Friday, March 15, 2013

எல்லாமே அரசியல்!


(ஹி...ஹி இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு? )


இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து, உரிய தீர்வு கிடைக்க வேண்டி அரசியல் ரீதியான பல போராட்டங்கள்,கண்டனங்கள் எழுந்துள்ளன, தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ உணர்வுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றளவில் இதற்கான ஆதரவு எப்பொழுதும் மக்களிடம் உண்டு.

அரசியல் இயக்கங்களை தாண்டி மாணவர்களும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் செய்கின்றனர், அத்தகைய ஒரு வெளிப்பாடாக லயோலா கல்லூரி மாணவர்கள் கடந்த மார்ச் எட்டாம் தேதி காலவரையற்ற சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை அறிவித்து பன்னிரெண்டாம் தேதி முடித்துக்கொண்டுள்ளார்கள், லயோலா கல்லூரி மாணவர்கள் அல்லாமல் பிறக்கல்லூரி மாணவர்களும் உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுத்துள்ளார்கள், ஆனால் இவையெல்லாம் அரசியல் நாடகங்களின் ஓரங்கமாகவே இருக்கிறதோ என சந்தேகிக்க தூண்டும் அம்சங்கள் பலவும் காணப்படுகின்றன.

மாணவர்களின் சிந்தனை மற்றும் எழுச்சி தேவை ,அது சரியே எனவும் நினைக்கிறேன் ஆனால் அரசியல் சதுரங்கத்தில் அவர்கள் அறிந்தோ,அறியாமலோ பகடையாக்கப்படுகிறார்களோ என நினைக்கவும் வேண்டியதாகிறது. நாட்டில் எல்லாமே அரசியல் தானோ என நினைக்கும் போது அயர்ச்சியாகிறது.

யே யப்பா உடனே உணர்ச்சி பொங்க ,நீ எல்லாம் தமிழனா, மாணவர்கள் போராட்டத்தை களங்கப்படுத்துவதும் ஒரு பொழைப்பா, ஏ தமிழ் நண்டே ,உன் நொள்ளைக்கண்ணை வச்சிக்கிட்டு சும்மா இரும் என கொந்தளிக்காதீர்கள் என்னருமை புரட்சி புடலைங்காய்களே, என்ன சொல்ல வருகிறேன் என சற்றே நிதானமாக வாசித்து உள்வாங்கிக்கொண்டு அப்புறமாக தீர்ப்பெழுத பேனா எடுங்களேன்!

(கம்யூனிச பாணியில் பறை முழங்க போராட்டம்)

லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுப்பேர் கடந்த எட்டாம் தேதி ஈழ இனப்படுகொலையை கண்டித்து உண்ணாநிலை போராட்டம் என அறிவித்தனர், முதலில் நுங்கம்பாக்கத்தில் உள்ள AICUF(All India Catholic University Federation ) வளாகத்தில் ஆரம்பிக்க சென்றனர்,ஆனால் அவ்விடம் இலங்கை தூதரகத்திற்கு வெகு அருகில் இருப்பதால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழலாம் என காவல் துறை அனுமதி மறுக்கவே, பின்னர் கோயம்பேட்டில் உள்ள ஒரு "தனியார் இடத்தில்" தங்கள் உண்ணாநிலை போராட்டத்தினை துவக்கினர்.

இங்கு கவனிக்க வேண்டியது ,காவல் துறை அவ்வளவு எளிதில் உண்ணாநிலை போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்காது, காவல் துறை அனுமதி என சொல்லப்பட்டாலும் அது ஆட்சியாளரின் முடிவை பொறுத்தே என்பதால், அனுமதி கொடுக்கப்பட்டது ஆளுங்கட்சி தலைமையின் விருப்பத்தின் படியே என அறியலாம்.

பல பத்திரிக்கைகளும் கோயம்பேட்டில் உள்ள தனியார் இடம் என்றே எழுதின ,அது என்ன சிறப்பான தனியார் இடம், உண்ணா நிலைப்போராட்டத்திற்கு என யாராவது கட்டிடம் கட்டி வாடகைக்கு விடுகிறார்களா,அல்லது வீட்டை வாடகைக்கு எடுத்து போராட்டம் நடக்கிறதா?

இக்கேள்வி ரொம்ப அவசியாம என நினைக்கலாம்,ஆனால் அவசியம் ஆகிறது.

இப்போ சின்னதா ஒரு பிளாஷ் பேக் அடிப்போம்,

ஆகஸ்ட்,2011 இல் காஞ்சிபுரம் மக்கள் மன்றம் என்ற தன்னார்வ அமைப்பின் உறுப்பினரான செங்கொடி என்பவர், ராஜிவ் கொலைவழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை விலக்ககோரி ,காஞ்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து மாண்டார்.

காஞ்சி மக்கள் மன்றம் என்பது குளோரியா ஜெசி என்பவர் தலைமையின் கீழ் இயங்கும்,கம்யூனிச சித்தாந்தங்கள் அடிப்படையில் இயங்கும் ,கிருத்துவப்பின்னணிக்கொண்ட ஒரு மக்கள் சேவை இயக்கம் ஆகும். இவர்களுக்கு PUCL(PEOPLE'S UNION FOR CIVIL LIBERTIES) மற்றும் Madras Social Service Society (MSSS-இவ்வமைப்பு the official organ for social work in the Archdiocese of Madras-Mylapore), ஆகியவற்றின் ஆதரவும் ,ஒத்துழைப்பும் உண்டு.

அரசியல் ரீதியாக மக்கள் மன்றத்தின் போராட்டங்களுக்கு மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மற்றும் சமீபமாக வேல் முருகனின் தமிழர் வாழ்வுரிமைக்கட்சி, மற்றும் பழ.நெடுமாறன், சேவ் தமிழர் இயக்கம் ,மே-17 இயக்கம், ஆகியன ஆதரவளிப்பதும் ,கூட்டுப்போராட்டங்கள் செய்வதும் வழக்கம்.

காஞ்சி மக்கள் மன்றத்திற்கு சென்னைக்கோயம்பேட்டில் ஒரு அலுவலகம் உள்ளது(உரிமையாளர் அவர்களா அல்லது கம்யூனிச இயக்கமா என தெரியவில்லை), அதற்கு தீக்குளித்து உயிர் நீத்த செங்கொடியின் பெயரை சூட்டி செங்கொடி மன்றம் என அழைக்கப்படுகிறது. லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்திய தனியார் கட்டிடம் தான் இந்த செங்கொடி மன்றம்!

எதற்கு பத்திரிக்கைகள் மீண்டும் ,மீண்டும் சென்னைக்கோயம்பேட்டில் உள்ள தனியார் இடம் என "சிறப்பாக" தனித்து சொல்ல வேண்டும்? காரணம் என்னவெனில் செங்கொடி மன்றம் என சொல்லப்பட்டால் அவ்வியக்கம்,அதன் சார்புக்கட்சிகளின் நிலை எளிதில் வெளிப்பட்டுவிடும் என்பதாலே.

இப்போராட்டம் லயோலாக்கல்லூரி மாணவர்கள் தானே முன்னெடுத்தார்கள் இதற்கெல்லாம் எப்படி பொறுப்பாவார்கள் எனலாம், லயோலாக்கல்லூரி AICUF இன் ஒரு அங்கம், இது Archdiocese of Madras-Mylapore, ஒரு அங்கம்.இவர்களோடு சென்னை சமூக கூட்டமைப்புக்கும், அதனோடு மக்கள் மன்றதுக்கும் தொடர்பு உள்ளதை பார்த்தோம். மேலும் வைக்கோவிற்கும் கிருத்துவ அமைப்பினருக்கும் இணக்கமான உறவுண்டு, எனவே எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது.


அதெல்லாம் சரி ,மாணவர்களின் எழுச்சியான போராட்டத்தில் இவர்கள் தொடர்பு இருந்தால் என்ன ,நல்ல நோக்கத்திற்காக தானே போராடினார்கள் என நினைக்கலாம், ஆனால் இவர்களின் தொடர்பால் மாணவர்களின் போராட்டத்தினை வைத்து ஆளுங்கட்சி ஒரு அரசியல் சதுரங்கம் ஆடியுள்ளதாக நினைக்கிறேன்.

மாணவர்களின் உண்ணாநிலைப்போராட்டத்தினை காவல் துறைக்கொண்டு ஆளுங்கட்சி அடக்கியிருக்கிறது எனவே இப்போராட்டத்தினை ஆளுங்கட்சி விரும்ப வழியில்லை, மேலும் மாணவர்கள் தி.முக.,காங்கிரஸ் கட்சியினரையும் எதிர்த்துள்ளார்கள் எனவே இதில் என்ன அரசியல் இருக்கிறது என நினைக்கலாம். ஆனால் அரசியல் நீரோட்டத்தில் பல வெளியில் தெரியாத உள்நீரோட்டங்களே என்பதை புரிந்துக்கொண்டால் உண்மை தெளிவாகும்.

தி.மு.க கூட்டணியினர் டெசோ அமைப்பினை உயிர்ப்பித்து மீண்டும் ஈழ விவகாரத்தில் தங்களை முன்னிலைப்படுத்த ,இழந்த இமேஜை தூக்கி நிறுத்த பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறார்கள்,அதன் ஒரு அங்கமாக ஐ.நாவுக்கு மனு,புது தில்லியில் மார்ச்-10 இல் டெசோ கருத்தரங்கு, தமிழகத்தில் மார்ச்-12 இல் வேலை நிறுத்தப்போராட்டம் என பிசியோ பிசியாக தீயாக வேலை செய்ய பார்க்கிறார்கள்.

இந்நிலையில் எட்டாம் தேதி மாணவர்களுக்கு உண்ணாநிலைப்போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்படுகிறது, பின்னர் சரியாக பதினோராம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில் காவல் துறை கைது செய்கிறது. விடிந்தால் டெசோ பந்த்!

இதில் உள்ள நுண்ணரசியல் என்னவெனில் மறுநாள் நடைப்பெற்ற பந்தினை விட மாணவர்கள் கைது என்ற செய்தி முன்னிலைக்கு வந்துவிட்டது.

மேலும் கல்லூரிகள் இயங்காமல் இருந்தால் பந்துக்கு ஆதரவு மாபெரும் வெற்றி என திமுக சொல்லிக்கொள்ள முடியாது, கல்லூரிகள் மூடப்பட்டுக்கிடந்தால் அது மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு என்றே பார்க்கப்படும் நிலை.

அப்படிப்பார்த்தாலும் ஆளும்தரப்புக்கெட்டப்பெயர் தானே என நினைக்கலாம், எனக்கு ஒரு கண்ணு போனாலும் எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகனும் சித்தாந்தம் தான் :-))

மேலும் மாணவர்கள் வைத்துள்ள கோரிக்கைகளையும்,அவர்களின் டெசோ எதிர்ப்பு நிலையையும் பார்த்தால் , ஆளும்தரப்பை கோபப்படுத்த விரும்பவில்லை என்பது தெளிவாகும்.

மாணவர்களின் கோரிக்கைகள்:

1)We strongly condemn the US-draft resolution. Do not pass it at UNHRC

2)What took place in Ilangkai [Sri Lanka] is not merely war crimes or violations of human rights, but planned genocide

3)International investigation and referendum are the only solutions for the Tamils. Government of India should propose a resolution to bring in international investigation and to conduct a referendum on independent Tamil Eelam.

4)A proposal should be made to remove the Deputy High Commission of the Sinhala chauvinistic State from the Tamil soil [Tamil Nadu]. India should severe all diplomatic relations with Ilangkai [Sri Lanka].

5)Government of India, accepting the request of the "Tamil Nadu State Government", should implement economic sanctions on Ilangkai [Sri Lanka].

6)On behalf of the "Tamil Nadu State Government", a foreign relations department should be created to assure the security of global Tamils.

7)No Asian country should be a member in the [international] investigation committee.

8)Killing Tamil Nadu fishermen should be stopped immediately.

9)If the Government of India is not finding solution to the question of Eezham Tamils, we will not pay any taxes from Tamil Nadu. We, students, will actively engage in this campaign.

சட்டப்பேரவையில் அம்மையார் கொண்டு வந்த தீர்மானத்தையும்,மாநில அரசையும் முன்னிறுத்த வேண்டியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.அதாவது ஆளுங்கட்சியினரின் அதிகாரப்பூர்வமற்ற ஒரு போரட்டமாக கருத வாய்ப்புள்ளது,ஆனால் கைது ,அடக்குமுறை என்பது போலவும் ஒரு தோற்றம்,என்ன அரசியலப்பா இது?


உண்ணா நிலைப்பந்தலில் ,மாணவர்களுடன் "ஜென்டில் மேன்" வைகோ,ஹி...ஹி பளீர்னு பாலிஷ் அடிச்சு ஷீ,டக் இன் கெட்டப்பில் ,ஒரு கார்ப்பரேட் எக்சிகியூட்டிவ் போல இருப்பதால் ஜென்டில்மேன் என சொன்னால் தப்பில்லை தானே.

மாணவர்கள் தான் பாவம் திடீர்னு அவசரமா உண்ணா நிலைக்கு வந்துவிட்டதால் கருப்பு சட்டை வாங்க நேரமில்லை போல எல்வீஸ்னு எழுதிய கருப்பு பனியனை ,உள் பக்கம் வெளிப்பக்கமா வருமாறு திருப்பிப்போட்டு சமாளிச்சு இருக்காங்க!






மாணவர்களுடன் ,நள்ளிரவில் கைது செய்யப்பட்டவர்கள்,

//Activists Mallai sathya and Manimaran from MDMK,  Thirumalai from AISF, Senthil from the Save Tamils Movement, Arun shourie from the Tamil Nadu Makkal Katchi, Ilaya raja from the Tamil Thesiya Maanavar Iyakkam, movie directors Ram, Kalaignan and Gauthaman and few activists from the May 17 movement were among the arrested.//

நள்ளிரவில் கைது செய்யப்படும் பொழுதும் கூட கைதாகியுள்ளவர்கள் யார் எனப்பார்த்தால் மல்லை சத்யா உள்ளிட்ட 200 மதிமுக கட்சியினர் மற்றும் பலர் ,இதன் மூலம் மதிமுகவின் பங்கு என்னவென புரிகிறது. இப்போராட்டக்களத்தில் மதிமுகவினரின் பின்புலம் இருப்பதாலோ என்னவோ புதிய புரட்சி அவதாரம் "நாம் தமிழர்" சீமான் சீனுக்கு வராமலே ஒதுங்கிக்கொண்டுள்ளார்.

(முகமலர்ச்சியுடன் முதல்வர், கூட்டணி மறுமலர்ச்சி காணுமா?)

கம்யூனிஸ்டுகள் ஏற்கனவே அம்மையாருடன் இணக்கமான அரசியலில் உள்ளனர், சமீபத்தில் வைகோவின் மது பான பாதயாத்திரையில் திடீர் சந்திப்பு என அம்மையாருடன் புதிய அரசியல் மலர்ச்சியுடன் மதிமுக,இவை எல்லாம் வரும் நாடாளுமன்றத்தேர்தலை ஒட்டிய புதிய கூட்டணிக்கான அச்சாரங்களாக மாறக்கூடும்.


லயோலா கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து போராட்டத்தினை துவக்கிய இதரக்கல்லூரிகளில் சென்னை கிருத்துவ கல்லூரி, நெல்லை புனித சேவியர் கல்லூரி, திருச்சி ,புனித ஜோசப் கல்லூரிகள் எல்லாம் AICUF அங்கத்தினரே.


மற்ற கலைக்கல்லூரிகள், சட்டக்கல்லூரிகளும் போராட்டத்தில் கலந்துள்ளன,ஆனாலும் அனைத்தும் ஒருங்கிணைக்க ஒரு அரசியல் இயக்கம் பின்னிருந்துள்ளதை தெளிவாக காணலாம்.ஏன் எனில் இலங்கைக்கு கண்டனம் என கோரிக்கை பதாகைகளுடன் டெசோவை புறக்கணிக்கவும் எனவும் பதாகைப்பிடித்து நிற்கிறார்கள்!

படம்.


ஆளுங்கட்சி , தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் , டெசோ பலூனில் காற்றையிறக்க இரு கோடுகள் தத்துவப்படி டெசோவை சின்னதாக காட்ட மாணவர்கள் போராட்டத்தினை அடக்குவது போல் நடவடிக்கை எடுத்து , பெரிதாக வளர்க்கிறது எனலாம். ஒருக்கட்டத்தில் தனது பேர் கெடாமல் செய்ய மாணவர்கள் கோரிக்கையை "எனது அரசு" ஏற்கிறது என பெருந்தன்மையான அறிக்கையே கூட அம்மையாரிடம் இருந்து வரலாம், அப்படி வந்துவிட்டால் ,மீண்டும் ஈழத்தாய் பட்டம் சூடி மகிழ சீமான் தயாராக இருப்பார் என சொல்லவும் வேண்டுமோ?

டெசோ என்பது வெண்ணைக்கூட வெட்ட உதவாத மொன்னைக்கத்தி என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை,ஆனால் மொன்னைக்கத்தியாக இருந்தாலும் என்னோடதாக்கும் என போராட்டத்தில் குதித்து பெயர் வாங்கப்பார்க்கும் திமுகவின் ஆசையில் ஒரு லோட் மண்ணள்ளி போடும் விதமாக அம்மையார் இராச தந்திரமாக மாணவர்கள் போராட்டத்தினைப் பயன்ப்படுத்திக்கொள்வதாக நினைக்கிறேன்.

லயோலா கல்லூரி மாணவர்களும் சொல்லி வைத்தார்ப்போல 12 தேதியுடன் உண்ணாநிலைப்போராட்டத்தினை நிறுத்திக்கொண்டார்கள், அரசு நிர்பந்தம் என சொல்லலாம்,ஆனால் நிர்பந்தம் வரும் என தெரிந்து தானே சாகும் வரைப்போராட்டம் என குதித்தார்கள்,அரசைப்பற்றி  12 தேதிக்கு அப்புறம் தான் தெரிய வந்ததா? இப்பொழுது நடக்கும்  போராட்டத்தில் மாணவர்கள் எத்தனை சதவீதம் உறுதியாக நிலைப்பார்கள்,என்று மங்கலம்பாடுவார்கள் என சொல்ல முடியாது.

ஆனால் அதற்குள் நம்ம இணைய சேகுவேராக்கள் ஒரு முன் முடிவுடன் என்ன என்னமோ பொங்கிக்கொண்டிருக்கிறார்கள். யாராவது இப்போராட்டங்கள் பற்றி கேள்விக்கேட்டுவிட்டாலே போதும் , உடனே அறச்சீற்றம் கொண்டு கண்கள் சிவக்க ,காது மடல் சிலிர்க்க , ஒரு நீண்ட சொற்பொழிவை ஆரம்பிக்கிறார்கள்,ஒரு கணினியும்,இணையமும் இருந்துவிட்டால் என்ன  வேண்டுமானாலும் எழுதுவியா, நீ என்னிக்காவது போராடி இருக்கியா,வலினா என்ன தெரியுமா,இரத்தம் பார்த்து இருக்கியா , யாரும் எதுவும் பேசக்கூடாது பேசினால் உனக்கு தமிழுணர்வு இல்லை, இது மாணவர்களை கொச்சைப்படுத்தும் செயல் என ஏதேச்சதிகாரமா தீர்ப்பு எழுதி தள்ளுகிறார்கள்.

என்னைப்பொறுத்த வரையில் மாணவர்களோ,பொதுமக்களோ தன்னெழுச்சியாக ,சுயநல அரசியலற்று போராட வேண்டும், ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் காணோம்.

எல்லாமே அரசியல் தானோ?
--------------

பின் குறிப்பு:

# நாம் எந்த அரசியல் கட்சியின் ஆதரவாளனும் அல்ல, செய்திகளில் படிப்பதை வைத்து எனது அவதானிப்பினை வெளிப்படுத்தியுள்ளேன், இதில் பிழையொன்றுமில்லை, அதெல்லாம் முடியாது நீ அந்தக்கட்சி ஆதரவாளன் தான் என ஏதேனும் ஒரு சாயம் பூச ஆசைப்பட்டால் நானென்ன செய்ய, சாயம் பூசி உங்க கொலை வெறியை தணித்துக்கொள்ளவும், ஆனால் பூசுறது தான் பூசுறிங்க நல்ல சேப்பு சாயமா பூசிட்டு போங்க அப்போவாச்சும் கொஞ்சம் கலர் கூடுதா பார்ப்போம் :-))

#படங்கள் மற்றும் தகவல் உதவி,

சேவ் தமிழ், தமிழ் நெட், விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
--------------------------