Friday, May 16, 2014

தேர்தல்-2014 : ஒரு புதிய பார்வை!

(இந்த வவ்வால் பார்வையே வித்தியாசமா இருக்கே ...ஹி.ஹி)

அரசியல் பதிவு ஒன்னு போட வேண்டும் என நினைத்து ,அவ்வப்பொழுது சில குறிப்புகள் எடுப்பதும் ,பின்னர் குப்பையில் இடுவதுமாக போய்க்கொண்டேயிருந்தது, இன்றாவது அப்பதிவை வெளியிடவில்லை,எனில் ,நமது அரசியல் கணிப்புகளை பின்னர் சொல்வதில் பயனேயில்லை, அதான் இன்று முடிவே சொல்லிட போறாங்களே அப்புறம் என்ன கணிப்பு வேண்டிக்கிடக்கு, சரி நேரா மேட்டருக்கு போவோம்!

அகில இந்திய அளவில் மோடி அலை வீசுது என்கிறார்கள் ,மெரினா பீச்சில் கடல் அலையை தவிர வேற அலை எதுவும் நமக்கு தெரியலை, பிஜேபி என்பது தேசியக்கட்சி எனினும் பல மாநிலங்களில் அடித்தளமே இன்னும் உருவாக்கிக்கொள்ளாத கட்சியாக தான் உள்ளது.

# பிஜேபி செல்வாக்குள்ள மாநிலங்கள்;

குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, ம.பி, டெல்லி, கோவா, இமாச்சால், உ.பி,ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களே, இங்கு தான் பெரும்பாலான தொகுதிகளை வென்றாக வேண்டும்.

தென்னகத்தில் கர்நாடகம் தவிர , கேரளா, தமிழ்நாடு,ஆந்திரா ,புதுவையில் எல்லாம் செல்லாக்காசு.

அதே போல , ஒரிசா, பீகார் , சத்தீஸ்கர் ,மேற்கு வங்கம், ஜார்கண்ட் , மேலும் வட கிழக்கு மாநிலங்கள் ஏழிலும் பெரிதாக செல்வாக்கே இல்லை.இப்பகுதிகளில் எல்லாம் மாநிலத்துக்கு ஒரு எம்.பி வென்றால் அதிசயம்.

எனவே பொதுவாக களப்பணி ஆற்றுதல் ,வாக்கு திரட்டுதல் என செய்தால் மட்டுமே அலையே அடிச்சாலும் வெற்றி கிட்டும் எனவே அடித்தளமே பல மாநிலங்களில் இல்லாத பிஜேபி தனிப்பெரும் மெஜாரிட்டியாக 272 இடங்களை பெற முடியாது( கரிப்பூசிடுவாங்களோ...ஹி...ஹி எனக்கு தான்)

பிஜேபி அதிகப்பட்சம் வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள்- சுமார் 170-190 இடங்களே.

கூட்டணிகள் வெல்ல வாய்ப்புள்ள இடங்கள் சுமர் 50 வரையிலே இருக்கும் ,மொத்தமாக கூட்டிக்கழித்து பார்த்தால் 240 இடங்களுக்குள் வரக்கூடும்.

# காங்கிரஸ் தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் உள்ளது அதே போல சுமார் 15 மாநிலங்களில் இன்னமும் ஆட்சியில் உள்ளது.

வடக்கிழக்கு மாநிலங்கள் ஏழிலும் நல்ல அடித்தளமும் உள்ளது.

பொதுவாக தென்னக மாநிலங்களில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் இன்னமும் வலுவான சக்தியே ,எனவே அகில இந்திய அளவில் பிஜேபியை விட அடித்தளம் வலுவான கட்சியே.

தொடர் ஊழல் குற்ற சாட்டுகள், தொடர்ந்த்து 10 ஆண்டுகள் ,ஆட்சி எனும் நிலையில் ஆளுங்கட்சிக்கு எதிரான  அதிருப்தி என்பவை பலவீனங்களாகும் ,அதுவே பிஜேபியின் பலம், கடந்த பத்தாண்டுகளில் பிஜேபி எதிர்க்கட்சியாக பெரிதாக எதுவுமே சாதிக்கவில்லை , மோடியை திட்டமிட்டு விளம்பரப்படுத்தினாலும் , அவர் அகில இந்திய பிராண்டாக சொல்லிக்கொள்ள தக்க சாதனைகளை எதுவும் செய்யவில்லை.

காங்கிரசின் கோஷ்டி அரசியல்,ஊழல், அதிருப்தி மன நிலை ஆகியவற்றினை கடந்து இம்முறை அதிகப்பட்சம் வெற்றிப்பெற வாய்ப்புள்ள இடங்கள் சுமார் 110-120, குறைந்த பட்சம் 78 இடங்கள்.

தமிழகத்தினை பொறுத்த வரையில்,

அதிமுக

தேர்தலில் முந்திக்கொண்டி களத்தில் குதித்தது முதல் அனைத்திலும் பிறக்கட்சிகளை தனக்கு பின்னால் வர வைத்தார் அம்மையார்,ஆனால் நாற்பதும் நமக்கே எனும் வெற்றி நிலையெல்லாம் இல்லை,

மொத்தமாக கூட்டிக்கழித்து பார்த்தால் 23-24 இடங்கள் அதிகபட்சமாகவும், குறைந்த பட்சம் 17 இடங்கள் வரலாம்.

இந்தளவு இடங்கள் கூட எப்படி வருமெனில் , கடந்த ஆட்சியை விட தேர்தல் வரையில் மின் வெட்டினை சமாளித்து விட்டது ,மேலும் தேர்தலுக்கு வெகு நெருக்கமாக பல இடங்களில் "அத்தியாவசிப்பணிகளைசெய்துக்கொடுத்தது", உ.ம். சென்னை புற நகர்ப்பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலையே இல்லாத இடங்களில் எல்லாம் தார்ச்சாலை வந்துவிட்டது

(road work on progress)

தேர்தல் காலங்களில் எல்லாம் இப்படி செய்வது தானே என நினைக்கலாம், ஆனால் எனக்கு தெரிஞ்சு 2 சட்ட மன்ற தேர்தல் ,2 நாடாளு மன்ற தேர்தல் வந்து விட்டது ஆனாலும் அவ்விடங்களில் சாலைகளே போடப்படவில்லை, இம்முறை தான் சாலைகள் போடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு வசதி என்பதோடு "லேண்ட் வேல்யூ" வேறகூடிப்போச்சு -))

மேலும் சென்னைப்புற நகர்ப்பகுதிகளில் பல மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன, இது வரையில் பேருந்துகள் செல்லாத தடங்களில் எல்லாம் செல்கின்றன.


கூடுவாஞ்சேரி அருகில் ஜிஎஸ்டி சாலையில் இருந்து சுமார் 8-10 கி.மி உள் இருக்கும் பகுதி காட்டூர் ,காட்டுப்பாக்கம் , காரணை ,கன்னிவாக்கம் போன்ற பகுதிகளுக்கு எல்லாம் மினி பஸ் ஜிகு ஜிகு என போகுது,முன்னர் எல்லாம் இருசக்கர வாகனத்தில் கூடுவாஞ்சேரி ,அல்ல ஊரப்பக்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து , பார்க்கிங்கில் வண்டிய விட்டு தான் நகருக்குள் செல்ல முடியும், இப்போ நேராக காட்டூர் - தாம்பாரம், கன்னிவாக்கம் - தாம்பரம் என மினி பஸ்கள் ஓடுது.


இதனால் சாலை வசதி ,பேருந்து வசதியுள்ள இடங்கள் என சொல்லி ரியல் எஸ்டேட் வேற தூக்குது , மக்களும் ஹேப்பி!!!.

ஒரு சில மினிபஸ்கள் விட்டு சில ஆயிரம் ஓட்டுக்களை உறுதி செய்தாயிற்று ,இப்படி ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துலவும் , சில பல ஆயிரங்களில் கூடுதல் வாக்கினை அம்மையார் கைப்பற்றக்கூடும் என்பதால் ,இம்முறை நல்ல முடிவு கிடைக்கும் என தெம்பாக உள்ளார் எனலாம்.

தேர்தல் கமிஷன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என சொன்னதெல்லாம் "காகித அறிக்கை" தான் ,அவர்களும் பார்த்தா "ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும்,பூசாதமாதிரியும் இருக்கணும்' என கெடுபிடி போல ஒரு மாதிரி வேலைப்பார்த்து முடித்து விட்டார்கள், வாக்குப்பதிவுக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்னரே வாக்களர்களுக்கு ஒரு ஓட்டுக்கு சுமார் 200 அல்லது 300 ரூ பட்டுவாடா ஆகிவிட்டது , கடைசி நாளில் பணப்பட்டுவாடா செய்யலாம் என முயற்சித்து மாட்டியது ,திணறியது எல்லாம் எதிர்க்கட்சிகளே அவ்வ்!

இதில் வேற மேலிடத்தில்  500 ரூ கொடுக்க சொல்லி கொடுத்ததில் அமுக்கிட்டு 300 அல்லது 200 கொடுக்கிறாங்கனு மக்களுக்கு புலம்பல் அவ்வ்.

# திமுக:

மேற் சொன்ன எந்த சாதகங்களும் இல்லை ,மேலும் கடந்த 10 ஆண்டுகளாக  மத்தியில் ஆட்சியில் இருந்தும் 2ஜீ இல்  மட்டுமே "பேர்" வாங்கியிருக்கு மற்றபடி சொல்லிக்கொள்ளும் சாதனைகளே இல்லை என்பதால் மாநில தேர்தல் போல அம்மையாரின் ஆட்சி குறைப்பாடுகளை மட்டுமே சொல்லி வாக்கு கேட்கும் பரிதாப நிலை.

# சகோதர சண்டை, எனவே கட்சியினரில்  சில பிரிவுகள் உருவாகி நாம் ஏன் வேலை செய்ய வேண்டும் என்ற மன நிலை இருக்கு.

# பல மாவட்டங்களில்முன்னால் அமைச்சர்களை வேட்பாளர்களின் மேம்படி செலவினை கவனிக்க சொல்லவே ,அவர்கள் நாம ஏன் செலவு செய்து இன்னொருத்தனை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என "கஜானாவை" தொறக்கவேயில்லை, இதனால் வார்டு அளவில் கிடைக்க வேண்டிய தேர்தல் கவனிப்புகள் " இல்லாமல் உடன்ப்பிறப்புகள் பெரிதாக ஆர்வமில்லாமல் சுருண்டு விட்டார்கள்.

ஒரு வார்டுக்கு 10 பேருக்கு கூட தின செலவுக்கு காசு கொடுக்காம , நீப்பாரு அப்பறம் பார்த்துக்கலாம் என சொல்லவே ,பல கிளைச்செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் நைசாக நழுவிட்டார்கள் :-))

எனவே ஊழல் குற்ற சாட்டு, சகோதர சண்டை, ஒருங்கிணைப்பில் தொய்வு , என இம்முறை தேர்தல் களத்தில் திமுக பின் தங்கியே உள்ளது , அதிகப்பட்சமாக 7-9 இடங்களை கைப்பற்றலாம்.

குறைந்த பட்சம் -5.

கூட்டணியில் 1-2 இடங்கள் கிடைத்தால் அதிசயம்.

#பி.ஜேபி அலை எல்லாம் தமிழகத்தில் எடுபடவே இல்லை,

தமிழகத்தில் பிஜேபி அணியில் இருக்கும் கூட்டணிக்கட்சிகளே "நம்மளை தவிர கூட்டணியில்" யாருக்கும் அதிக இடங்கள் கிடைத்து விடக்கூடாது என உட்குத்து அரசியல் செய்வதால் ஒன்னும் பெரிதாக தேற வாய்ப்பில்லை அவ்வ்.

பாமக மற்றும் தேமுதிக   வினரின் ஓட்டுக்கண்டிப்பாக கூட்டணி என்ற முறையில் பரிமாறிக்கொள்ளப்படவேயில்லை.

அதிகப்பட்சம் 2 இடங்கள் கைப்பற்றலாம், ஆனால் அதுவே நிச்சயமில்லை.

# தமிழகத்தினை பொறுத்த வரையில் இத்தேர்தல் இரு பெரும் திராவிடக்கழகங்களின் நேருக்கு நேர் மோதல் , யாருக்கு உண்மையான செல்வாக்கு இருக்கு என இன்று மாலைக்குள் தெரிந்து விடும்!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் நம்பகமானதா?

# மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் " நம்பகமானது" அதில் திரிசமன் செய்யவே முடியாது என்கிறார்கள் ,ஆனால் மிக எளிதாக செய்யலாம் என நினைக்கிறேன் ,கீழ்கண்ட முறை எனது  அவதானிப்பே ,பிழை இருக்கலாம்.

ஒரு சுவிட்ச் போர்டில் அருகே மின் விளக்கு ,மின் விசிறி என இரு சுவிட்சுகள் உள்ளது , ஒன்றினை இயக்கினால் விளக்கு எரியும், இன்னொன்று மின் விசிறி என இருக்கு

நாமும் அப்படியே இயக்கி பழகிவிடுகிறோம், ஆனால் அதன் உள் இருக்கும் இணைப்புகளை மாற்றினாலே , மின் விளக்கு சுவிட்சை போட்டால் மின் விசிறி இயங்கும் படி செய்யலாமே?

காண்க படம்.





இதே போல மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் ,வாக்களர்கள் பெயர்கள் அகரவரிசையில் இருக்கும் எனவே ஒருவரின் பித்தானின் இணைப்பினை , மின்னணு வாக்கு எந்திரத்தின் ஐசி உடன் இணைக்கும் சர்க்கியுட்டில் மட்டும் சால்டரிங் செய்து மாற்றி விடலாமே. நமது மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் ஐ.சி தான் "கை வைக்க முடியாத "read only" வகை, எனவே அதற்குள் செல்லும் இணைப்பில் எந்த பட்டனை மாற்றி இணைத்தாலும் கண்டுக்கொள்ளாது அவ்வ்!


"schematic diagram for EVM"

(சரியான இணைப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம்.)

(குறுக்காக இணைக்கப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு எந்திரம்)


தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள EVM இல் ஐசி மற்றும் நினைவகம் மட்டுமே ஒரு முறை புரோகிராம் செய்த பின் "மாற்றம் செய்ய இயலாத வகையில் , "READ ONLY" ஆக உள்ளது, எனவே ஐ.சிக்கு உள்ளிடு செலுத்தும் ,பித்தான்களினை இரண்டாவது படத்தில் போல மாற்றி இணைத்துவிடலாம், ஆனால் அகர வரிசைப்படி வேட்பாளர்கள் பெயர் ஒன்றிலிருந்து துவங்கும், இதனால் முதல் பித்தானுக்கு நேராக உள்ள வேட்பாளருக்கு அழுத்தினால், அதன் எண்ணிக்கை "ஐசி" இல் இரண்டாவது "நினைவக ஒதுக்கீட்டில்" சேமிப்பாகும். இதனை வாக்களிப்பவர் உணர இயலாது,அவர் அழுத்திய பித்தானுக்கு நேராக "விளக்கு எரிவதை கண்டு வாக்குப்பதிவானது என "திருப்திப்பட்டுக்கொள்ள" மட்டுமே முடியும்.

வாக்கு பதிவு எந்திரத்தில் ,வேட்பாளர் பெயருடன் இணைந்த பித்தான்கள், அதற்கு அருகில் விளக்கு என இருக்கும் அமைப்பு "பேலட் யூனிட்"  ஆகும் , அதில் எந்த வரிசை பித்தானை அழுத்தினோம் என காட்டாது, பித்தானை அழுத்தியதும் விளக்கு மட்டுமே எரியும்.
(பேலட் யூனிட் -வரிசை எண் காட்டாது)

கண்ட்ரோல் யூனிட் என ஒன்று தேர்தல் அலுவலரின்  மேசையில் இருக்கும் அதில் தான் வரிசை எண் ,மற்றும் அதற்கு பதிவான வாக்குகளை காட்டும், எனவே பேலட் யூனிட்டில் , இரண்டு பித்தான்களை மாற்றி இணைப்புக்கொடுத்தாலும் , அதற்கான விளக்கு எரியும் என்பதால் ,அச்சின்னத்திற்கு வாக்கு அளித்ததாக தெரியும் ,ஆனால் வாக்குகள் பதிவாவது வரிசை எண்ப்படி என்பதால் , அதனை சரிப்பார்க்க வாக்களரால் முடியாது.

(கண்ட்ரோல் யூனிட்- வரிசை எண் ,பதிவான வாக்கினைக்காட்டும்)


தேர்தல் அலுவலரும் ஏதோ ஒரு வரிசை எண்ணில் வாக்குப்பதிவானதை மட்டுமே உறுதி செய்துக்கொள்வார், வரிசைப்படி இந்த சின்னம் இருக்கு அதில் தான் பதிவானது என்பது அவருக்கு மட்டுமே தெரியும், ஆனால் பித்தான்கள் மாற்றி இணைக்கப்பட்டு ஒன்றை அழுத்தி அது மற்றொன்றில் வாக்குப்பதிவு செய்துள்ளதை அவரும் அறிய இயலாது.

எனவே ஒரு தொகுதியில் "A" கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது எனில் அங்கு வலுவிழந்த இன்னொரு கட்சி "B" க்கு வாக்கு விழுமாறு செய்ய  இரண்டையும் மாற்றி இணைத்தாலே போதும், B இன் வாக்குகள் "A"  க்கு போகும் , "A"  வாக்குகள்  B க்கு போகும் , ஏதேனும் ஒருக்கட்சிக்கு வாக்குகளே விழாமல் போனால் தான் சந்தேகம் வரும் ஆனால் ஒரு குறைந்த பட்ச வாக்குகள் பதிவாகும் போது சந்தேகமே உருவாகாது. இப்படி மாற்றி இணைக்க , பேலட் யூனிட்டை மட்டுமே திறந்தால் போதும் ,ஐ.சி யூனிட்டில் கையே வைக்க வேண்டாம், இதனை சாதாரணமாக " செல் போன்" பழுதுப்பார்ப்பவர்களை வைத்து சால்டரிங் அயர்ன் மூலம் , பித்தான்களின் சர்க்கியூட் போர்டில் எளிதில் செய்ய இயலும்

வாக்கு எண்ணும் போதும் கண்ட்ரோலில் யூனிட்டில் பதிவான வாக்குகள் வரிசைப்படியே  பிரித்து எண்ணப்படும், அப்பொழுது மாற்றிப்பதிவானதையும் கண்டுப்பிடிக்க இயலாது.

இது எனது சந்தேகம் மட்டுமே, இப்படி செய்ய ஒரு சாத்தியக்கூறுள்ளதாக கருதுகிறேன், இதற்கு  " தேர்தல் அலுவலர்களின்" ஒத்துழைப்பும் தேவை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக தான் காவலுடன் வைத்துள்ளார்கள், ஆனால் அவர்களும் அரசு ஊழியர்களே எனும் நிலையில் ஆளும் அதிகாரம் படைத்தவர்கள் நினைத்தால் 'தில்லு முல்லு" செய்யலாம் என்பதை மறுக்க இயலாது!

EVM= Electronically Void Machine!
-----------

பின் குறிப்பு:

# இன்னும் சில அலசல்கள் ,படங்கள் பின்னர் இணைக்கப்படும்.

# தகவல் மற்றும் படங்கள் உதவி,

கூகிள், தேர்தல் ஆணைய இணைய தளம், தி இந்து மற்றும் விக்கி ,நன்றி!
--------------