Friday, November 01, 2013

BT-COTTON- ஒரு மாற்றுப்பார்வை -2: உண்மையைத்தேடி!

(பருத்தி எடுக்கையிலே பலநாளும் பார்த்த புள்ள...ஹி...ஹி)

 BT -ANTHEM.


நந்தவனத்தில் ஓர் ஆண்டி

நாளாறு மாதமாய் மான்சான்டோவை வேண்டி

கொண்டு வந்தானடி காட்டன் பிடி

அதை கூத்தாடி கூத்தாடி

வயலில் போட்டு விதைத்தாண்டி!

ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான் ,ஜிக்கான்!
 ஜிக்கான், ஜிகு ஜிக்கான் ஜிக்கான்!

மழை பேஞ்சு வயலெல்லாம் தண்ணி,

மச்சான் ஏர்ப்பூட்டி உழுதாரே எண்ணி!

பிடி காட்டனுக்கு இல்லடா போட்டி

அதனால வச்சானே விலையத்தான் கூட்டி!

ஜிகு ஜிக்கான் ஜிகு ஜிக்கான்  ஜிக்கான், ஜிகு ஜிக்கான், ஜிக்கான்!

ராவுனும் பகலென்னும் உழைச்சு

கடன் வாங்கி விதை விதைச்சாண்டி!

கடனுக்கு ஏறுதடா வட்டி

பிடி போட்டவனுக்கோ கிழியுதடா வேட்டி!

நந்தவனத்தில் ஓர் ஆண்டி,அவன்

நாளாறு மாதமாய் மான்சாண்டோவை வேண்டி!

ஜிகு ஜிக்கான் ,ஜிகு ஜிக்கான் ஜிக்கான்!
 ஜிக்கான் ஜிகு ஜிக்கான்,ஜிகு ஜிக்கான்!

ஹி...ஹி வருங்காலத்தில் பிடி பருத்தி போட்ட விவசாயிகள் எல்லாம்  நொந்து நூடுல்ஸ் ஆகி வெந்து வெம்பிப்போய் " BT -ANTHEM" என இந்த பாட்டை பாடினாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை!

இந்த பாட்டும் விக்கிப்பீடியாவில் இருக்கும்னு சிலப்பேரு நினைச்சிக்கலாம், இது அக்கால பழைய பாடலை ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு ரீ - மிக்ஸ் செய்து "" BT -ANTHEM"  ஆக உருவாக்கி இருக்கேன் ,நம்ம சமூகத்துக்கு ஏதோ என்னால முடிஞ்ச "கலைச்சேவை" எப்பூடி!

இடைக்குறிப்பு:

விக்கிப்பீடியாவில் எல்லாமே இருக்கு ,அது எங்களுக்கு தெரியாதா என நினைக்கும் அறிவு சீவிகள் வந்தவழியே ரிடர்ன் அடிச்சு விக்கிப்பீடியா தளத்தில் சென்று தேடிப்படித்துக்கொள்ளலாம், நாம் விக்கி முதல் ஏனைய தளங்களிலும் தகவல் வேட்டையாடி இயன்றவரை  எளிய தமிழில் சில  கருத்துக்களை பதிவு செய்து வருகிறோம்,ஏதேனும் புதிதாக அறிந்துக்கொள்ள ஆர்வமும் ,நேரமும் உள்ளவர்கள் மேற்கொண்டு தொடரலாம்!

BT- COTTON:மாயையும்,உண்மையும்!

முந்தையப்பதிவில் பிடி காட்டன் உள்ளே வந்தது, அதற்கு தோன்றிய எதிர்ப்புகளும் ,பின்னர் அவை எவ்வாறு தணிந்தது, பிடி பருத்தியின் இன்றைய சாகுபடி நிலவரம், மேலும் ,சுற்றுச்சூழலுக்கும்,பல்லுயிர் பெருக்கத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அலசப்பட்டதை அறிவீர்கள், அப்பதிவை படிக்கத் தவறியவர்கள் சோம்பல் படாமல் ஒரு முறைப்படித்துவிட்டு தொடர்ந்தால் சில விவரங்களை புரிந்துக்கொள்ள எளிதாக இருக்கும்.

"Bt COTTON"- ஒரு மாற்றுப்பார்வை -1.

 இப்பதிவில் முந்தைய பதிவில் லேசாக தொட்டுச்செல்லப்பட்ட சில விவரங்களையும் விரிவான "FLASH BACK" கில் காணலாம்,மேலும் புதிய விவரங்களும் இனி அடுத்துக் காண்போம்

விதை தயாரிப்பும்,காப்புரிமையும்:"FLASH BACK" 


பருத்தியின் பூர்வீகம் சிந்து சமவெளிப்பகுதி என அறியப்படுகிறது ,இந்தியர்கள் கி.மு 2000-3000 கால இடைவெளியில் இருந்தே பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு நூல் நூற்கவும் ஆடை நெய்யவும் கற்றிருந்தார்கள் என வரலாறு சொல்கிறது.

பந்தாக கம்பளி நூல் காய்க்கும் மரம் இந்தியாவில் உள்ளது என "ஹிரோடட்டஸ்" பருத்தியினை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இருந்து பாராசிகம் போய் எகிப்து என உலகமெங்கும் பரவியுள்ளது. தென்னமெரிக்காவிற்கும் சென்றுள்ளது,மயன்களும்,இன்காக்களும் பருத்தி ஆடையே அணிந்துள்ளர்.

பருத்தி பயிரு வச்சது நாமலா இருந்தாலும் பேரு வச்சது அரபியர்களே, காட்டன் என்ற சொல்  AL -QUT(U)N"  என்ற அரபிச்சொல்லில் இருந்து உருவானது ,அப்படி எனில் நேர்த்தியான துணி அல்லது முழுத்துணி ஆகும்.

அக்காலத்தில் அரேபியர்கள் மூலமே பருத்தி வியாபரம் நடந்ததால், அவர்கள் அப்பெயரில் விற்றுள்ளார்கள் அதுவே நிலைத்துள்ளது.


முற்காலத்தில் விதை தயாரிப்பாளர்கள் என தனியே சிறப்பான நிறுவப்பட்ட ஒரு அமைப்பாக இல்லை, விவசாயிகளே பாரம்பரியமாக தாங்கள் விளைவித்தவற்றில் ஒரு பகுதியை விதைக்கு என எடுத்து வைத்துக்கொண்டு பயன்ப்படுத்தி வந்தார்கள்.

காலப்போக்கில் தொடர்ந்து ஒரே பாரம்பரிய வகையினை பயிரிட்டு வந்தமையால் இயற்கையாக ஏற்படும் கலப்பு மகரந்த சேர்க்கை, மேலும் ஒரே பயிர் தொடர் விவசாயம் ஆகியவற்றால் விதைகளின் தூய்மை பாதிக்கப்பட்டு உற்பத்தி திறன் குறையலாயிற்று, எனவே உற்பத்தியை பெருக்க மேம்படுத்தப்பட்ட விதைகளை (High yield hibreeds)அறிமுகப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனை தனிநபர்கள் செய்ய இயலாது எனவே அரசே முன்னின்று மேம்பட்ட விதைகளை உற்பத்தி செய்ய ஆய்வுகள் மேற்கொண்டது, உடனடியாக பெருமளவு விதை உற்பத்தி செய்ய இயலாது என்பதால் சர்வதேச விதை ஆய்வு மையங்களில் இருந்து இறக்குமதி செய்து உள்நாட்டில் அறிமுகப்படுத்தியது, ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ,இறக்குமதி செய்யப்பட்ட விதைகள் என்றாலும் அவற்றிற்கு காப்புரிமை என எதுவும் இல்லை, ஒரு முறை விதைத்து அறுவடை செய்தபின் ,விளைச்சலில் இருந்தே அடுத்த சாகுபடிக்கு விதை உருவாக்கிக்கொள்ளலாம், அதற்கு தடை ஏதும் இல்லை,இது அக்காலம்.

மேலும் அரசு வேளாண் ஆய்வு மையங்கள், பல்கலைகள் மூலம் அதிக மகசூல் கொடுக்கும் புதிய மேம்பட்ட விதைகள், மேலும் கலப்பின விதைகள் என உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிற்று ,அவற்றிற்கும் காப்புரிமை இல்லை, ஒரு முறை வாங்கினால் போதும் காலமெல்லாம் பயன்ப்படுத்திக்கொள்ளலாம்,'royalty free seeds"

ஒவ்வொரு புதிய விதைகளும்,கலப்பின விதைகளும் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றதாக இருந்தன ,எனவே அவை மட்டும் அக்குறிப்பிட்ட பகுதிகளில் பரவலாக பயன்ப்பாட்டில் இருந்து வேருன்றின, அக்குறிப்பிட்ட விதைகள் அப்பகுதிகளுக்கான விதைகளாகவும் அறியப்பட்டன.


காலங்கள் உருண்டோடின புதிய விவசாயிகள் நிறைய பெருகினர், சாகுபடி பரப்ப்பு விரிந்தது ,விதை தேவைகளும் அதிகரித்தது, சிலர் முன்னரே பயிரிட்டவர்களிடம் வாங்கி விதைத்தனர், ஆனாலும் எல்லாருக்கும் விதைக்கிடைக்காத நிலை உருவாயிற்று, அப்பொழுது தான் விதைகளை உற்பத்தி செய்து தனியாக விற்கலாம்,அதற்கும் ஒரு சந்தை இருக்கிறது என்பது உணரப்பட்டது.

எனவே சில புத்திசாலி விவசாயிகள் அல்லது தொழில்முனைப்பு கொண்டோர் விதைக்கென பண்ணைகள் உருவாக்கி ,ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் வகைகளையும் பயிரிட்டு விதை பயிராக விற்கலானர், மேலும் புதிய ரகம் அறிமுகப்படுத்தப்ப்பட்டதும் மூல விதைகளை வாங்கி கலப்பினம் ஆகிவிடாமல் "தூய்மை பேணீ" விதைகளாக விற்கவும் செய்தார்கள், விதைகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்து சான்றுகள் வழங்கும் பழக்கமும் உருவாயிற்று, இவற்றினை 'சான்றளிக்கப்பட்ட விதைகள்" என்றார்கள். ஆய்வு மையங்கள் உருவாக்கும் விதைகள் "BREEder seed" ஆகும்.

விதை வகைகள்:

BREEDER SEED- ஆய்வு மையங்கள்,வேளாண் பல்கலைகழங்களில் உருவாக்கப்படுவது.

FOUNDATION SEED- பிரீடர்  விதைகளை பயிரிட்டு ,விதை உற்பத்தி மையங்களில் உருவாக்கப்படுவது.

CERTIFIED SEED- ஃபவுண்டேஷன் விதைகளை பயிரிட்டு உருவாக்கப்படுவது.

TRUTHFULLY LABLED SEED- சான்றளிக்கப்பட்ட  அல்லது ஃபவுண்டேஷன் விதைகளை பயிரிட்டு உருவாக்கப்படுவது, இவையே விவசாயிகளுக்கு பெருமளவு விதைகளாக விற்கப்படுகிறது.

சான்றளிக்கப்பட்ட விதைகளும் விவசாயிகளுக்கு பயிரிட விற்கப்படும் விதையே ,ஆனால் விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கும் ஏன் எனில் ஒரு மத்திய விதை சான்றளீக்கும் நிறுவனத்தால் "சான்றளிக்கப்பட வேண்டும்" மேலும் தரமும் கூடுதலாக இருக்கும்.

ட்ருத்ஃபுல்லி லேபிள்டு விதை என்பது சான்றளிக்கப்பட்ட விதை தரத்தில் தயாரிக்கப்பட்டு ஆனால் அரசு சான்று பெறாமல் ,விதை தயாரிப்பு நிறுவனத்தாலேயே " இது நல்ல விதை" என உறுதி அளிக்கப்பட்ட ஒன்று, கொஞ்சம் முளைப்பு திறன் & தூய்மையின் தரம் குறைவாக இருக்கலாம்,எனவே விலை கம்மியாக இருக்கும்.இவ்வகையே விவசாயிகளுக்கு அதிகம் விற்கப்படுகிறது.

இவ்வாறு விதை உற்பத்தி என்பது ஒரு முறைப்படுத்தப்பட்ட நிறுவன அமைப்பாக உருவாயிற்று,ஆனால் அப்பொழுதும் "காப்புரிமை" என்ற ஒன்று பெயரளவில் இன்னார் தான் தயாரிச்சவர் என்ற "கிரெடிட் " கொடுக்க மட்டுமே ,ராயல்டி வழக்கம் உருவாகவில்லை, எல்லாமே "ஓபன் சோர்ஸ்" தான்.

கி.பி 1988 இல் உலக வர்த்தக ஒப்பதங்களின் காரணமாக இந்தியாவில் பன்னாட்டு விதை தயாரிப்பாளர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நுழைந்தார்கள்.2001 இல் உலக வர்த்தக மையத்தின் வழிக்காட்டுதல் அல்லது கட்டாயப்படுத்தல் காரணமாக, உருகுவே மாநாட்டுக்கு பின்னர் விதை காப்புரிமை ஒப்பந்தத்தில் இந்திய கை ஒப்பமிட்டது.

இதன் மூலம் விவசாயிகள் அல்லது இந்திய நிறுவனங்கள், தன்னார்வ குழுக்கள் வைத்துள்ள ,பாரம்பரிய விதைகளையும் ஒரு ரகமாக பதிவு செய்து காப்புரிமை கோரலாம் என சொல்லப்பட்டாலும்,வழக்கம் போல இந்தியாவில் எந்த விவசாயி போய் விதைக்காப்புரிமை வாங்க போகிறான்,பெரும்பாலும் அப்படி கோரப்படவேயில்லை, முன்னணியில் இருந்த தனியார் நிறுவனங்கள் அது வரையில் சந்தைப்படுத்திய விதை ரகங்களை அவர்களின் பெயரில் பதிவு செய்துக்கொண்டது தான் நடந்தது.

இப்பவும் ஒரு விவசாயி தனது விதையினை தான் மட்டுமே பயிரிடுகிறேன் ,தனித்துவமானது என சமர்ப்பித்து ,அதற்கு எதிர்ப்பு இல்லை எனில் காப்புரிமை சான்று பெறலாம்.

தற்சமயம் விதைகள் எல்லாம் காப்புரிமையாக்கப்பட்டு , விதைகளின் விலையும் உயர்த்தப்பட்ட நிலையில் ,விதை வாங்கும் விவசாயிகளை காக்கவும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விதை நிறுவனங்கள் அளித்த உத்தரவாதத்திற்கு ஏற்ப உற்பத்தி செய்யவில்லை எனில் இழப்பீடு பெற்று தர ஒரு அமைப்பினை "Birsa Agriculture University at Kanke" உருவாக்கியுள்ளது,இவ்வமைப்பில் சேர்ந்து இழப்பீடு பெறலாம். தற்சமயம் ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், ஒடிஷா, சத்தீஷ்கர், அந்தமான் தீவுகள் ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சுட்டி:

http://articles.timesofindia.indiatimes.com/2012-08-04/ranchi/33034499_1_protection-of-plant-varieties-claim-compensation-branch-office

இதில் கவனிக்க தக்கது என்னவெனில் காப்புரிமை வரும் வரையில் இந்திய தனியார் விதை உற்பத்தியாளர்கள் யாரும் பீரிடர் விதை ஆய்வில் ஈடுபட்டதாகவோ, அல்லது தயாரித்ததாகவோ அறியப்படவில்லை, ஆனால் ஆய்வு செய்து விதைகள்ள் உருவாக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டு பெரும்பாலும் அவர்கள் பிரீடர் விதைகளை வாங்கி தான் உற்பத்தியில் ஈடுபட்டு வந்தார்கள்,சிலர் பேக் கிராசிங் செய்து ஒரு வகையாக உருவாக்கி வைத்திருந்தார்கள்,ஆனால் பல மடங்கு விதைகளாக்கி விவசாயிகளுக்கு விற்கும் போது ஒரு "டிரேட் நேம்" போட்டு விற்பது வழக்கம், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சில குறிப்பிட்ட விதைகள் சில குறிப்பிட்ட விதை தயாரிப்பாளர்களின் "டிரேட் நேம்" பிராபர்ட்டியாகவும் ஆகிவிட்டது.

உதாரணமாக , கி.பி.1963 இல் டெல்லியில் நடந்த விவசாயக்கண்காட்சியில் 100 கிராம் Pusa Saoni bhendi (lady's finger) விதையை சாம்பிளாக வாங்கி வந்து அதனை வளர்த்து பல மடங்கு விதைகளாக்கி தான் முதன் முதலில்  மாகிகோ  விதை விற்பனையை ஆரம்பித்தது. பின்னர் அவர்களின் டிரேட் நேம் பிராபர்ட்டியாகவும் ஆகிவிட்டது.

இப்படி காப்புரிமை இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக விதை கிடைக்கும் சூழல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் உருவாகும் காலம் வரையில் தான் இருந்தது, விதைக்காப்புரிமை என்ற கொள்கையை தூக்கிப்பிடிக்க காரணமே பன்னாட்டு நிறுவனங்களின் "மரபணு மாற்ற ஆய்வுகளே' ஆகும்.

எதுக்கு இந்த வரலாறு என சலிப்படையலாம், ஆனால்  விதைகள் உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்கள் ஏன் பலத்த போட்டியிடுகின்றன என்பதை புரிந்துக்கொள்ள இந்த அடிப்படை தகவல்கள் உதவும். ஏன் எனில் காப்புரிமை என்ற பெயரில் கிடைக்கும் ராயல்டி தொகை என்பது நோகாமல் நோம்பு கும்பிடும் ஒரு நுட்பம் ஆகும், ஒரு முறை தயாரித்து விட்டால் போதும் அப்புறம் தொடர்ந்து ராயல்டி ராஜலக்‌ஷ்மி வாசக்கதவை தட்டி துட்டக்கொட்டுவாள் :-))

மேலும் இந்தியா எப்பொழுதுமே விவசாய உற்பத்தியில் முன்னணியில் உள்ள ,விதை தேவை அதிகம் உள்ள நாடு ஆகும், இங்க மார்க்கெட்டினை பிடித்து விட்டால் ,அப்புறம் வாழ்நாளெல்லாம் கவலையே இல்லை, நாம ஒரு தங்க முட்டையிடும் வாத்து ஆவோம்.

இந்தியாவில்  எப்போவோ யாரோ தயாரித்த பாரம்பரிய விதைகளின்  காப்புரிமை எல்லாம் மாநில வாரியாக பல தனியார்கள் கைகளில் சிக்கிய நிலையில், பல சர்வதேச விதை நிறுவனங்களும் இந்தியாவில் நுழைந்து செயல்ப்பட ஆரம்பித்தந்தன ,  அவர்களின் கலப்பின விதைகளையும் நம்ம ஊர் விதை வியாபாரிகளே விநியோகம் செய்து வந்தார்கள், ஆனால் 2001 க்கு முன்னர் ராயல்டி என்ற பிரச்சினை இல்லாமல் கமிஷன் அடிப்படையில் வியாபாரம் நடந்தது, மேலும் விவசாயிகளும் நினைத்தால் அவர்களே சாகுபடியில் இருந்து விதைகளாக உற்பத்தி செய்துக்கொள்ளலாம் இந்நிலையில் காப்புரிமை என்பது உறுதியானதும் ஏற்கனவே ஆய்வுகளை முடித்து விட்டு காத்திருந்த சர்வதேச விதை  தாதா மான்சான்டோ வியாபார களத்துக்குள் வருகிறார். தனது பிடி தொழில் நுட்ப விதைகளை தனியாக விற்கப்பார்க்க , ஏற்கனவே கமிஷனில் விதை விற்றுக்கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அதன் கூட்டாளிகளான இந்திய வியாபாரிகளுக்கும் சிக்கல், பிடி விதையை பூச்சியே தாக்காது, பூச்சி மருந்து வேண்டாம் என சொல்லி விற்றுவிட்டால்,நம்ம விதை விற்காதே எனவே , பீடி வந்தால் நாடே அழிந்துவிடும் என முதலில் எதிர்ப்பை கிளப்பிவிட்டு ஆரம்பத்தில் கன ஜோராக எதிர்ப்பரசியல் செய்ய வைத்தார்கள். இதற்கு மற்ற பன்னாட்டு விதை நிறுவனங்களும் உடந்தை. சர்வதேச சந்தையிலும் பிடி தயாரிக்காத நிறுவனங்கள்,பிடி தயாரிக்கும் நிறுவனங்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டே தான் இருக்கின்றன.

இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு விதை நிறுவனங்கள்;பிடி யுகம்!






இப்போ திரைக்கதையில் ஒரு டிவிஸ்ட் ஆக மோன்சான்டோ மகாராஷ்ராவை சேர்ந்த மாகி கோவின் மூல நிறுவனத்தின் 26% பங்குகளை வாங்கி முதலீடு செய்வதோடு அல்லாமல்,மரபணு மாற்று விதைகளுக்கென்றே பிரத்யோகமா 50:50 மூலதன பங்கில் "மாகிகோ- மோன்சான்டோ  பயோ டெக் இந்தியா" என உள்நாட்டு கூட்டு நிறுவனமாக அவதாரம் எடுத்து விடுகிறது. மகாராஷ்ட்ராவை பிடிக்க காரணம் ,அம்மாநிலம் தான் இந்தியாவிலே அதிக பருத்தி உற்பத்தி செய்யும் ,மாநிலமாகும், அதோடு இல்லாமல் மற்ற உள்நாட்டு வியாபாரிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தி மற்ற பன்னாட்டு நிறுவனங்களை விட்டுவிட்டு வந்துவிடுங்கள், எங்க பிடியை விற்றால் நல்ல மார்ஜினில் லாபம் வரும் வகையில் ஒப்பந்தம் போடலாம் என பேசி மடித்துவிட்டது.

தற்போதைய நிலையில் 450 கிராம் பிடி பருத்தி விதை பாக்கெட்டின் விலை சுமார் 980 ரூ, இதற்கு ராயல்டி கட்டணமாக 225 ரூவை மோன்சாண்டோவிற்கு உள்ளூர் தயாரிப்பாளர்கள் கொடுக்க வேண்டும், மிச்ச தொகை முழுவதும் நம்ம ஆட்களுக்கு.

முன்னர் மிக உயர்வான வழக்கமான கலப்பின பருத்தி விதைகளின் விலை ரூ  400-500 மேல் எக்காலத்திலும் போனதில்லை. எனவே அவற்றினை விற்கும் போது பெர்சேன்டேஜில் கமிஷன் பெரிதாக கிடைக்கவில்லை, இப்பொழுது பிடி பருத்திக்கு இரண்டு மடங்கில் விலை , மார்ஜினும் அதிகம் என்பதால் வியாபாரிகளும் மோன்சான்டோவை ஏகமாக ஆதரிக்க துவ்வங்கிவிட்டார்கள்.

தற்சமயம் சுமார் 150 நிறுவனங்கள், மான்சான்டோ உடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு 600 வகையான பெயர்களில் பிடி பருத்தி விதைகளை விற்று படுத்தி எடுக்கிறார்கள் இந்திய விவசாயத்தை!

இப்படித்தான் சுமார் பத்தாண்டுகளில் 94.75% பருத்தி சாகுபடி பரப்பினை மோன்சான்டோ விதைகளே ஆக்ரமித்தது.   ஆண்டுக்கு சுமார் 4 கோடி விதை பாக்கெட்டுகள் ,அதாவது சுமார் நான்காயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, அமெரிக்காவில் கூட மோன்சான்டோவிற்கு இவ்வளவு பெரிய சந்தையில்லை.

உலக அளவில் பல நாடுகளிலும் எதிர்ப்புகள், வழக்குகள்,நஷ்ட ஈடுகள் என அடிவாங்கிக்கொண்டு , அதன் பங்கு சந்தை மதிப்பு கூட சரிய ஆரம்பித்துள்ளது ,ஆனால் இந்தியாவில் பலமாக காலூன்றி சக்கைப்போடு போடுவதால் நட்டத்தையும் தாங்க முடிகிறது, இந்திய வருவாய் இல்லை எனில் இன்நேரம் மூடுவிழாக்கூட கண்டிருக்கலாம்.



மேலும் மோன்சான்டோ இந்தியாவில் நுழைந்த காலத்தில் உலக அளவில் 50 நிறுவனங்கள் பிடி பருத்தி நுட்பத்தினை கையில் வைத்திருந்தன, இன்று சுமார் 150 நிறுவனங்களுக்கு அது சாத்தியம்,ஆனால் வேறு எந்த நிறுவனத்திற்கும் இந்தியாவில் அனுமதி அளிக்காமல் மோன்சான்டோவிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது, இன்று வரையில் வேறு யாரும் நுழைய விடாமலும் பார்த்துக்கொள்ளப்படுகிறது, மகாராஷ்ட்ரா நிறுவனத்தின் பின் புலமும்,சில அரசியல் சக்திகளுமே "மான்சான்டோவிற்கு " இத்தகைய தனிசிறப்பு சலுகையை வழங்கி வரக்காரணமாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளது,இதனைப்பற்றி வெளிப்படையாக"Centre for Cellular and Molecular Biology (CCMB) former director Pushpa M Bhargava" என்பவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

செய்தி:

//He wanted to know why the central government allowed only Monsanto to produce the Bt seed when there were more than 50 seed companies that had the capacity to do so.

He appealed to the farmer leaders and farmers to be cautious about the usage of Bt seed as it would not only damage the crops but the environment as well.//

சுட்டி:

 http://articles.timesofindia.indiatimes.com/2002-04-29/hyderabad/27136416_1_bt-seed-bt-cotton-pushpa-m-bhargava



இம்முறையினால் மோன்சான்டோவிற்கு கொள்ளை லாபம் எப்படி எனில் மாகிஹோ மூலம் மட்டுமே சுய தயாரிப்பு பிடி விதைகள் ,பிற தயாரிப்பாளர்களுக்கு பிரீடர் சீட் மட்டும் கொடுக்கும்,அதனை ஏற்கனவே காப்புரிமை பதிவு செய்து வைத்துள்ள இந்திய பருத்தி விதைகளுடன் கலப்பினம் செய்து புதிய "பிடி ரகமாக " மாற்றிக்கொள்ள வேண்டும் தொழில்நுட்ப உதவி மட்டுமே அளிக்கும், பின்னர் அதில் இருந்து லேபிள்டு சீட் உற்பத்தி செய்து விற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு பாக்கெட்டு 225 ரூ ராயல்டி கொடுத்து விட வேண்டும்.

இதில் உள்ள தந்திரம் என்னவெனில் மான்சான்டோ வசம் காப்புரிமையே இல்லாத விதைகளிலும் பிடியை புகுத்தி அவற்றை பிடி காப்புரிமை என சொந்தம் கொண்டாடிக்கொள்வதாகும், சில காலம் போனபின்னர் பிடி கலக்காத இந்திய விதையே இல்லாத சூழலில் நம்ம விதை தயாரிப்பாளர்களுக்கு "விதை என சொல்லி ' விற்க ஒரு மூலப்பொருளே இல்லாமல் போய்விடும்,எல்லாமே மோன்சான்டோவின் காப்புரிமை வளையத்தில் சிக்கி இருக்கும்.

விதை உற்பத்தியில் அரசின் மெத்தனம்:



உணவு தானிய விதைகளை "high volume, low value seeds" என்கிறார்கள் ,அப்படி எனில் மிக அதிக விதைகள் உற்பத்தி செய்ய வேண்டும் ,ஆனால் விலை குறைவாக விற்கப்படுபவை, இவற்றில் நிறைய லாபம் கிடைக்காது. பருத்தி போன்ற பணப்பயிர்களின் விதைகளை "low volume ,high value  seeds" என்கிறார்கள் , அதாவது குறைவான அளவு விதை உற்பத்தி ,ஆனால் அதிக விலைக்கு விற்கப்படுவை,எனவே லாபம் அதிகம் கிடைக்கும்.

இதனாலே தனியார் நிறுவனங்கள் பருத்தி,பிடி பருத்தி விதை உற்பத்தி மற்றும் விற்பனையில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இவர்களுக்கு மறைமுகமாக அரசு எந்திரமும் ஒத்துழைக்கிறது, தற்பொழுதெல்லாம் அரசு விதை நிறுவனங்களோ, வேளாண் பல்கலைகளோ பருத்தி விதை உற்பத்தியில் கவனம் செலுத்துவதையே குறைத்துக்கொண்டன,பல இடங்களில் விதை உற்பத்தி மையங்களை மூடவும் செய்துவிட்டார்கள்.

கோவை மாவட்டம்,பொங்கலூரில் 57 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மாநில அரசு விதைப்பண்ணை இயங்கி வந்தது, பல வகை சான்றளிக்கப்பட்ட பருத்தி  ஹைபிரிட் விதைகளை உற்பத்தி செய்து பெருக்கி மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்து வெற்றிகரமாகவே இயங்கியது.காலப்போக்கில் தனியார் விதை விற்பனையாளர்களுக்கு சாதகமாக அரசாலேயே ஓரங்கட்டப்பட்டு இன்று பாழடைந்து கிடைக்கிறது, அரசுக்கு விதை உற்பத்தியில் உள்ள ஆர்வத்திற்கு இதுவே சான்று!

சுட்டி:

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/efforts-to-revive-57yearold-seed-farm/article4417172.ece

மரபணு மாசு :

இவ்வாறு திட்டமிட்டு மரபணு மாற்றத்தினை அனைத்திலும் புகுத்துவதை "மரபணு சூழல் சீர்க்கேடு" என்கிறார்கள். எப்படி காற்றில் கரியமிலவாயு கலப்பது சுற்று சூழல் சீர்க்கேடோ அப்படியே மரபணு கலப்பாக அனைத்தையும் மாற்றுவதையும் சீர்க்கேடு என்கிறார்கள், பழைய பாரம்பரிய மூல விதைகளே இல்லாத நிலையில் இச்சீர்கேடு திரும்ப சரி செய்ய இயலா நிலையை அடையவும் கூடும், எனவே தான் பாரம்பரிய விதைகளை காக்க வேண்டும் என பல இயற்கை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.



செய்தி:

Monsanto is a ticking time bomb for U.S. agriculture

As the USDA has now admitted, Monsanto's GMO experiments from 1998 - 2005 were held in open wheat fields. The genetically engineered wheat escaped and found its way into commercial wheat fields in Oregon (and possibly 15 other states), causing self-replicating genetic pollution that now taints the entire U.S. wheat industr//

சுட்டி:

http://www.naturalnews.com/040572_japan_ge_wheat_genetic_pollution.html

பாரம்பரிய விதை வங்கி:

இவ்வாறு மரபணு மாசு செய்வதன் இன்னொரு உள்நோக்கம் என்னவெனில் ,பிற்காலத்தில் மரபணு மாற்றிய பயிர்களை விதைக்காத விவசாயிகளின் வயலில் இருக்கும் பயிர்களின் விதையும் எங்களுடையதே என சொல்லி ராயல்டி கேட்டு மிரட்டலாம்!

இந்தியாவிலும் பிடி இல்லாத பருத்தி விதைகளை பாதுகாத்து பயிரிட சில தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

வட கர்நாடக மாநிலம், மகரி என்ற கிராமத்தினை சேர்ந்த விவசாயி "Nagappa Nimbegundi"(52) என்பவர் பிடி பருத்தியில் ஊடுபயிராக காய்கறிகளை பயிரிட்டால் சரியாக விளையாததை கண்டு , சாதாரண பருத்தி பயீரிட முயன்றுப்பார்க்கலாம் என நினைத்த பொழுது விதைகளே கிடைக்கவில்லை என்பதை அறிது பின்னார் தேடிப்பார்த்து விதைகள் வாங்கி பயிரிட்டுள்ளார், அப்பொழுது தான் பிடி பரவலால் பாரம்பரிய விதைகள் அழியும் நிலையில் உள்ளது என உணர்ந்து ,இந்தியா முழுவதும் சென்று 13 பழமையான பருத்தி வகைகளையும், 11 பிடி அல்லாத வகைகளையும் கண்டுப்பிடித்து சேகரித்து , பாரம்பரிய விதை  வங்கியினை உருவாக்கியுள்ளார்.

செய்தி:

//W DELHI: For 52-year-old Nagappa Nimbegundi, a farmer from Makari village in North Karnataka, this Independence Day was special. After three years of relentless efforts, he has managed to revive 13 varieties of indigenous cotton and 11 other varieties of non-Bt cotton in his farm.

The seed bank that he is developing is of significance as 90% of cotton production in India has been taken over by Bt cotton, a genetically modified variety developed by an American company. Indigenous varieties have become virtually non-existent and are difficult to find even at research institutions.//

சுட்டி:

http://articles.timesofindia.indiatimes.com/2013-08-16/india/41416828_1_bt-cotton-seed-companies-bengal-desi

இது போன்று மேலும் பல தன்னார்வலர்கள் சுய முயற்சியில் பல பாரம்பரிய விதைகளை மீட்டு பயிரிட்டு ,பாரம்பரிய விதை வங்கிகளை நடத்துகிறார்கள்.


மேலும் பிடி பருத்தியின் மூலம் பிற தாவரங்களிலும் பிடி கலப்பினம் இயற்கையாக நேரிடலாம், இதனால் பொதுவாக தாவர உயிர்ச்சூழலில் "மரபணு மாசு" ஏற்படலாம்.
அரிசியில் "மரபணு மாசு" ஏற்படுத்திவிட்டதாகா "பேயர்" நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கப்பட்டு ,750 மில்லியன் டாலர்கள்,நஷ்ட ஈடு பெறப்பட்டுள்ளது.

ஆனால் இம்மாதிரி நம்ம நாட்டில் எளிதில் வழக்கு நடத்தி நட்ட ஈடு பெற முடியாது என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக போய்விட்டது!

செய்தி:

while in 2006 a large part of the U.S. long-grain rice crop was contaminated by an experimental strain from Bayer CropScience , prompting import bans in Europe and Japan.

The company agreed in court in 2011 to pay $750 million to growers as compensation.//

சுட்டி:

http://www.dailymail.co.uk/news/article-2333381/GM-wheat-crops-America-facing-wheat-export-crisis-Europe-Japan-lead-way-rejecting-genetically-modified-crops.html

#அமெரிக்காவில் இவ்வாறு கோதுமையில் அனுமதியின்றி மரபணு கலப்பினை செய்துவிட்டதாக "மோன்சான்டோ" மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.


//The U.S. Judicial Panel on Multidistrict Litigation announced that at least 16 lawsuits will be sent to U.S. District Judge Kathryn Vratil in Kansas City for pretrial evidence gathering.
Lawsuits started to be filed in June after an Oregon farmer found wheat that would not die in his field. After the wheat was tested, it was discovered that it contained a gene that allowed it to withstand Monsanto’s herbicide glyphosate.
Monsanto had previously field tested a Roundup Ready wheat variety 15 years prior. It remains unknown how the GM variety got into the field since trials haven’t been conducted for many years after Monsanto abandoned the project after trading countries would not accept such wheat.
The GM wheat discovery this year caused multiple wheat importers to stop importing wheat from the United States for several weeks, dropping the price of U.S. wheat.//

சுட்டி:

http://www.agprofessional.com/news/GM-wheat-lawsuits-to-be-consolidated-in-Kansas-City-228392511.html


அமெரிக்க அரசும் மரபணு கோதுமையை பொது வயலில் பயிரிட அனுமதியே தரவில்லை என சொல்லியுள்ளது, அமெரிக்க கோதுமையில் மரபணு கலப்பு இருக்கலாம் என சந்தேகித்து ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவை அமெரிக்க கோதுமை இறக்குமதியை தடையும் செய்துள்ளது.

# ஹங்கேரியில் அரசுக்கே தெரியாமல் 1000 ஏக்கரில்  மோன்சான்டோ மரபணு மாற்ற மக்காசோளத்தினை பயிரிட்டுள்ளது கண்டறியப்பட்டு அரசால் அழிக்கப்பட்டு , ஒட்டுமொத்தமாக தடையும் விதித்துள்ளார்கள், இதெல்லாம் 2011 இலேயே நடந்துவிட்டது.



செய்தி:

Almost 1000 acres of maize found to have been grown with genetically modified seeds have been destroyed throughout Hungary deputy state secretary of the Ministry of Rural Development Lajos Bognar said. The GMO maize has been ploughed under, said Lajos Bognar, but pollen has not spread from the maize, he added.

Unlike several EU members, GMO seeds are banned in Hungary. The checks will continue despite the fact that seed traders are obliged to make sure that their products are GMO free, Bognar said.//

சுட்டி;

http://www.foodfirst.org/en/Hungary+destroys+GMO+corn

#
இதன் எதிரொலியாக இந்திய அரசும் அமெரிக்காவில் இருந்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை இறக்குமதி செய்ய தடை விதித்து விட்டது. ஏன் எனில் பெரும்பாலும் "அறிவிக்கப்படாமல் மரபணு தானியங்களை" பதப்படுத்தப்பட்ட உணவில் கலப்பது "அமெரிக்க வியாபார  தந்திரமாகும்". கண்டிப்பாக மரபணு தானியங்கள் பற்றி உணவு பாக்கெட் லேபிளில் குறிப்பிட வேண்டும் என ஐரோப்பிய யூனியனில் விதி இருக்கு,ஆனால் அமெரிக்காவில் அது கட்டாயமில்லை. அவ்வாறு கட்டாயமாக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

செய்தி:
//No import nod for GM processed food items till March 2014

NEW DELHI: The Union environment ministry has issued an order keeping in abeyance the controversial August, 2007 notification, which allows import of genetically modified (GM) processed food items into India without its prior permission, till March 31, 2014.//

சுட்டி:

http://articles.timesofindia.indiatimes.com/2013-10-25/india/43394778_1_gm-food-crops-ministry-final-order

உலகெங்குமே மரபணு மாற்று தொழில்நுட்பத்திற்கு எதிர்ப்புகள் உள்ள நிலையில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடு தேவையே இல்லாமல் முழு அளவில் "மரபணு மாற்றத்தொழில்நுட்பத்தினை "பின்ப்பற்ற என்ன தேவை?
மரபணு மாற்றுத்தொழில் நுட்பம் வந்தால் தான் உணவுப்பஞ்சம் தீரும்,அனைவருக்கும் உணவு மலிவாக கிடைக்கும் என்கிறார்கள்,ஆனால் இத்தொழில்நுட்பமோ உற்பத்தியை பெருக்கும் நோக்கிலேயே வடிவமைக்கப்படவில்லை, பூச்சிக்கொல்லியாகவும்,"கிளைப்போசைட், ரவுண்ட் அப்" போன்ற களைக்கொல்லி தாங்கு சக்தியை உருவாக்கவுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் உற்பத்தியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவோ, ஊட்டச்சத்து மிக்கதாகவோ உணவுப்பொருட்கள் மாறவேயில்லை என்பதே நிதர்சனம், தொடர்ந்து அவற்றையும் காண்போம்.
-------------------------

விதை நிறுவனங்களின் அறம்:

இந்தியாவில் பருத்தி சாகுபடியில் மாகாராஷ்ட்ரா,குஜராத்,ஆந்திரா,கர்நாடகா ,தமிழ் நாடு ஆகிய மாநிலங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. ஆனால் விதை உற்பத்தியில் ஆந்திர மாநிலமே முன்னணியில் உள்ளது, இந்தியாவின் விதை உற்பத்தி தலைநகரம் என அழைக்கப்படுகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளின் நிலங்களில் விதை உற்பத்தியில் ஈடுபடுகின்றன, மலிவான கூலியில் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தியுள்ளன.

இதில் பெரிய கொடுமை என்னவெனில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் "குழந்தை தொழிலாளிகள்"ஆகும். சுமார் 6 முதல் 16 வயதிற்குற்பட்ட சிறார்களை,அதிலும் குறிப்பாக பெண் சிறார்களை கிராமங்களில் இருந்து பிடித்து வந்து பண்ணையில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்து கொத்தடிமைகளாக வேலை வாங்குகிறார்கள், தினசரி சம்பளம் வெறும் 20 ரூபாய்களே ஆனால் வேலை நேரமோ 16 மணி நேரத்திற்கு குறையாத அளவில்.



பருத்தி சாகுபடி என்பது மிக அதிகமாக பூச்சி மருந்து,களைக்கொல்லி என புழங்கும் இடம் அவற்றின் ஊடே பணி புரிவதால் பல சிறார்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.

ஆந்திராவில் மட்டும் பன்னாட்டு நிறுவன சார்பாக ஒப்பந்த தொழிலார்களாக உள்ள சிறார்களின் எண்ணிக்கை நிறுவனங்கள் வாரியாக.

Hindustan Lever Ltd.- 2,500 ஏக்கர்- 22,500 சிறார்கள்.

Syngenta - 650 ஏக்கர் - 5,850சிறார்கள்.

Advanta -300 ஏக்கர் - 2,700 சிறார்கள்

Mahyco-Minsanto -1,700 ஏக்கர்- 15,300 சிறார்கள்

Proagro- 200 எக்கர் - 1,800,சிறார்கள்

Total ஏக்கர் -5350

மொத்த சிறார்கள் - 48,150.

பன்னாட்டு விதை நிறுவனங்கள் லாபத்திற்காக விவசாயிகளின் இயல்பான விதை உரிமைகளை மட்டும் பறிக்கவில்லை, சட்டத்திற்கு புறம்பாக குழந்தை தொழிலாளர்களையும் பயன்ப்படுத்தி வருகின்றன, ஆனால் அவர்களை நேரடியாக குற்றம் சட்டமுடியாத படி இதனை எல்லாம் ஒப்பந்த விவசாயிகளைக்கொண்டு நடத்துகின்றன, சட்டப்படி அவர்களுக்கும் ,இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நழுவி விடுவார்கள்.



சுட்டி:

கீழ்கண்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தளத்தில் மேலதிக தகவல்கள் உள்ளன.

http://www.indianet.nl/cotssec2.html

மரபணு மாற்றத்தின் யதார்த்த நிலை:

ஒரு மரபணு மாற்றம் எனப்படுவது ஒரு மூல உயிரியில் இருந்து தேவைப்படும் மரபணுவை மட்டும் வெட்டி , தேவைப்படும் உயிரியில் ஒட்டுவதாகும்.

வெட்டுவது கூட சரியாக வெட்டிவிடலாம்,ஆனால் ஒட்டும் இடத்தில் சரியாக தேவையான இடத்தில் ஒட்ட இயலாது,தோராயமாகவே ஒரு இடத்தில் நுழைக்க முடியும், அவ்விடம் உண்மையில் நமக்கு தேவையான மாற்றத்தினை தரக்கூடிய மரபணு தொடர் வரிசையாக இருக்கும் என சொல்லவும் முடியாது. காரணம் ஜீனோம் சீக்கவன்சில் அறியப்பட்ட மரபணுத்தொடர்களை விட அறியப்படாத "ஜங்க்" எனச்சொல்லப்படும் மரபணுத்தொடர்களே அதிகம் உள்ளது.

இதன் விளைவாக மரபணு மாற்றம் உரிய விளைவை "உருவாக்கப்பட்ட உயிரியில்" தரும் என சொல்ல முடியாது, நூற்றுக்கு 90 சதவீதம் போல மரபணு மாற்ற வினை தோல்வியாகவே அமையும், வெற்றிகரமாக நடந்தவையும் சிறப்பான விளைவை தருமா என்பதும் கேள்விக்குறியே.

# மேலும் எல்லா உயிரியிலும் என்னவென்று அறியாத 'ஜன்க் டி.என்.ஏ" நிறைய உள்ளன, இவற்றுடன் பிடி மரபணு வினைப்புரிந்தால் என்னவாகும் என யாருக்கும் தெரியாது, ஒரு வேளை விரும்பத்தகாத விளைவுகளையும் உருவாக்கலாம்.

பெரும்பாலும் "ஆபரேஷன் சக்சஸ்,பேஷன்ட் டெட்"  கதை தான்!

# மிக நுண்ணிய மரபணுவில் ,தோராயமாக மரபணு மாற்றம் செய்யப்படுவது கண்ணை மூடிக்கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்வது போலத்தான்.

# மரபணு மாற்ற உயிரியில் ஒரு குறிப்பிட்ட பண்பினை உருவாக்கி தொடர்ந்து அதனையே பயிர் செய்வதன் மூலம், ஒரே வகையான நோய்,பூச்சி என்ற நிலை உருவாகி, அதன் எதிர்ப்பு தன்மையும் குறைந்து ,பின்னர் சாதாரண பூச்சி,நோய் தாக்குதலுக்கே கடும் விளைவை தரக்கூடும்.

எனவே எதிர்ப்பு தன்மை குறைந்த ஒரு உயிரி சூழல் உருவாகிவிடும்.

# மரபணு மாற்றத்தின் போது , பேக்ட்ரீயா, மற்றும் பூஞ்சைகள் தொற்றினை தாவரங்கள் தாக்கு பிடிக்க வேண்டும் என ஆன்டி பயாடிக் ரசாயனங்கள் பயன்ப்படுத்தப்படும், எனவே மரபணு மாற்ற பயிரில் உருவாகும் நுண்ணுயிர்களும் ஆன்டி பயாடிக் எதிர்ப்பை வளர்த்துக்கொள்ளும், எனவே மரபணு மாற்ற பயிர்கள் மூலம் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் ,ஆண்டி பயாடிக் மருந்து கொடுத்தாலும் மனிதருக்கு நோய்கள் குணமாகாது.

# ஒரு பூச்சி மருந்து ,பூச்சியினை கொல்கிறது, அதே மருந்தை  மனிதர்கள் உட்கொண்டால் அவர்களும் இறப்பார்கள் என்பது உண்மை.

அதே போல பிடி டாக்சின் புரதமான கிரை-3ab உட்கொண்டால் ,காய் துளைப்பான் இறக்கிறது.

இப்பொழுது கிரை 3ab  டாக்சின் கொண்ட அதே தாவரப்பகுதியை மனிதன் உண்டால்,அதில் உள்ள நஞ்சு மனிதனை பாதிக்காதா?  ஒரு பூச்சியை கொல்லும் எனில் அது மனிதனையும் கொல்லும்,  அல்லது பாதிப்பாவது கொடுக்கும் என்பதே நிதர்சனம்.

எலி மருந்து வைத்து எலியை கொல்கிறோம்,  விஷம் தோய்ந்த அவ்வெலியை பூனை சாப்பிட்டால் பூனைக்கு நஞ்சு போகாதா?

இங்கே தாவரத்திலேயே தோய்ந்த பிடி டாக்சின் புரதமும் அப்படியானதே.

# பிடி டாக்சின் புரதமானது மனித செரிமான அமைப்பால் சிதைக்கப்பட இயலாத ஒரு புரதமாகும், எனவே உயிரினை கொல்கிறதோ இல்லையோ ஒவ்வாமையை பெரும்பாலும் உருவாக்கிவிடும்.

உணவில் பிடி நஞ்சு: பிடி பருத்திப்பால் அபாயம்!

கனடாவில் கருவுற்ற பெண்களின் இரத்த மாதிரியில் பிடி டாக்சின் புரதம் இருந்துள்ளது, மேலும் கருவில் இருக்கும் குழந்தைகளின் ரத்தத்திலும் பிடி டாக்சின் புரதம் இருந்துள்ளது.

அவர்களை விசாரித்த போது அவர்கள் ,மரபணு மாற்றப்பட்ட சோயா பீன், உருளை, மக்காச்சோளம்,பருத்தி எண்ணையிலான உணவை உண்பது தெரிய வந்துள்ளது,எனவே மரபணு விதையில் இருந்து பிடி டாக்சின்கள் உடலுக்குள் சென்றுள்ளது உறுதியாகிறது. இவ்வாய்வு முடிவுகளை "the journal Reproductive Toxicology இலும் வெளியாக தேர்வு செய்யப்பட்டதாம்.

நமது செரிமான அமைப்புகளால் செரிக்கப்படாத பிடி டாக்சின்கள் ரத்தத்தில் கலந்து அப்படியே அழியா நிலையில் பிளாஸ்டிக் போல  உடலில் சுற்றி வந்துக்கொண்டிருந்துள்ளது.

வழக்கமாக தாவரத்தின் மீது செலுத்தப்படும் பூச்சிக்கொல்லியின் எச்சம் அதன் விதைகளிலேயே அதிகம் சேகரமாகும், அதே போல பிடி டாக்சின்களில் எச்சமும் பிடி பருத்தியின் விதையில் தான் அதிகம் இருக்கிறதாம்.



பருத்தி எண்ணையாவது சமைக்கும் போது நன்கு கொதிக்க வைக்கப்படுகிறது,அப்படியும் பிடி டாக்சின் சிதையவில்லை, நம் நாட்டிலோ பருத்திப்பால் என பருத்திக்கொட்டையில் இருந்து எடுத்து அருந்துகிறோம்,அவை அந்த அளவு முழுக்க வேகவைப்பதோ சூடுப்படுத்தப்படுவதோ இல்லை எனவே மிக நன்றாக பிடி டாக்சின்கள் அழியாமல் முழு வடிவில் இருக்கும், அவற்றை தொடர்ந்து பருகினால் பிடிடாக்சின்கள் உடலில் சிறுக சிறுக சேர்ந்து ஒரு காலத்தில் "chronic poison'" ஆகி பெரும் பின் விளைவை உண்டாக்கலாம். எனவே பெரும்பான்மை பிடி பருத்தி பயிரிடும் இக்காலத்தில்  "பிடி பருத்திப்பால்" தான் கிடைக்கும் அதனைக்குடிப்பதும் அபாயமான ஒன்றாகிவிட்டது எனலாம். பிடி பருத்தி மூலம் செய்யப்படும் அல்வாவுக்கும் இதே நிலை தான்.

வருங்காலத்தில் இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய உணவு என அறிவிக்கப்படும் நிலை கூட வரலாம்.

பிடி டாக்சின் புரதம் என்பது விஷத்தன்மையே இல்லாத ஒன்றாகவே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும்  ,அவை உடலுக்கு தேவையில்லாத ஒரு பொருள்,  பிளாஸ்டிக் குப்பைகள் போல ரத்தத்தில்  சேர்ந்து அழியாமல் தொடர்ந்து குவிந்துக்கொண்டே இருந்தால் ஒரு எல்லையில் கடும் விளைவை உண்டாக்க நிச்சயம் வாய்ப்புண்டு.

# அதே போல பிடி பருத்தி விதைகள் மாட்டிற்கு தீவனமாக அளிக்கப்படுகிறது ,மாட்டின் ஜீரண மண்டலத்தாலும் பிடி டாக்சின் புரதம் செரிக்கப்படுவதில்லை,  அழியாத பிடி டாக்சின் புரதம் மாட்டின் பாலின் மூலம் மீண்டும் மனிதர்களுக்கே வந்து சேரும் வாய்ப்புள்ளது. இப்படி பல வகையிலும் தொடர்ந்து பிடி நஞ்சை நம் உடலில் சேர்த்துக்கொண்டு போனால் எதிர்காலத்தில் அனைவருமே நோயோடு வாழ்வதை தவிர வேறு வழியில்லை, தவணை முறையில் மரணம் எனலாம்!


பிடி பருத்தியின் கிரை டாக்சின் புரதத்தால்  பருத்திப்பால்  மற்றும் மாட்டுப்பால் உற்பத்தி நஞ்சாவது குறித்து இது வரையில் வெகுஜன ஊடகம் எதுவுமே கண்டுக்கொள்ளவில்லை, மரபணு மாற்ற உணவால் பிடி புரதம் ரத்தத்தில் கலந்து விடுவதை வைத்து ,பிடி பருத்திப்பால்,மற்றும் மாட்டுப்பால் நஞ்சாக வாய்ப்புள்ளதை கணித்துள்ளேன்,இனி வருங்காலத்தில் வெகுஜன ஊடகங்கள் இதனை காப்பி அடிச்சு புதுசா கண்டுப்பிடிச்சா போல சொன்னா அடியேனின் தீர்க்க தரிசனத்தினையும்  நினைவு கூரவும் ...ஹி ...ஹி சும்மா ஒரு வெளம்பரம்!

மேலும் சர்க்கரை வியாதி, ஆண்மை இழப்பு போன்றவற்றை எலிகளில் ஏற்படுத்தியுள்ளதை சில ஆய்வக பரிசோதனை முடிவுகள் உறுதி செய்கின்றன.

செய்தி:

//Scientists from the University of Sherbrooke, Canada, have detected the insecticidal protein, Cry1Ab, circulating in the blood of pregnant as well as non-pregnant women.
They have also detected the toxin in fetal blood, implying it could pass on to the next generation. The research paper has been peer-reviewed and accepted for publication in the journal Reproductive Toxicology. The study covered 30 pregnant women and 39 women who had come for tubectomy at the Centre Hospitalier Universitaire de Sherbrooke (CHUS) in Quebec.
None of them had worked or lived with a spouse working in contact with pesticides.
They were all consuming typical Canadian diet that included GM foods such as soybeans, corn and potatoes. Blood samples were taken before delivery for pregnant women and at tubal ligation for non-pregnant women. Umbilical cord blood sampling was done after birth.


Read more at: http://indiatoday.intoday.in/story/toxin-from-gm-crops-found-in-human-blood/1/137728.html//

# மரபணு மாற்ற பயிர்களால் பூச்சி மருந்து பயன்ப்பாடு குறைந்துள்ளதா?

இந்தியாவில் பிடி பருத்தி அறிமுகம் ஆகி சுமார் பத்தாண்டுகள் ஆகிறது, பிடி நுட்பத்தால் பூச்சி மருந்து பயன்ப்பாடு குறையும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படும் எனப்பொதுவாக சொல்லப்படுவதால், அதன் உண்மை தன்மை அறிய மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம் ,இணை இயக்குனர்  Dr. Kesavraj Kranthi தலைமையில் ஒரு ஆய்வினை மேற்கொண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.

அவர்களின் ஆய்வு கணிப்பு என்னவெனில் எதிர்ப்பார்த்த அளவு பூச்சி மருந்து பயன்பாடு குறையவில்லை, மேலும் பல புதிய செகன்டரி காட்டன் பெஸ்ட்கள் அதிகமாகியுள்ளது என்பதாகும்.

படம்:


சுட்டி:

சுட்டியில் உள்ள பிடிஎஃப் படித்தால் முழு அறிக்கையின் விவரம்ம் கிடைக்கும்.

படத்தில் பார்த்தால் தெரியும்,

பருத்திக்கும்,மற்ற பயிர்களுக்கும் பயன்ப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் ஒப்பீடு ,

ஆண்டு-2004

மொத்த பருத்தியில் பிடி பருத்தி சதவீதம் - 5.59

பூச்சிக்கொல்லி மதிப்பு: 1032 கோடிகள்.

பூஞ்சை கொல்லி - 6 கோடி.

களைக்கொள்ளி- 4 கோடி.

பருத்திக்கு மட்டும் மொத்தம்= 1040 கோடிகள்.

ஒட்டு மொத்த விவசாய பூச்சிக்கொல்லி பயன்பாட்டின் மதிப்பு =2455 கோடிகள்.

 இப்பொழுது பிடி காட்டன் சாகுபடி அதிகமாக நடக்கும் ஆண்டினை காண்போம்,

ஆண்டு - 2010

பிடி பருத்தி சதவிகிதம்- 90.67%

பூச்சிக்கொல்லி- 884 கோடி,

பூஞ்சைக்கொல்லி -67 கோடி,

களைக்கொல்லி - 87 கோடி.

பருத்திக்கு மட்டும்மொத்தம்- 1038 கோடிகள்.

ஒட்டு மொத்தமாக அனைத்து பயிர்களுக்குமான செலவு= 4283 கோடிகள்.


மேற்கண்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், பிடி பருத்தி குறைவாக பயிரிட்ட 2004 காலத்தில் 1040 கோடிகள் செலவாகியுள்ளது, அதே சமயம், பிடி பருத்தி பருத்தி  90.45 சதவீதம் இருந்த போது 1038 கோடிகள் செலவாகியுள்ளது.

பிடி பரவலான பின் ஏற்பட்ட பூச்சிக்கொல்லி பயன்ப்பாட்டு அளவில் ஏற்பட்ட மாற்றம் என்பது வெறும் 2 கோடி ரூபாய்கள் மதிப்பளவில்  தான்!

நம்ம பிடி ஆதரவு விஞ்'சாணிகள்" பூச்சிக்கொல்லி செலவு குறைவு என சொன்னது எப்படி எனில், நேரடியாக "பூச்சிக்கொல்லிக்கு" மட்டும் ஆன செலவை வைத்தே, மேலும் மற்றப்பயிர்களுக்கு செலவான பூச்சிக்கொல்லிகள் அளவு கூடியதை ஒப்பிட்டு சதவீதத்தில் பருத்திக்கு குறைந்துவிட்டது என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

ஆனால் 2004 ஐ விட 2010 இல் அதிகமாக பூஞ்சைக்கொல்லியும்,களைக்கொள்ளிக்கும் செலவாகியுள்ளது. கூட்டிக்கழித்து பார்த்தால் கிட்டத்தட்ட சமம் எனும் நிலை,ஏனெனில் பிடி பருத்திக்கு பூஞ்சை எதிர்ப்பு தன்மை குறைவு என்பதால் அதன் செலவு கூடியுள்ளது.

களைகள் அதிகம் இருந்தால் பிடி விளையாது,ஆனால் சுதேசி பருத்திகள் ஓரளவு களைகளை சமாளிக்கும் ,எனவே களைக்கொல்லியே தேவைப்படாது.

பூச்சிக்கொல்லி செலவை கொஞ்சம் குறைத்து மற்ற ரசாயன செலவையே பிடி பருத்தி அதிகரித்துள்ளது தெளிவாகிறது.

எனவே விவசாயிகளுக்கு  பூச்சிக்கொல்லி செலவு குறைந்து பண ஆதாயமும் இல்லை, சுற்று சூழல் பாதுகாப்பும் இல்லை என்பதே உண்மை.

பிடி பருத்தி போட்டதால் விளைச்சல் பெருகிவிட்டது நல்ல லாபம் என்கிறார்களே அதிலாவது உண்மை உள்ளதா எனப்பார்க்கலாம்.

(தற்சமயம் ஓரளவு லாபம் அளிப்பதாக உள்ளது ஆனால் அது நீடித்த ஒன்றல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.)

பிடி பருத்தி விளைச்சல்:

பிடி பருத்தி சாகுபடியால் விளைச்சல் பல மடங்கு உயர்ந்துள்ளது என பொதுவாக சொல்லப்படுவது உண்மையல்ல, ஒட்டு மொத்தமாக பருத்தி உற்பத்தி அதிகம் ஆனது உண்மை ஆனால்  அது பிடி பருத்தியால் அல்ல, மொத்த சாகுபடி பரப்பு அதிகரிப்பால் மட்டுமே.

காண்க படம்.




http://www.business-standard.com/article/companies/seed-companies-reap-rich-harvest-on-bt-cotton-wave-112022300038_1.html

ஆண்டு- 1950-51 -

 பரப்பளவு - 5.8 மில்லியன் ஹெக்டேர்.

மொத்த உற்பத்தி- 3.4 மில்லியன் பேல்கள்.

ஒரு ஹெக்டே விளைச்சல்- 99 கி.கி

அக்காலக்கட்டத்திற்கு குறைவு என தோன்றலாம்,ஆனால் அதுவே உலக அளவில் பெரிய உற்பத்தி ஆகும், நாம் 1800 களிலேயே இங்கிலாந்துக்கு லட்சம் பேல்கள் பருத்தி ஏற்றுமதி செய்தவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியில் பருத்தி உற்பத்தியில் இந்தியா அப்போது அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இருந்தது, அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பின் இங்கிலாந்தின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்தது இந்தியாவே.

பிரிட்டீஷார் தங்கள் தொழில் நலனுக்காக இந்தியாவில் துணி உற்பத்தி நடக்காமல் பார்த்துக்கொண்டு மூலப்பொருட்களான பருத்தி மற்றும் நூல் உற்பத்தியை பெருக்கினார்கள்.

இதனால் தான் இந்தியாவில் அப்பொழுதே நிறைய நூற்பாலைகள் பெருகின, அதுவும் மும்பையில் மிக அதிகம்,எனவே இந்தியாவின் மான்செஸ்டர் எனப்பட்டது, கோவைப்ப்பகுதியிலும் நூற்பாலைகள் பெருகியதால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப்பட்டது.

சரி பழங்கதை போகட்டும், பிடி கதைக்கு வருவோம்,அதான் பிடி சாமியின் மயிர் கூச்சறிய செய்யும் திகில் கதையை விட பிரமாதமாக இருக்கும் அவ்வ்!



பி.டி பருத்திலாம் வந்த 2004 -5 ஆண்டு காலத்தினை பார்ப்போம்,

பி.டிப்பருத்தியின் சதவீதம் 5.59.

மொத்த பரப்பளவு- 8.78 மி.ஹெக்டேர்.

மொத்த உற்பத்தி - 24.3 மி.பேல்கள்.

ஒரு ஹெக்டேர் விளைச்சல்- 470 கி.கி

மொத்த உற்பத்தியினை வைத்து கூடி இருக்கிறது, மேலும் ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி திறனும் 470 கி.கி என உயர்ந்துள்ளது, இது பிடி பருத்தியினால் என சொல்ல முடியாது, ஏன் என்னில் 2004 இல் பி.டி பருத்தி வெறும் 5.59 சதமே சாகுபடியில் இருக்கு.

சரி இப்போ 2012 ஆம் ஆண்டுக்கான நிலவரத்தினை காண்போம்.

பி.டி பருத்தி சதவீதம் - 94.75%

மொத்த பரப்பு- 12.19 மி.ஹெக்டேர்கள்.

மொத்த உற்பத்தி - 34.5 மில்லியன் பேல்கள்.

உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு - 481 கி.கி.

இப்போவும் உற்பத்தி கூட இருக்குனு சொல்லலாம்,ஆனால் இதெல்லாம் மொத்த சாகுபடி பரப்பு உயர்வால் தான், ஏன் எனில் ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி என பார்த்தால் தெரியும், 2004 இல் 5.59% ஆக பிடி  இருக்கும் போது 470 கி.கி,இப்பொழுது 94.5% இருக்கும் போது 481 கி.கி தான் அதாவது பிடி சாகுபடி அதிகரிப்பால் ஒரு ஹெக்டேருக்கு வெறும் 11 கிலோ உற்பத்தி தான் அதிகரித்துள்ளது.

எப்படியோ அதிகரித்துள்ளதே என சொல்வீர்கள் ஆனால் விவசாய பொருளாதாரமே அறியாதவர்கள் என்றே சொல்ல வேண்டும், ஏன் ஏனில் ஒரு பாக்கெட் பாரம்பரிய விதை என்பது 400-500 ரூக்கு வாங்கி பயிரிடும் போது 470 கிலோ உற்பத்தி, ஆனால் இப்பொழுதோ சுமார் 980 ரூக்கு பிடி பருத்தி விதை வாங்கி பயிரிட வேண்டியுள்ளது, அதாவது விதை செலவு  இரட்டிப்பு ஆகியுள்ளது ,மேலும் சுற்றுச்சூழல், நுகர்வோர் நலன் ,விதையுரிமை என அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது, ஒரு ஹெக்டேருக்கு 11 கிலோ உற்பத்தியினை அதிகரிக்க இவ்வளவு பெரிய அபாயத்தினை எதிர்க்கொண்டு பயிரிட வேண்டுமா?

இவ்வுற்பத்தியை மேம்படுத்தப்பட்ட கலப்பின பாரம்பரிய விதைகளாலேயே எட்ட முடியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

மேலும் 2004 இல் இருந்து பருத்தி உற்பத்தியினை கவனித்து வந்தால் தெரியும்,

2007 -521 கி.கி

2008- 554

2009- 524

2010 -503

2011- 511

2012- 480.கி.கி

ஆரம்பத்தில் கொஞ்சம் உயர்ந்த உற்பத்தி படிப்படியாக சரிய துவங்கி மெதுவாக உற்பத்தி திறன் குறைந்து வருவதை காணலாம், பிடி பருத்தி இல்லாத காலத்தின் போது இருந்த உற்பத்தி திறனை நோக்கி பிடி பருத்தியின் உற்பத்தி சரிந்து செல்வதாக வேளாண் பொரூளாதார வல்லுனர்கள் சொல்லுகிறார்கள்.

எனவே பிடி பருத்தி என்பது உற்பத்திக்கு கிடைத்த மாபெரும் வரம், பூச்சிகளுக்கு எமன் என்பதெல்லாம் 'பிரச்சார மாயைகள்" என்பது தெளிவாகும்.

பிடி அல்லது மரபணு மாற்றத்தினால் பெரும் பலன்கள் உருவாகும் என்பதெல்லாம் வெற்று காகித அறிக்கைகளே, உண்மையில் பெரும் பலன் என்பதெல்லாம் இல்லை எல்லாம், பெரும் பன்னாட்டு விதை நிறுவனங்கள் சந்தைப்பிடிக்க கிளப்பிவிடும் கட்டுக்கதைகளே என்பது தெளிவாகி இருக்கும், இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது சந்தர்ப்பம் வாய்க்கும் போது மீண்டும் தொடர்வேன்!

(இவன திருத்தவே முடியாது போல ,இப்படி பெருசா எழுதி தலைய பிச்சுக்க வைக்கிறானே... அவ்வ்)

------------------------------

பின்குறிப்பு:

# இன்னும் பிழைத்திருத்தம் செய்யப்படவில்லை, பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும் ,திருத்தம் செய்யப்படும்.

# சுட்டிகள் முதல் அனைத்தையும் முழுவதும் படித்தபின் , ஏதேனும் விவாதம் இருப்பின் உங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம், முழுவதும் படிக்காமல் முன் முடிவுடன் விவாதம் செய்ய முற்படுவதை தவிர்க்கவும். அடியேன் விஞ்சானியெல்லாம் இல்லை, ஏதோ வாசிப்பின் வாயிலாக உருவான புரிதலை பகிர்ந்துக்கொண்டுள்ளேன், கருத்துப்பிழை, சொற்பிழை இருப்பின் எவ்வளவு இருக்கோ அவ்வளவு குறைச்சுக்கிட்டு கருத்து சொல்லலாம் அவ்வ்!

# மேலும் எமது முந்தைய விவசாயம் சார்ந்த இடுகைகளின் சுட்டியும் அளித்துள்ளேன் ,விருப்பம் இருப்பின் வாசிக்கவும்.

என்னோட இந்த விவசாயப்பதிவுகளையும் பாருங்க,




#வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: பசி!

1) விவசாயி படும் பாடு-1

2)விவசாயி படும் பாடு-2

இந்தப்பதிவுகளையும் பார்க்கவும்.

1)பஞ்ச கவ்யம்

2)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1

3)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2

4)நடவு எந்திரம்

5) ஒருங்கிணைந்த விவசாயம்
-------------------------------

தரவுகள்:

 சுட்டிகள் அனைத்தும் பதிவினூடாக அளிக்கப்பட்டுள்ளது , எனினும் உங்களின் மேலான பார்வைக்கு மீண்டும் பட்டியலிடப்படுகிறது.

# http://articles.timesofindia.indiatimes.com/2013-08-16/india/41416828_1_bt-cotton-seed-companies-bengal-desi

# http://articles.timesofindia.indiatimes.com/2011-05-17/nagpur/29551789_1_bt-cotton-seeds-price-hike-bg-ii

# http://articles.timesofindia.indiatimes.com/2002-04-29/hyderabad/27136416_1_bt-seed-bt-cotton-pushpa-m-bhargava

# http://articles.timesofindia.indiatimes.com/keyword/seed-companies

# http://articles.timesofindia.indiatimes.com/2012-06-02/hyderabad/31982969_1_bt-cotton-seed-ankur-seeds-seed-companies

# http://articles.timesofindia.indiatimes.com/2012-08-04/ranchi/33034499_1_protection-of-plant-varieties-claim-compensation-branch-office

# http://thealternative.in/beat/india-after-gandhi-monsanto-raj-bt-cotton/

# http://www.indianet.nl/cotssec2.html

# http://www.mindfully.org/Industry/2003/Monsanto-Unilever-Child-Labour17may03.htm

# http://www.globalissues.org/article/214/stress-on-the-environment-society-and-resources

# http://agrariancrisis.in/2012/06/28/pesticide-use-in-bt-cotton-dr-kesavraj-kranthi/

# http://www.ota.com/organic/environment/cotton_environment.html

# http://ejfoundation.org/sites/default/files/public/the_deadly_chemicals_in_cotton.pdf

# http://www.business-standard.com/article/markets/shortage-of-bt-cotton-seeds-may-hit-2011-12-production-able-111021500188_1.html

# http://www.seedbuzz.com/knowledge-center/article/impact-of-bt-cotton-seeds-on-indian-agriculture

# http://articles.economictimes.indiatimes.com/2012-06-11/news/32175116_1_cotton-seed-bollgard-ii-bt-cotton

# http://articles.timesofindia.indiatimes.com/2013-05-21/aurangabad/39417570_1_bt-cotton-seeds-seed-companies-farmers

# http://www.business-standard.com/article/markets/shortage-of-bt-cotton-seeds-may-hit-2011-12-production-able-111021500188_1.html

# http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/glut-triggers-price-war-among-bt-hybrid-cotton-seed-makers/article4686541.ece

http://www.thehindu.com/sci-tech/agriculture/article3222647.ece

மற்றும் நமது அபிமான "விக்கிப்பீடியா &  கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
-----------------------------------------------------------------------