில் வீட்டுவாடகை நிர்ணய அமைச்சராக தமிழக அரசின் அமைச்சரவையில் இருந்துள்ளார்.

சுட்டி:

http://en.wikipedia.org/wiki/Shanmugha_Rajeswara_Sethupathi

காலம் கி.பி.1909-1967.

1967 இல் சுமார் 58 ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.

இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா, இருக்கு பொறுமை காக்கவும்.

தாத்தாவின் நண்பரான ராம்நாட் ராஜாவின் சகோதரி "கணேஷ குஞ்சர நாச்சியாரும்", சகோதரர் "காஷிநாத் தொரை" அவர்களும் ,பாடகியின் தாயாருக்கு நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்கள் என்றும், அப்போதெல்லாம் சென்னை செனடாப் சாலையில் உள்ள அவர்களது பெரியவீட்டில் பல புகழ்மிகு சாஸ்த்திரிய சங்கீத வித்வான்கள் பாடுவார்கள் என்றும் அங்கேயே பல மணிநேரங்கள் செலவிட்டு அவரது தாயார் இசை அறிவை பெருக்கிக்கொண்டதாகவும், மேலும் காஷிநாத் தொரை அவர்கள் பல சங்கீதவித்வான்கள் பாடிய சக்ர தனம், மண்டுக தனம், மர்கத தனம் ஆகியவற்றை அவரது தாயாருக்கும் எப்படி பாடுவது என பாடிக்காட்டுவாராம், மேலும் பல மணி நேரங்கள் இசைப்பற்றி பேசியும் பாடியும் அறிவை பெருக்குவதற்கு அடித்தளம் வகுத்தது எனவும் சொல்லியுள்ளார்.

படம்-2



இசை தெரிந்தவர்கள் இதெல்லாம் செய்வது சகஜம் தானே என நினைக்கலாம்,அட இருங்கப்பா அதுக்குள்ள நீங்களா ஒரு முடிவை எடுத்துக்கிட்டு ,இன்னும் வருது கதை...

படம்-3.





சிறுவயதில் தந்தைவிட்டு சென்றதால் இன்றளவும் தந்தைப்பெயரை வெளியில் சொல்வதில்லை, மேலும் அவரது தாயார் மிகக்கஷ்டப்பட்டு பாடகியை வளர்த்துள்ளார் என்பதும் தெரிகிறது.பாடகியும் இளம்வயதிலேயே நன்கு திறமைமிக்கவராக விளங்கியுள்ளார்.

தாயாருக்கு 15 வயது ஆகும் போது ஆண்டு 1985-86 ஆக இருக்க வேண்டும் என தெரிகிறது. அப்படியானால் அவர் பிறந்த ஆண்டு 86-15=1971  என வருகிறது.

திருமணம் சுமார் 1983 வாக்கில் ,அதாவது 12 ஆவது வயதில் நடந்துள்ளது. 1983 காலகட்டத்தில் பால்ய விவாகம் செய்யும் அளவிலேயே தமிழகம் இருந்துள்ளாதா? என்ன ஒரு கொடுமை இதனை இச்சமூகமும்,சட்டமும் அங்கீகரித்துள்ளதே.

பாடகியின் தாத்தா ராமநாட் ராஜாவின் கல்லூரி தோழர் எனில் அவரது வயதை ஒத்தவர்ராக இருக்கவேண்டும். அதாவது 1909-10 காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

பாடகியின் தாயார் பிறக்கும் போது தந்தைக்கு வயது 61 ஆகிறது என வருகிறது.அந்த காலத்தில் வயதான காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது சகஜமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

சரி அது போகட்டும் ராம் நாட் ராஜா "ஷண்முக ராஜேஷ்வர சேதுபதி 1967 இல் இறந்துவிடுகிறார் ,ஆனால் 1971 இல் பிறந்த பாடகியின் தாயார் எப்படி அவர் வீட்டில் நடந்த "அரசவை தர்பார் கச்சேரிகளை "கேட்டு அறிவை வளர்த்துக்கொண்டிருக்க முடியும்.அப்போது பிறக்கக்கூடயில்லையே.

மேலும் ராஜாவின் சகோதர,சகோதரிகளுக்கும் அப்போது சுமார் 50-55 வயது இருந்திருக்க வேண்டும், ஆனால் 1971 இல் பிறந்தவருக்கு நண்பர்களாக இருந்தார்கள் ,வீட்டில் நடந்த கச்சேரிகளில் பாடிய நுணுக்கங்களை பாடிக்காண்பித்து தாயாருக்கு அறிவு புகட்டினார்கள், மணிக்கணக்கில் இசைக்குறித்து பேசிக்கொண்டார்கள் என சொல்கிறார்.

1971 இல் பிறந்த குழந்தையாக இருந்திருப்பார், பேச ,பாட ஒரு 6 வயது ஆவது ஆகும் அப்படி எனில் 1977 இல் என வைத்துக்கொண்டாலும் அப்போது ராஜாவின் சகோதர ,சகோதரிகளுக்கு இன்னும் வயதாகி 60-65 வயதில் இருக்கலாம், அவர்களுக்கு பாடகியின் தாயார் நண்பர்கள், நெருக்கமானவர்கள் எனவும் சொல்ல முடியாது, சரி சின்னக்குழந்தையுடன் பழகினார்கள் என சொல்லலாம், ஆனால் ராஜாவின் வீட்டில் இசை தர்பார் நடக்கும் ,மணிக்கணக்கில் அங்கு இருந்து கற்றுக்கொண்டது,பட்டை தீட்டியது எல்லாம் இராஜா இறந்த பிறகு நடந்ததா? அதனை சொல்லவும் இல்லை.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல் என்னவெனில் அவரது தாயார் ஒரு வலைப்பதிவு வைத்துள்ளார் ,அதில் அவர் தனது 15 வயதில் சின்மயி பிறந்து, கணவன் விட்டு சென்ற பின் தான் முறைப்படி இசை பயில தொடங்கினேன், அது வரைக்கும் ஒன்றும் முறைப்படி தெரியாது என்கிறார்.இதெல்லாம் நடந்தது மும்பையில் என்றும் சொல்கிறார்.

ஆனால் பாடகியின் வலைப்பதிவில் ,சென்னையில் பல மணிநேரம் சங்கீத செஷன்ஸ் நடக்கும்,காஷிநாத் தொரை அவர்களும் , அவரது சகோதரியும் ,தாயாரும் பாடி,பேசிக்கொண்டு இருப்பார்கள் என்கிறார்கள்.60-65 வயதில் இருப்பவர்கள் 12 வயதுக்குள் உள்ள சங்கீதம் கற்காத சிறுமியுடன் ,சக்ர தானம்,மக்ர தானம் எல்லாம் எப்படி பாடுவது என சங்கீத விவாதம் செய்துள்ளார்கள்.

----------------

The Tanpura of Ustad Abdul Karim Khan saheb:

சுட்டி:http://www.chinmayisripada.com/2011/02/untitled-10-tanpura-of-ustad-abdul.html

அவரது இன்னொரு இடுகையில் அவரது தாயாருக்கு சங்கீதம் கற்றுக்கொள்ள பிரபல புல்லாங்குழல் வித்துவான் மாலி என்கிற டி.ஆர் மகாலிங்கம் 100 ஆண்டு பழமையான ustad-abdul Karim Khan saheb பயன்ப்படுத்திய தம்புராவை கொடுத்தார் என ஒரு சம்பவத்தினை சொல்லியுள்ளார்.

படம்-4



அதில் வருவதாவது, சங்கீதம் கற்றுக்கொள்ள சுருதிப்பெட்டி சரி வராது என குருவான த்வாரம் மங்காதாயாரு (தாத்தாவின் வளர்ப்பு மகளாம்)சொல்லிவிட்டு ,சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற போது மாலி அவர்களை சந்தித்த போது ஒரு தம்புரா பெட்டி கேட்டதாகவும் ,அவர் வைத்திருந்த 100 ஆண்டுகள் பழமையான தம்புராவை கொடுத்ததாகவும் சொல்லியுள்ளார். அதுவும் விரிவாக சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல ஆன கட்டணம், பார்சல் கட்டணம் மற்றும் தம்புராவை ஒரு இசைக்கடையில் காட்டி 40 ரூ என விலை நிர்ணயம் செய்து அனைத்து கட்டணமும் வாங்கிக்கொண்டே  கொடுத்தார்கள் என எழுதியுள்ளார்.

படம்-5



சுட்டி:http://padmhasinit.blogspot.in/2006/02/womens-rights-on-spirituality-contd.html

15 வயதில் தான் த்வாரம் மங்காதாயாரிடம் முதன் முதலில் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் என அவரது தாயார் பதிவில் எழுதியுள்ளார், அப்போது ஆண்டு 1985-86 ,இடம் பம்பாய்! மேலும் அதன் பிறகு பம்பாயில் வேலை தேடிக்கொண்டு அங்கேயே புதிதாக வாழ தொடங்கினேன் என்றே எழுதியுள்ளார், அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு பின்னரே சென்னை வந்தது போல இருக்கிறது.ஏன் எனில் சென்னையை விட்டு போய் 15 ஆண்டுகள் ஆனது போல ஒரு இடத்தில் வருகிறது.


சரி மும்பையாக இருந்தால் என்ன , பெங்களூரில் இருந்த மாலியிடம் தம்புரா வாங்கி இருக்கலாமே எனலாம். அங்கும் ஒரு அதிசயம் இருக்கிறது ,மாலி 1980-85 வரையில் அமெரிக்காவில் இருந்தார். 1986 இல் இந்தியா வுக்கு திரும்பி பெங்களூரில் சில மாதங்கள் மட்டுமே தங்கியிருந்து மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவின் காரணமாக இறந்துவிட்டார்.

சுட்டி: http://en.wikipedia.org/wiki/T._R._Mahalingam_(flautist)

1986 இல் இந்தியாவில் தங்கியிருந்த சில மாத இடைவெளியில் தம்புரா வாங்கியிருக்கலாம், ஆனால் மும்பை ,சென்னை என இடம் மாறுகிறது.ரொம்ப எல்லாமே ஒரு அசாதாரணமாக நடப்பது போன்றே எல்லா நிகழ்வும் உள்ளது.

இதோடு முடியவில்லை சில ஆண்டுகள் கழித்து மாலி சென்னைக்கு வந்து தான் கொடுத்த தம்புரா பத்திரமாக இருக்கிறதா எனப்பார்க்க ஆழ்வார் பேட்டையில் உள்ள இவர்கள் வீட்டிற்கும் வந்தார் என்கிறார் , தம்புரா நன்றாக பராமரிப்பது குறித்து மகிழ்வும் அடைந்தாரம்.ஏன் மாலி அப்படி செய்தார் எனில் தம்புராவை இசைக்கவில்லை எனில் அவரிடமே திரும்ப கொடுத்துவிட வேண்டும் ,அது பழமையான தம்புரா என நிபந்தனை விதித்தே கொடுத்தாராம் :-))

சென்னை, பம்பாய், பெங்களூர், அமெரிக்கா, 1986 என எல்லாம் ரொம்ப டிராமடிக்கா நடந்திருக்கு, பாவம் மாலி வேறு 1986 இல் இறந்துவிட்டார்.

ஒரு வேலை 1980க்கு முன்னரே தம்புரா வாங்கி கொடுத்தால் உண்டு ,ஆனால் மும்பையில் இசைக்கற்று கொடுத்தவர் பெயரும் த்வாரம் மங்காதாயார் எனவும், சொல்கிறார்கள்.

---------------

ஶ்ரீபதா என தனது குடும்ப பெயராக போட்டுள்ளார் பாடகி, ஶ்ரீபதா என்பது தெலுங்கு ஸ்மார்த்தா (வைதீகி)பிராமணர்கள் பயன்ப்படுத்தும் சர் நேம் , தமிழ்நாட்டில் புழக்கத்தில் இல்லை என அறிகிறேன். ஒரு வேளை ஆந்திராவில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்களாக இருக்கலாம், ஆனாலும் தமிழ்ப்பெண் , தாய்மொழி தமிழ், தமிழ் வளர்த்த பரம்பரை என சொல்வதெல்லாம் எப்படியோ?

இதெல்லாம் தமிழ்நாட்டில் தான் சாத்தியம்!
-------------------


இப்படிலாம் நடக்காதா எனலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம், எனக்கு படித்த போது தோன்றிய சந்தேகங்களை பொழுது போகாம எழுதி இருக்கிறேன், இதுக்கெல்லாம் கேசு போடுவாய்ங்களோ ?

ஒரு சினிமா பார்த்தால் லாஜிக் மிஸ்டேக்குன்னு ஒரு பட்டியல் போடுறாங்க, அதே போல சில பதிவுகளை படித்தேன் லாஜிக் மிஸ்டேக் போல இருப்பதை பட்டியலிட்டு இருக்கேன் , வேறொன்றுமில்லை .... ச்சே ..ச்சே ..வர வர நாட்டுல கருத்து சுதந்திரமே இல்லாம போச்சுப்பா ... பிட்டு படம் எல்லாம் இணைய தளம் வச்சு பப்ளிக்கா ஓட்டுறாங்க ,ஆனால் ஒரு அட்டு மேட்டரை கருத்தா சொல்ல என்னமா யோசிக்க வேண்டியதா இருக்கு ...அவ்வ்வ் :-))
----------------------------------------------------

பிற் சேர்க்கை;

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் என்ற எழுத்தாளர்,பதிவர் பெயரையும் இவ்வழக்கில் குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அவதூறு வழக்கு தொடர்வேன் என அறிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

http://rightnews.in/4650/defamation-case-on-chinmayi/
-------------------------------

பின் குறிப்பு:

# பொது வெளியில் ஆபாசமாக, தனிநபர் தாக்குதல் செய்வது தவறு, அதே சமயம் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்பதை அனைவரும் நினைவு கொள்ளவேண்டும்.

#யாரையும் களங்கப்படுத்தவோ, காயப்படுத்தவோ இப்பதிவு எழுதப்படவில்லை.இப்பதிவில் குறிப்பிட்ட  நிகழ்வுகள், ஸ்கிரீன் ஷாட்கள்,சம்பந்தப்பட்ட நபர்களின் தளங்களில் இருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது , தரவுகள் விக்கியாப்பீடியா . நன்றி!

#பதிவில் தரவுகளாக கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டிகள் எந்நேரத்திலும் அழிக்கப்படலாம்,எனவே அங்கு பதிவுகள் காணக்கிடைக்கவில்லை எனில் அடியேன் பொறுப்பல்ல.
-------------------------