Sunday, January 20, 2013

மொக்கைத்தோரணம்-2

(அய்யோடா மொக்கையை ஆரம்பிச்சுட்டானே ...இனிமே எப்ப இத நிறுத்துவானோ?...)

# செல் மொழி.

செல்லெடுத்து செல்வான் சினங்கொள்வான் அவ்விடத்து
சிக்னல் இல்லை எனில்.
------------------
மண் மணத்துடன் சமையல்!

# பிராபல்யப்பதிவர்;என்ன சாம்பாரில் மண்ணு நொர நொரங்குது?

பி.பவின் மனைவி:நீங்க தானே மண் மணத்தோட சமையல் செய்ய சொன்னிங்க,அதான் கொஞ்சம் மண்ணள்ளி சாம்பாரில் போட்டேன்!!!
-----------------
அடியேன் பிழையா?

#பதிவர்-1: எதுக்கு அந்த பிராபல்யப்பதிவரை புத்தக சந்தையில் வச்சு அடிச்சீங்க, அவர் எழுதுவது புடிக்கலைனா படிக்காமல் இருக்கலாமே?

பதிவர்-2: நீங்க வேற, நான் அவர் பதிவுகளின் தீவிர வாசகன், அவர் தான் புத்தகக் காட்சியில் அடியேன்! அப்படினு பதிவு போட்டிருந்தார், ஆசையா அடிக்க சொல்லுறாரே அடிக்கல்லைனா தப்பா நினைச்சுப்பாருன்னு அடிச்சேன், அது தப்பா?

---------------------------

சிறப்புக்கழிவு உண்டு!

# பிராபல்ய பதிவரின் மனைவி: ஏங்க நேத்து புத்தகக் சந்தைக்கு போனத நம்ம வீட்டு பால்காரரிடம் சொன்னிங்களா?

பிராபல்ய பதிவர்:  ஆமாம் அதுக்கென்ன?

பி.ப.மனைவி: சொன்னதோட இருக்கக்கூடாது, புத்தக சந்தையில 10% சிறப்புக்கழிவு கொடுக்கிறாங்க, இவ்வளவு நாளா பால் வாங்குறேன் , நீ ஒன்னும் சிறப்பு கழிவு தறக்கூடாதுன்னு கேட்டிங்களாம், அதான் ஒரு கூடை சாணிய எடுத்து வந்து அய்யா கேட்ட சிறப்பு கழிவுனு கொடுக்கிறான் , தேவையா இது?

பிராபல்யப்பதிவர்: ஹி...ஹி ..ஹி, அது வந்து ...
----------------------------

கிடைத்தால் கேட்பேன்!

# அப்ரண்டீஸ் பதிவர்; அண்ணே  அவரை எதுக்குன்னே கெட்ட வார்த்தையில் திட்டி அடிக்க போனிங்க?

புத்தக சந்தையில் அப்பளம் விற்பவர்: பின்ன என்ன தம்பி, நானே பொண்டாட்டி நகைய அடக்கு வச்சு ,கடை வாடகைக்கு எடுத்து ,அப்பளம் சுட்டு விக்குறேன், அவரு ஏதோ பிராபல்ய பதிவராம் ,எங்கிட்டே வந்து ஒரு அப்பளம் வாங்கிட்டு , குடிக்க மினரல் வாட்டர் வேணும், நான் கிடைத்தால் கேட்பேன்னு முகநூல் சங்க தலைவர்னு சொல்லுறான், அதான் கடுப்பாயி , மருவாதியா போயிடு இல்லைனா கொதிக்கிற எண்ணைய எடுத்து மூஞ்சில ஊத்திருவேன்னு சொல்லி விரட்டிவிட்டேன் , ஆமாம் உனக்கு என்ன தம்பி வேணும் அப்பளம் மட்டும் போதுமா இல்ல....

அப்ரண்டீஸ் பதிவர்: ஹி...ஹி எனக்கு அப்பளம் மட்டும் போதும், நீங்க தூக்கிப்போட்டாக்கூடா கேட்ச் புடிச்சுப்பேன்( அய்யோடா நல்ல வேளை நானும் ஒரு பதிவர்னு சொல்லிக்கலை ,மூஞ்சு தப்பிச்சுது)
------------------------

எதை செய்தாலும் பிளான் பண்ணி செய்யணும்!

#அப்ரண்டீஸ் பதிவர்: அண்ணே வணக்கம்னே, புத்தக சந்தைக்கு வந்தீங்களா?

பிராபல்யப்பதிவர்: ஆங்க் ...உழவர் சந்தைக்கு வந்தேன் கேள்வியப்பாரு?

அப்ரண்டீஸ்: ஹீ...ஹி சும்மா ஒரு சம்பிரதாயத்துக்கு கேட்டால் ஏன்னே கோச்சுக்கிறிங்க, அது சரி கையில சுருட்டி என்னமோ வச்சு இருக்கீங்களே ,என்னதுண்ணே,காலண்டரா?

பிராபல்யம்: நான் எதை செய்தாலும் பிளாண் பண்ணி செய்வேன், அதான் புத்தக சந்தைக்கும் பிளாணோட வந்திருக்கேன்.(பிளாணை காட்டுகிறார்)

அப்ரண்டீஸ்: என்னணே ஏதோ வீட்டு புளுப்பிரிண்ட் பிளாண் போல இருக்கு?

பிராபல்யம்: ஹி...ஹி பிளாணோட வந்திருக்கேன்னு தானே சொன்னேன், எந்த பிளாணா இருந்தா என்ன , எப்பவும் கையில ஒரு பிளாண் இருக்கணும் :-))

அப்ரண்டீஸ்:ஙே...
------------------------------

பார்க்கிங் கலாட்டா:

# பார்க்கிங் கட்டணம் வசூலிப்பவர்: சார் டூ விலர் நிறுத்தினா 10 ரூபா பார்க்கிங் கட்டணம்.

பிராபல்யப்பதிவர்: இது என்ன அநியாயக்கொள்ளையா இருக்கு, நான் யார் தெரியும்ல , கிடைத்தால் கேட்பேன் முகநூல் சங்கத்தலைவர், பிராபல்யப்பதிவர் எங்கிட்டேயேவா...

பா.க.வசூலிப்பவர்: நீங்க யாரா வேணா இருக்கட்டும் டூ வீலர் நிறுத்தினா 10 ரூபா கட்டணம் கொடுக்கணும்.

பிரால்யப்பதிவர்:  இன்னொருக்கா நல்லா சொல்லுங்க, 2 வீலர் நிறுத்தினா 10 ரூபா கொடுக்கணுமா?

பா.க.வசூலிப்பவர்: ஆமாய்யா...ஆமாம்.... 2 வீலர் நிறுத்தினா 10 ரூபா கொடுக்கணும்!

பிராபல்யப்பதிவர்: பேச்சு மாறக்கூடாது,வண்டிய நிறுத்தினா தானே காசு கொடுக்கணும், நான் வண்டிய நிறுத்தாமல் படுக்க வச்சிடுறேன் , இப்போ காசுக்கொடுக்க மாட்டேன் , நான் யாரு கிடைத்தால் கேட்பேன் தலைவரு என்கிட்டேவா ...எப்பூடி?

பா.க.வசூலிப்பவர்: நீ போ மோனே தினேஷா ...(மனதுக்குள் ,எஞ்சினை கழட்டி வித்துற வேண்டியது தான்)
------------------------------

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

#பிராபல்யப்பதிவர்; சார் ...சார்.. ஒரு பரதேசி எனக்கு போன் செய்தான் ,அதை அட்டண்ட் செய்றதுக்குள்ள என் பையன் காணாம போயிட்டான், செவப்பு கலர் கட்டம் போட்ட சட்டையும், சோட்டா பீம்னு முதுகில் எழுதி இருக்கும்,

புத்தக சந்தை உதவி மைய அறிவிப்பாளர்; சார் கொஞ்சம் பொறுமையாக உட்காருங்க, நீலக்கலர் கட்டம் போட்ட சட்டை, கார்கோ பேண்ட் , பாக்கெட் புல்லா வாட்டர் பாட்டில்,சிப்ஸ்னு வச்சிருப்பார்னு சொன்னது எல்லாம் சரியா இருக்கு, இப்போ தான் உங்க மகர் வந்து நீங்க காணாமல் போயிட்டதாகவும் கண்டுப்பிடிச்சு வச்சிருக்க சொல்லிட்டு  புத்தக சந்தைய சுத்திப்பார்க்க போயிருக்கார், அவர் திரும்பி வர்ர வரைக்கும் இப்படி ஓராம உட்கார்ந்து வெயிட் பண்ணுங்க .

பிராபல்யப்பதிவர்: ஙே....
------------------------

புத்தக பட்டியல் போடுவதன் அவசியம்!

அப்ரண்டீஸ் பதிவர்: தல , எல்லாப்பதிவர்கள் கிட்டேயும் என்ன புத்தகம் வாங்கினீங்கண்ணு கேட்டு ,கேட்டு பட்டியல் போடுறிங்களே , அதை எல்லாம் வச்சு பதிவு போடத்தானே? இவ்வளவு கூட்டத்திலும் உங்க கடமை உணர்ச்சிய நினைச்சா கண்ணு கலங்குது தல....

பிராபல்யப்பதிவர்: ஹி...ஹி யார், யார் என்ன புத்தகம் வாங்கி இருக்காங்க, அதில் நல்ல புத்தகம் ,நான் படிக்காத புத்தகம் எதுனு தெரிஞ்சுக்கத்தான், அப்போ தானே பின்னாடி ஓசிக்கேட்க வசதியா இருக்கும் எப்பூடி?

அப்ரண்டீஸ்: தெய்வமே நீங்க எங்கேயே போயிட்டிங்க ...அவ்வ்வ்!!!
-----------------------

(எவ்ளோ புத்தகம் ... இதெல்லாம் வவ்வாலு தான் படிப்பான் ,நமக்கு ஆகாது)

# புத்தக சந்தையில் இப்படியும் ஒரு அறிவிப்பு(வைக்கப்படலாம்):

" புத்தகமே வாங்காமல் ,புத்தகங்களை மட்டும் வளைச்சு வளைச்சு படம் எடுக்கும் பதிவர்களின்  கேமரா, மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்படும்"!!!
----------------------

பின்குறிப்பு:

#இந்த மொக்கைகள் யாவும் அடியேனின் சுயக்கற்பனையே, இயல்பு வாழ்க்கை மாந்தர்களையோ, சம்பவங்களையோ குறிப்பிடுவன அல்ல, அப்படியும் மீறி யாரேனும்  நினைத்தால் அது தோற்றப்பிழையே, அடியேன் பொறுப்பல்ல.

# படங்கள் உதவி கூகிள்,நன்றி!
------------------------------